வன்னி நாடு என்பது வன்னியர்கள் என்ற பட்டதோடு பல குறுநில ஆட்சியாளர்கள் இலங்கையின் யாழ்ப்பாண அரசின் தெற்கு பகுதியை 12 ஆம் நூற்றாண்டு முதல் 17ஆம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்யப்பட்ட பகுதிகளாகும். இராசரட்டை அரசு சிதைவுற்றபின் பல வன்னி அரசுகள் எழுச்சி பெற்றது. இப்பகுதியை தமிழகத்தில் இருந்து வந்த வேளைக்காரப படைகளுக்கு நிலமானியங்களாக வழங்கப்பட்டு ஆளப்பட்டது. இப்பகுதி யாழ்ப்பாண அரசின் தெற்கு விரிவாகவே இருந்தது. வன்னி நாட்டின் ஆட்சியாளர்கள், யாழ்ப்பாண அரசுக்குக்கட்டுப்பட்டே இருந்தனர். 1621 ஆம் ஆண்டு போர்த்துக்கல் யாழ்ப்பாண அரசை வென்றது. இதன் பின் வன்னி நாடு போர்த்துக்கேய இலங்கைக்கு உட்பட்ட பகுதியாக மாறியது. போர்த்துக்கேய இலங்கை பகுதி டச்சுக்காரர்கள் மற்றும் ஆங்கிலேயர்கள் கட்டுப்பாட்டுக்கு வந்தது. இவர்களது ஆட்சிக்கு எதிராக வன்னி நாடு கடைசி மன்னர் பண்டார வன்னியன், கண்டி இராச்சியத்துடன் இணைந்து பலமாக எதிர்த்தார். டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் இராணுவ தலைமை அதிகாரி வான் டெரிபெர்கு பண்டார வன்னியரை தோற்கடித்து கொன்று வன்னி நாட்டை ஆங்கிலேயரிடம் ஒப்படைத்தார்.[3]. தற்போது இது வட மாகாணம், இலங்கை என வழங்கப்படுகிறது.[4]

வன்னி நாட்டு அரசு
வன்னி நாடு
12 ஆம் நூற்றாண்டு–1803[1]
இலங்கை 1520களில்
இலங்கை 1520களில்
பேசப்படும் மொழிகள்தமிழ்
சமயம்
சைவம்
அரசாங்கம்தலைமையுரிமை
வரலாறு 
• வன்னியர்களின் எழுச்சி
12 ஆம் நூற்றாண்டு
• வன்னியர் கலகம்
1782
• கடைசி வன்னிய ஆட்சியாளர் பண்டார வன்னியன்
31 ஆம் நாள் அக்டோபர் திங்கள் 1803 [2]
முந்தையது
பின்னையது
யாழ்ப்பாண அரசு
பிரித்தானிய இலங்கை

பரவல் தொகு

வன்னி நாடுக்கு வடக்கே யாழ்ப்பாண அரசும், தெற்கே கண்டி இராச்சியமும் கோட்டை அரசும், மேற்கு மற்றும் கிழக்கே இந்திய பெருங்கடலால் சூழப்பட்டது. நாட்டுக்கு தென்கிழக்கே திரிகோண மலை அமைந்துள்ளது. இலங்கையின் தற்போதைய மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்ட பகுதிகளை உள்ளடக்கிய பெருநிலப் பரப்பே வன்னி நாடாக இருந்தது. இது மேலும் புத்தளம், குருநாகல், திருகோணமலை, மட்டக்களப்பு,அனுராதபுரம், பொலன்ன்றுவை, ஊவா, வெள்ளசை, பாணமை ஆகிய மாவட்டங்களின் பல பகுதியையும் உள்ளடக்கியதாகும். பல வன்னிமைகள் தமிழ், சிங்கள, வேட்டுவ மொழி பேசுவோரும் ஆண்டு வந்தனர்.

 
யாழ்ப்பாண,வன்னி, கண்டி,கோட்டை அரசுகள்

வன்னியர் தொகு

இலங்கையின் இடைக்கால பகுதியில் வாழ்ந்த ஆட்சியாளர்கள் ஆவர். இலங்கைத் தமிழரின் வன்னிப் பகுதிகளில் வாழ்ந்தவர்கள் வன்னியர் என அழைக்கப்பட்டனர்.[5][6]

