அகிம்சா தலம்
அகிம்சா தலம் (Ahinsa Sthal), இந்தியாவின் தலைநகரான தில்லியின் மெஹ்ரௌலி பகுதியில் அமைந்த சமணக் கோயில் ஆகும். சமணத்தின் முக்கிய நெறிகளில் ஒன்றான அகிம்சை என்ற குணத்தை வலியுறுத்த இக்கோயில் 1980 கட்டப்பட்டது. அகிம்சை தலத்தின் மூலவர் மகாவீரர் ஆவார். [1]
அகிம்சா தலம் | |
---|---|
![]() அகிம்சா தலத்தில் மகாவீரர் சிலை | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | மெஹ்ரௌலி, தில்லி, இந்தியா |
புவியியல் ஆள்கூறுகள் | 28°31′13″N 77°11′24″E / 28.52028°N 77.19000°E |
சமயம் | சமணம் |
சிலை
தொகுஅகிம்சா தலத்தில் 30 டன் எடையும், 13 அடி 6 அங்குலம் உயரமும் கொண்ட மகாவீரர் சிலை ஒரே கருங்கல்லில் செதுக்கப்பட்டதாகும். மகாவீரர் சிலையைத் தாங்கும், தாமரை வடிவ மேடை 17 டன் எடையும், 2 அடி 8 அங்குலம் உயரமும் கொண்டது.
படக்காட்சியகம்
தொகு
|
இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Kurt Titze; Klaus Bruhn (1998). Jainism: A Pictorial Guide to the Religion of Non-violence. Motilal Banarsidass Publisher. p. 266. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 8120815343. பார்க்கப்பட்ட நாள் 24 October 2015.