ராஜேந்திர குமாரி பாஜ்பாயி

இந்திய அரசியல்வாதி

ராஜேந்திர குமாரி பாஜ்பாயி (Rajendra Kumari Bajpai) (பெப்ரவரி 8, 1925 - ஜூலை 17, 1999) ஒரு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் அரசியல்வாதியாக இருந்தார், இவர், முன்னாள் இந்திய மந்திரியாகவும் மற்றும் பாண்டிச்சேரியின் முன்னாள் லெப்டினண்ட் கவர்னராகவும் பணியாற்றியுள்ளார். இவர், 1980, 1984 மற்றும் 1989 ஆகிய ஆண்டுகளில் சீதாபூரில் தொகுதியிலிருந்து லோக் சபாவுக்கு மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டார், மேலும், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நெருங்கிய நண்பராகவும் இருந்தார்.

ராஜேந்திர குமாரி பாஜ்பாயி
புதுச்சேரி துணைநிலை ஆளுநர்களின் பட்டியல்
பதவியில்
2 மே 1995 – 22 ஏப்ரல் 1998
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புterm1
(1925-02-08)8 பெப்ரவரி 1925
லாலுசக், பாகல்பூர் மாவட்டம், பீகார்.
இறப்பு17 சூன் 1999(1999-06-17) (அகவை 74)
அலகாபாத், உத்தர பிரதேசம்
இளைப்பாறுமிடம்term1
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
பெற்றோர்
  • term1

ஆரம்ப வாழ்க்கை மற்றும் குடும்பம் தொகு

இவர் பிப்ரவரி 8, 1925 பீகார் மாநிலம், பாகல்பூர் மாவட்டத்திலுள்ள லாலுசக் என்ற இடத்தில் பண்டிதர் எஸ். கே. மிஸ்ராவிற்குப் பிறந்தார். இவர், ரவி ஷங்கர் சுக்லாவின் பேத்தி மற்றும் ஷியாமா சரண் சுக்லாவின் மருமகள் ஆவார்.[1] இவர், பள்ளிக்கல்வியினை முடித்த பிறகு, எம். ஏ., மற்றும் பி.ஹச்டி. பட்டங்களை அலகாபாத் பல்கலைக்கழகத்தில் பெற்றார்.[2]

இவர், 1947 ஆம் ஆண்டில் ஆசிரியராகப் பணிபுரிந்த டி.என். பாஜ்பாயை திருமணம் செய்துகொண்டார். டி.என். பாஜ்பாயி 1942 இல் "வெள்ளையனே வெளியேறு" இயக்கத்தில் பங்கு பெற்றவர். இத் தம்பதியருக்கு ஒரு மகன் அசோக் பாஜ்பாய் மற்றும் ஒரு மகள் திருமதி. மனீஷா திவேதி [2] ஆகியோர் இருந்தனர்.

தொழில் தொகு

இவர், 1962 முதல் 77 வரை உத்தரப் பிரதேச சட்டப் பேரவை உறுப்பினராக இருந்தார்; உத்தரப் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும் மற்றும் முன்னாள் பிரதம மந்திரி இந்திரா காந்தியின் நெருங்கிய நண்பராகவும் இருந்தார்.[3] இவர் உத்தரப் பிரதேசத்தின் அமைச்சரவையில் 1970முதல் 1977வரை பல துறைகளில் அமைச்சராக இருந்தார்.[2] பின்னர், அவர் 1980, 1984 மற்றும் 1989 ஆம் ஆண்டுகளில் சீதாபூரில் இருந்து தொடர்ந்து மூன்று முறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4] இவர், சமூக நல அமைச்சராக 1984முதல் 1986 வரை பணியாற்றினார். 1986-87இல், மாநில அமைச்சராகவும், தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சராகவும் பணிபுரிந்தார். 1987முதல் 1989வரை சார்பு பொறுப்பு கொண்ட மாநில அமைச்சராக ராஜீவ் காந்தி பிரதமராக இருந்த போது பணியாற்றியுள்ளார்.[5] மேலும், இவர் 1995 ஆம் ஆண்டு மே 2 முதல் 1998 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 ஆம் தேதி வரை புதுச்சேரியின் துணை கவர்னராக நியமிக்கப்பட்டார்.[6]

குறிப்புகள் தொகு

  1. "Rajendra Kumari Bajpai". S9 Biography. Archived from the original on 5 November 2013. பார்க்கப்பட்ட நாள் 22 December 2012.
  2. 2.0 2.1 2.2 "9th Lok Sabha: Members Bioprofile". Lok Sabha Official website. Archived from the original on 2013-11-03. பார்க்கப்பட்ட நாள் 2019-03-19.
  3. "It's family first for UP parties in poll battle". India Today. 14 January 2012.
  4. "Rajendra Kumari Bajpai is dead". Rediff News. 17 July 1999. http://www.rediff.co.in/news/1999/jul/17baj.htm. 
  5. "Worldwide Guide to Women in Leadership". guide2womenleaders.
  6. பாண்டிச்சேரி சட்டமன்றம்