தோற்ற கோட்பாடுகள் தொகு

வன்னியர் தோற்ற கோட்பாடுகளைப்பற்றி பல கருத்துக்கள் நிலவி வருகிறது. அதில் ஒன்று தற்போதைய இந்தியாவின், தமிழ்நாட்டில்இருந்து வந்த மழவர்கள் என வன்னி் பூவத்த என்றொரு பழம் நூல் தெரிவிக்கின்றது.[6][7] இவர்கள் பாண்டிய மற்றும் சோழ மன்னர்களின் வழித்தோன்றல்கள். இதன் கவுரவ பட்டமாக வன்னியர் என வழங்கப்பட்டனர் என ஒரு கருத்து நிலவுகிறது. இவர்கள் பல குல மற்றும் இனக்குழுக்களின் வழிவந்தவர்கள் ஆவர்.[5][6][8][9] ஒரு சில இலங்கை வரலாறு ஆய்வாளர்கள் வனம் என்ற காடு பொருள்படுமாறு, காட்டுப்பகுதியில் ஆட்சி செய்பவர்கள் என்பதால் அவர்கள் வன்னியர் என வழங்கப்பட்டனர் என கூறுகின்றனர்.[6]

12 ஆம் நூற்றாண்டில் இடைக்காலச் சோழர்கள் எழுச்சி மற்றும் இராசரட்டை அரசு வீழ்ச்சினாலும் வடக்கே யாழ்ப்பாண அரசும் தெற்கே கண்டி அரசும், கோட்டை அரசும் உருவாகியது. பல அரசர்கள் மற்றும் ஆட்சியாளர்கள் வன்னியர் என்ற பட்ட பெயர்களைக் கொண்டு வன்னி நாட்டை யாழ்ப்பாண அரசு காலகட்டத்தில் ஆட்சி செய்து வந்தனர். இவர்கள் அனைவரும் யாழ்ப்பாண அரசுக்கு கட்டுப்பட்டவர்களாகவும், உள்நாட்டு மக்களின் தேவையறிந்து சுயமாக ஆட்சி செய்து வந்தவர்கள் ஆவர். வன்னி நாடு யாழ்ப்பாண அரசுக்கு வரிகளாக பணம், தேன், தந்தங்கள், யானைகள் முதலியனவற்றை ஆண்டு தோறும் வழங்கி வந்தது.[6][10][7][11]

மேற்கோள்கள் தொகு

  1. "Grave stone of Pandara Vanniyan". www.canadamirror.com.
  2. "Grave stone of Pandara Vanniyan". www.canadamirror.com.
  3. Daya Somasundaram, Scarred Communities: Psychosocial Impact of Man-made and Natural Disasters on Sri Lankan Society, p.52
  4. Holt, John (2011-04-13) (in en). The Sri Lanka Reader: History, Culture, Politics. Duke University Press. பக். 85. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0822349825. https://books.google.no/books?id=Kj_aWm4DeFEC&pg=PA85&dq=vanni+nadu&hl=no&sa=X&ved=0ahUKEwiegoOih_bWAhXkQpoKHXwRD5QQ6AEIJzAA#v=onepage&q&f=false. 
  5. 5.0 5.1 McGilvray, Mukkuvar Vannimai: Tamil Caste and Matriclan Ideology in Batticaloa, Sri Lanka, p.34-97
  6. 6.0 6.1 6.2 6.3 6.4 Karthigesu, Sri Lankan Tamil Society and Politics, p.7-9
  7. 7.0 7.1 Gunasingam, Sri Lankan Tamil Nationalism, p.53
  8. McGilvray, Dennis B. (2008-05-07) (in en). Crucible of Conflict: Tamil and Muslim Society on the East Coast of Sri Lanka. Duke University Press. பக். 156. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0822341611. https://books.google.no/books?id=MTh4pixlifYC&pg=PA61&dq=vanniah&hl=no&sa=X&ved=0ahUKEwik6pCQvJjdAhXIDywKHegkCCYQ6AEIMTAB#v=onepage&q=vanniah&f=false. 
  9. Arasaratnam, Sinnappah (1996-01-01) (in en). Ceylon and the Dutch, 1600-1800: External Influences and Internal Change in Early Modern Sri Lanka. n Variorum. பக். 422. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780860785798. https://books.google.no/books?id=m2puAAAAMAAJ&q=vellalar+vanniyar+chieftain&dq=vellalar+vanniyar+chieftain&hl=no&sa=X&ved=0ahUKEwim-_n2vJjdAhVGh6YKHSTEA9QQ6AEILzAB. 
  10. Peebles, History of Sri Lanka, p.31-32
  11. "Vannimai". University Of Madras, Tamil Lexicon. Archived from the original on 2012-09-19. பார்க்கப்பட்ட நாள் 2007-12-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வன்னி_நாடு&oldid=3571068" இலிருந்து மீள்விக்கப்பட்டது