பேச்சு:இராஜஹிய விக்கிரமய

திரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் இராஜஹிய விக்கிரமய எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

silent film என்பதற்கு “ஊமைப் படம்” என்று எழுதலாமா? தியடோர் பாஸ்கரன் “சலனப் படம்” என்று அவரது நூல்களில் மொழி பெயர்த்துள்ளார்.--சோடாபாட்டில்உரையாடுக 07:19, 19 சனவரி 2011 (UTC)Reply

சோடாபாட்டில் “ஊமைப் படம்”, “சலனப் படம்” என்ற இருவார்த்தைப் பதங்ககளும் பாவிக்கப்படுகின்றன. இதில் மிகவும் சரியானது எது என என்னால் தீர்மானிக்க முடியவில்லை --P.M.Puniyameen 07:30, 19 சனவரி 2011 (UTC)Reply
எனக்கும் குழப்பமாக உள்ளது. இந்தப் படங்களில் பின்னணி இசை உண்டா? உண்டெனில் ”ஊமை” என்பதே சரி. (ஊமை என்பது வார்த்தை/மொழியற்ற என்று பொருள் கொள்வோமெனில்). சலனம் என்பது எத்தகு ஓசையும் இல்லாது என்று பொருளாகி விடுகிறது. பழைய ஆங்கில silent film களில் (சார்லி சாப்ளின் படங்கள் போல) பின்னணி இசை கேட்டுள்ளேன்.இந்திய/இலங்கைப் படங்களில் உள்ளதா என்று தேடிப் பார்க்க வேண்டும்--சோடாபாட்டில்உரையாடுக 07:37, 19 சனவரி 2011 (UTC)Reply

ஊமைப் படம் என்று தான் பேச்சு புழக்கத்தில் உள்ளது. எனது அப்பரின் காலத்தவர் முதல் அப்படித்தான் அழைக்கின்றனர்.--HK Arun 07:42, 19 சனவரி 2011 (UTC)Reply

தேடிப் பார்ப்போம். உறுதிப்படுத்திய பின்பு மாற்றிவிடுவோம் --P.M.Puniyameen 07:51, 19 சனவரி 2011 (UTC)Reply
ஊமைப்படம் என்பது வழக்கில் இருப்பினும் அது ஊமைகளாக உள்ள கதாபாத்திரங்கள் நடித்தப் படம் என்று பொருள் தரலாம்.மௌனப்படம் என்பது சரியாக இருக்குமா எனவும் பார்க்கலாம்.--மணியன் 07:58, 19 சனவரி 2011 (UTC)Reply

மனிதரின் பேச முடியாத தன்மையையே ஊமை என அழைக்கப்படுகிறது. பேச முடியாதவனை ""ஊமையர்" அல்லது "ஊமையன்" என்று அழைக்கப்படுகிறது. அவ்வாறே சினிமா துறையும் பேச முடியாத நிலையில் இருந்தக் காலத்து படங்களையே ஊமைப்படம் என்று அழைக்கப்பட்டது. மௌனம் என்பது பேச முடிந்தும் பேசாத நிலையை வெளிப்படுத்துவது. இரண்டு சொல்லாடல்களுக்கும் இடையில் பாரிய வேறுப்பாடு உண்டு.

  • ஊமை = பேசமுடியாதத் தன்மை
  • மௌனம் = பேச முடிந்தும் பேசாமல் (அமைதியாக) இருக்கும் நிலை --HK Arun 08:51, 19 சனவரி 2011 (UTC)Reply
”பேச முடியாத நிலையில் இருந்தக் காலத்து படங்களையே ஊமைப்படம் என்று அழைக்கப்பட்டது” பொதுவாக இது சரியெனினும், ஒலிப்பதிவு தொழில்நுட்பம் பரவி பேசும் படங்கள் வந்த பின்னரும் பல பேசா படங்கள் எடுக்கப்பட்டன - ஒலிப்பதிவுக்கு செலவு அதிகம் என்பதாலும், திரையரங்குகளில் ஒலிக்கருவிகள் பொருத்த ஏற்பட்ட தாமதத்தாலும். (1935 வரை இந்தியாவில் ஊமைப்படங்கள் எடுக்கப்பட்டன). மேலும் 1980களில் ”பேசும் படம்” என்ற தலைபில் கமல் ஹாசன் ஒரு ஊமைப்படத்தில் நடித்துள்ளார்.--சோடாபாட்டில்உரையாடுக 09:17, 19 சனவரி 2011 (UTC)Reply
Return to "இராஜஹிய விக்கிரமய" page.