வஞ்சிநகரம் மாலையம்மள் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

வஞ்சிநகரம் வஞ்சியம்மன் ஆலயம் தமிழ்நாட்டில் மதுரை மாவட்டம், வஞ்சிநகரம் என்னும் ஊரில் அமைந்துள்ள அம்மன் கோயிலாகும்.[1]

அருள்மிகு வஞ்சியம்மன் திருக்கோயில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:மதுரை
அமைவிடம்:வஞ்சிநகரம், மேலூர் வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:மேலூர்
மக்களவைத் தொகுதி:மதுரை
கோயில் தகவல்
தாயார்:வஞ்சியம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:தை பொங்கல் விழா,மஞ்சுவிரட்டு,பங்குனி முளைப்பாரி திருவிழா.
வரலாறு
கட்டிய நாள்:பதிமூன்றாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பதிமூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் சிவாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. பங்குனி மாதம் முளைப்பாரி திருவிழா ஒரு வாரம் சிறப்பாகவும் தொடர்ச்சியாக வள்ளி திருமணம் நாடகமும் நடைபெறுகிறது.தமிழர் திருநாளாம் தைத் திங்கள் முதல் நாள் கிராம மக்களால் பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.மறு நாள் மாட்டுப் பொங்கலன்று கருப்புசாமி அருள் வந்து அரிவாள் மீது ஏறி நின்று அருள் வாக்கு சொல்லும் நிகழ்வு முடிந்த பின் மஞ்சுவிரட்டு(ஜல்லிக்கட்டு) நிகழ்ச்சி நடைபெறும்.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)