ராம் பரன் யாதவ்

மருத்துவர் ராம் பரன் யாதவ் (Dr. Ram Baran Yadav; நேபாள மொழி: रामवरण यादव) (பதவிக் காலம்: 2008–2015) நேபாளத்தின் முதலாவதும் தற்போதைய அதிபரும் ஆவார். இவர் நேப்பாளி காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஆவார்[1]. ஜுலை 21, 2008 இல் இடம்பெற்ற அதிபர் தேர்தலில் யாதவ் சட்டசபையின் 590 உறுப்பினர்களில் 308 உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று வெற்றி பெற்றார்[2].

ராம் பரன் யாதவ்
Ram Baran Yadav
रामवरण यादव
2008 இல் யாதவ்.
நேபாளத்தின் 1வது குடியரசுத் தலைவர்
பதவியில்
23 சூலை 2008 – 29 அக்டோபர் 2015
பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ராலா
பிரசந்தா
மாதவ் குமார் நேபாள்
சாலா நாத் கனால்
துணை குடியரசுத் தலைவர் பார்மானந்த் ஜா
முன்னவர் கிரிஜா பிரசாத் கொய்ராலா (தற்காலிகம்)
பின்வந்தவர் வித்யா தேவி பண்டாரி
தனிநபர் தகவல்
பிறப்பு 4 பெப்ரவரி 1948 (1948-02-04) (அகவை 75)
சப்பாகி, நேபாளம்
அரசியல் கட்சி நேப்பாளி காங்கிரஸ்
படித்த கல்வி நிறுவனங்கள் கல்கத்தா பல்கலைக்கழகம்
சமயம் இந்து

2008 இல் இடம்பெற்ற சட்டசபைக்கான தேர்தல்களில் யாதவ் தனுசா மாவட்டத்தில் போட்டியிட்டு 10,932 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார்[3]. 1999 இல் சுகாதார அமைச்சராகப் பணியாற்றியிருந்தார்[4][5]. இவர் ஒரு மருத்துவப் பட்டதாரி ஆவார்.

வெளிநாட்டுப் பயணம் தொகு

 
திருப்பதியில் இராம் பரன் யாதவ்

யாதவ், 2010இல் இந்தியாவில் ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி வெங்கடாசலபதி கோயிலுக்கும் சண்டிகருக்கும் சென்றார். சண்டிகரில் தான் படித்த முதுநிலை மருத்துவக் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தில் மருத்துவப் பட்டம் பெற்றார்.[6] மார்ச் 26, 2015 அன்று, சீன அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் சீனாவுக்கு உத்தியோகபூர்வ பயணமாகச் சென்றார்.

மேற்கோள்கள் தொகு

அரசியல் பதவிகள்
முன்னர்
கிரிஜா பிரசாத் கொய்ராலா
தற்காலிகம்
நேபாள குடியரசுத் தலைவர்
2008–2015
பின்னர்
வித்யா தேவி பண்டாரி


"https://ta.wikipedia.org/w/index.php?title=ராம்_பரன்_யாதவ்&oldid=3569593" இருந்து மீள்விக்கப்பட்டது