மேனகா (1935 திரைப்படம்)
மேனகா 1935 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இதுவே தமிழில் வெளிவந்த முதலாவது சமூகத் திரைப்படமாகும்.[1] வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் எழுதிய மேனகா என்ற துப்பறியும் புதினத்தைத் தழுவி மேடையேற்றப்பட்ட டி.கே.எஸ்.சகோதரர்களின் மேனகா என்ற நாடகத்தையே திரைப்படமாக எடுத்திருந்தார்கள். ராஜா சாண்டோ இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் தி. க. சண்முகம், தி. க. பகவதி மற்றும் பலரும் நடித்திருந்தனர். என். எஸ். கிருஷ்ணன் இத்திரைப்படத்தில் அறிமுகமானார்.[2]
மேனகா | |
---|---|
இயக்கம் | பி. கே. ராஜா சாண்டோ |
தயாரிப்பு | ஸ்ரீ சண்முகானந்தா டாக்கீஸ் கோ. |
கதை | கதை வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் |
இசை | டி. கே. முத்துசாமி |
நடிப்பு | தி. க. சண்முகம் தி. க. பகவதி தி. க. சங்கரன் தி. க. முத்துசாமி என். எஸ். கிருஷ்ணன் மொஹ்தீன் எம். எஸ். விஜயால் கே. டி. ருக்மணி பிரெண்ட் ராமசாமி |
வெளியீடு | ஏப்ரல் 6, 1935 |
நீளம் | 17000 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள் தொகு
- ↑ "தமிழ்த் திரையில் முதல் நாவல்". பதிப்புத் தொழில் உலகம். சூலை 2004.
- ↑ ராண்டார் கை (4 சனவரி 2008). "Menaka 1935". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-cinemaplus/article3022401.ece. பார்த்த நாள்: 11 நவம்பர் 2016.