மவுண்ட்பேட்டன் பிரபு
லூயி பிரான்சிஸ் ஆல்பேர்ட் விக்டர் நிக்கலாஸ் ஜார்ஜ் மவுண்ட்பேட்டன் (Louis Francis Albert Victor Nicholas George Mountbatten, ஜூன் 25, 1900 - ஆகஸ்ட் 27, 1979), பர்மாவின் முதலாவது கோமகன் (Earl) மவுண்ட்பேட்டன் என்று அழைக்கப்பட்டவர். இவர் ஆங்கிலக் கடற்படைத் தளபதியாக இருந்தவர். பிரித்தானிய இந்தியாவின் கடைசி அரசுப் பிரதிநிதியாகவும் (Viceroy) விடுதலை பெற்ற இந்தியாவின் முதலாவது ஆளுநராகவும் (Governor-General) இருந்தவர். மவுண்ட்பேட்டன் பிரபு அயர்லாந்தில் தனது விடுமுறையைக் கழிக்கும் போது ஐரிஷ் குடியரசு இராணுவத்தினர் அவர் பயணம் செய்த படகில் குண்டை வெடிக்கவைத்துக் கொன்றனர். இவருடன் மேலும் மூவர் இக்குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டனர்.[1]
பர்மாவின் கோமகன் மவுண்ட்பேட்டன் | |
---|---|
இந்தியாவின் ஆளுநர் | |
பதவியில் மார்ச் 24, 1947 – ஆகஸ்ட் 15 1947 | |
முன்னையவர் | ஆர்ச்சிபால்ட் வேவல் |
பின்னவர் | இராசகோபாலாச்சாரி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ஜூன் 25, 1900 இங்கிலாந்து |
இறப்பு | ஆகஸ்ட் 27, 1979 அயர்லாந்து |
துணைவர் | எட்வினா மவுண்ட்பேட்டன் |
தொழில் | ஆங்கிலக் கடற்படைத் தளபதி |
சமயம் | ஆங்கிலிக்கன் |