மா. எ. வாட்சு

இந்திய வழக்கறிஞர் மற்றும் ஆட்சிப் பணியாளர்

மாரிசு எமிக்டியசு வாட்சு (Maurice Emygdius Watts) (1878 சூன் 11 - 1933 பிப்ரவரி 22) இவர் ஓர் இந்திய வழக்கறிஞரும், அரசு ஊழியரும் மற்றும் நிர்வாகியுமாவார். இவர் 1925 முதல் 1929 வரை திருவிதாங்கூரின் திவானாகப் பணியாற்றினார்.

மாரிசு எமிக்டியசு வாட்சு
திருவிதங்கூரின் திவான் (பிரதம அமைச்சர்)
பதவியில்
1925–1929
ஆட்சியாளர்சேது லட்சுமி பாயி ( அரசப் பிரதிநிதி சித்திரை நிருநாள்
முன்னையவர்டி. இராகவய்யா
பின்னவர்வி. எஸ். சுப்ரமணிய ராவ்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1878-06-18)18 சூன் 1878
திருவிதாங்கூர்
இறப்பு22 பெப்ரவரி 1933(1933-02-22) (அகவை 54)
இலண்டன்

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் கல்வி தொகு

திருவிதாங்கூர் அரசாங்கத்தின் தலைமைச் செயலாளரான பிராங்க் வாட்சு என்பவருக்கு 1878 சூன் 11 அன்று வாட்சு பிறந்தார். [1] இவர் சென்னையில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்றார். பின்னர், சட்டத்தில் பட்டம் பெற்ற பிறகு, 1901 இல் சென்னை மாகாண அரசுச் சேவையில் நுழைந்தார். [2]

இறப்பு தொகு

வாட்சு 1933 பிப்ரவரி 22 அன்று இலண்டனில் தனது 54 வயதில் இறந்தார். [2] திருவனந்தபுரம் நகரத்தின் நந்தன்கோடு புறநகரில் உள்ள ஒரு பகுதிக்கு வாட்சு குடும்பத்தின் நினைவாக பெயரிடப்பட்டது.

குடும்பம் தொகு

வாட்சின் சகோதரி டோரதியா என்ரியத் வாட்சு திருவாங்கூர் அரச குடும்பத்தின் இளவரசிகளுக்கு ஆசிரியராக இருந்தார். [3] 1947 இல் இந்தியாவின் சுதந்திரத்திற்குப் பிறகு, நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரியில் குடியேறினார். அங்கு அவர் தனது வாழ்க்கையின் கடைசி நாட்களைக் கழித்தார்.

குறிப்புகள் தொகு

  1. R. Venkoba Rao (1928). Ministers in Indian states, Volume 1. Wednesday Review Press. பக். 30. 
  2. 2.0 2.1 The Law times, Volume 175. 1933. பக். 180. 
  3. Narayani Harigovindan. "Watt's the matter". 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மா._எ._வாட்சு&oldid=3712657" இலிருந்து மீள்விக்கப்பட்டது