மருதங்கோடு

மருதங்கோடு என்பது கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு வட்டம் பாகோடு வருவாய் கிராமத்தின்[1] பகுதியாகும். குழித்துறை-ஆலங்சோலை சாலையில், ஒரு கிராமச்சாலை இச்சிற்றூரை இணைக்கிறது. இங்குள்ள புனித அந்தோணியார் கிருத்தவ திருக்கோவில் மிகவும் புகழ்பெற்றது. ஒவ்வொரு செவ்வாய் கிழமையும் ஏராளமான மக்கள் இங்கு வழிபட வருகின்றனர். இங்குள்ள சிவன் கோவில் சுமார் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது[சான்று தேவை]. மக்களின் முக்கிய தொழில் நெசவு, பாய்முடைதல், சோப்புத் தயாரித்தல் ஆகும். ஓர் ஏழைகள் இல்லமும் அனாதை இல்லமும் இங்கு இயங்கி வருகின்றன.

மேற்கோள்கள் தொகு

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-05. பார்க்கப்பட்ட நாள் 2013-10-28.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மருதங்கோடு&oldid=3566646" இலிருந்து மீள்விக்கப்பட்டது