விக்கிப்பீடியா:இன்றைய சிறப்புப் படம்/செப்டம்பர் 30, 2015

பாய்மரம் என்பது பண்டையக் கால சிறிய கப்பல்களில் கட்டப்பட்டிருக்கும் ஒரு வகை பாய் அல்லது துணி ஆகும். இதன் மூலம் தான் பண்டைக் கால கடல் வாணிபத்தில் பயன்படுத்திய கப்பல்கள் காற்றின் மூலம் பயணம் செய்தன. பண்டைத் தமிழர் இந்தப் பாய்மரத்தைச் செலுத்துவதில் திறமை பெற்றிருந்தனர். படத்தில் மொசாம்பிக் நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் தங்கள் பாய்மரப் படகைக் கொண்டு மீன்பிடிப்பது காட்டப்பட்டுள்ளது.

படம்: ஸ்டீவ் எவான்சு
தொகுப்பு · சிறப்புப் படங்கள்