போய்த்தா என்று அழைக்கப்படும் பெரிய அளவிலான கப்பல்கள், பண்டைய கலிங்க நாட்டில் உருவாக்கப்பட்டிருந்தன.[1] அன்றைய கலிங்க நாட்டின் பகுதிகளாக இருந்த ஒடிசாவும், மேற்கு வங்காளம். ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளும் இருந்தன. அந்த நாட்டின் கடற்கரைப் பகுதிகளில் இத்தகைய பெரும் கப்பல்கள் பயன்படுத்தப்பட்டன. வணிகர்கள் இவற்றில் ஏறி தென்கிழக்காசியா வரை பயணித்தனர்.[2][3]

கட்டுமானம் தொகு

 
பழங்காலத்து போய்த்தா கப்பல்

இந்த கப்பல்களை கட்டுவதற்கான விதிகளும், முறையும் யுக்திகல்பதரு என்ற சமசுகிருதம் நூலில் எழுதப்பட்டிருந்தன. மரங்களை பயன்படுத்தி போஜராஜர் பல கப்பல்களை கட்டியதாக மாதளாபாஞ்சி குறிப்பிடுகிறது.[4] சிலிகா ஏரிக்கு அருகில் உடைந்த மரத்துண்டுகளும், உடைந்த கருவிகளும் கிடைத்துள்ளன. இவற்றில் இருந்து கோளாபாய் என்ற இடம் கப்பல் கட்டும் மையமாக செயல்பட்டதை அறிய முடிகிறது.[1]

பாலி யாத்திரை தொகு

இந்தோனேசியாவின் பாலிக்கு கடற்பயணம் மேற்கொண்ட கலிங்கத்து வணிகர்களை நினைவுகூரும் பண்டிகையே பாலி யாத்திரை. இந்நாளில் ஒரிய மக்களும், அவர்தம் குழந்தைகளும் மரம், பேப்பர் உள்ளிட்டவற்றில் செய்த பொம்மைக் கப்பல்களை செய்து நீரில் விடுவர்.[5] இந்த பொம்மை கப்பல்களில் விளக்கு ஏற்றப்பட்டிருக்கும்.

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 Sushanta Ku. Patra & Dr. Benudhar Patra. "Archaeology and the maritime history of ancient Odisha" (PDF). OHRJ, Vol. XLVII, No. 2. பார்க்கப்பட்ட நாள் 2010-11-16.
  2. Kandarpa Patel. "Maritime relation of Kalinga with Sri Lanka" (PDF). OHRJ, Vol. XLVII, No. 2. பார்க்கப்பட்ட நாள் 2010-11-17.
  3. Orissa Review. Home Department, Government of Orissa. 1987. http://books.google.com/books?id=MwlDAAAAYAAJ. 
  4. Nirakar Mahalik (September 2004). "Maritime Trade of Ancient Orissa" (PDF). Orissa Review. பார்க்கப்பட்ட நாள் 2010-11-17.
  5. "Bali Yatra". Odisha Tourism. Archived from the original on 2011-07-21. பார்க்கப்பட்ட நாள் 2010-11-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=போய்த்தா&oldid=3565795" இலிருந்து மீள்விக்கப்பட்டது