முஞ்சிறை மகாதேவர் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

முஞ்சிறை மகாதேவர் கோயில் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டம், முஞ்சிறை என்னும் ஊரில் அமைந்துள்ள கிராமக் கோயிலாகும்.[1]

அருள்மிகு மகாதேவர் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:கன்னியாகுமரி
அமைவிடம்:திருமலை, முஞ்சிறை, கல்குளம் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:கிள்ளியூர்
மக்களவைத் தொகுதி:நாகர்கோயில்
கோயில் தகவல்
மூலவர்:மகாதேவர், ஸ்ரீ கிருஷ்ணசுவாமி
சிறப்புத் திருவிழாக்கள்:திருவிழா
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் மகாதேவர், ஸ்ரீ கிருஷ்ணசுவாமி சன்னதிகளும், கணபதி, சாஸ்தா, நாகர் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை நடக்கின்றது. பங்குனி மாதம் திருவிழா முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.மாசி மாதம் சிவரத்திரியின் போது இக்கோவிலிலிருந்து புறப்பட்டு பக்தர்கள் ஓட்டமாக 110 கி.மீ.தொலைவு ஓட்டமும் நடையுமாக பன்னிரண்டு சிவாலயங்களுக்கு கைகளில் பனையோலை விசிறியும் திருநீறு பையுடனும் கோபாலா கோவிந்தா என்று கூவி அழைத்துக் கொண்டு நட்டாலத்திலுள்ள சங்கரநாராயணர் கோவிலில் தங்கள் ஓட்டத்தினை முடித்து சிவராத்திரியினைக் கொண்டாடுவார்கள். இது குமரிமாவட்டத்தில் மட்டுமே காணப்படும் ஒரு விழாவாகும்.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)