மதச்சார்பற்ற ஜனதா கட்சி
மதச்சார்பற்ற ஜனதா கட்சி (Janata Party (Secular) சூலை 1979-இல் ஜனதா கட்சியிலிருந்து வெளியேறிய ராஜ் நாராயணன் எனும் இந்திய அரசியல்வாதியால் துவக்கப்பட்டது. இந்திரா காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன், 16 சூலை 1979-இல் மதச்சார்பற்ற ஜனதா கட்சியின் அகில இந்தியத் தலைவரான சரண் சிங், இந்திய நடுவண் அரசின் பிரதம அமைச்சரானார். ஆனால் 20 ஆகஸ்டு 1979-இல் இந்திரா காங்கிரசு கட்சி தனது ஆதரவை சரண்சிங்கிற்கு விலக்கிக் கொண்டதால், சரண் சிங் பிரதமர் பதவியைத் துறந்தார்.
மதச்சார்பற்ற ஜனதா கட்சி | |
---|---|
நிறுவனர் | ராஜ் நாராயணன் |
தொடக்கம் | சூலை, 1979 |
இந்தியா அரசியல் |
சரண் சிங், மதச்சார்பற்ற ஜனதா கட்சியின் பெயரை, லோக் தளம் என பெயரை மாற்றினாலும், ஏழாவது 1980 இந்தியப் பொதுத் தேர்தலில்.[1] மதச்சார்பற்ற ஜனதா கட்சியின் பெயரால் தன் கட்சியின் வேட்பாளர்களை நிறுத்தி, மொத்த வாக்குக்களில் 9.39% வாக்குகள் பெற்று, 41 மக்களவைத் தொகுதிகளைக் கைப்பற்றினார்.[2]
இதனையும் காண்க தொகு
- ஜனதா கட்சி
- லோக் தளம்
மேற்கோள்கள் தொகு
- ↑ Jaffrelot, Christophe (2003). India's Silent Revolution: The Rise of The Low Castes in North Indian Politics. Delhi: Orient Longman. பக். 327. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:81-7824-080-7. https://books.google.com/books?id=HWms_1WzF1sC&pg=PA327&lpg=PA327&dq=Lok+Dal+%2B+1980&source=bl&ots=mijB7FnCPA&sig=KFGH7twVYxx5_jctX0kypyOedFk&hl=en&ei=M2nES9_HFpO8rAef3-mVDw&sa=X&oi=book_result&ct=result&resnum=9&ved=0CCoQ6AEwCA#v=onepage&q=Lok%20Dal%20%2B%201980&f=false.
- ↑ Lua error in Module:Citation/CS1 at line 2627: attempt to call field 'has_accept_as_written' (a nil value).