அனுராதா பட்டாச்சார்யா

இந்திய கவிஞர் மற்றும் புனைகதை ஆசிரியர்

அனுராதா பட்டாச்சார்யா (Anuradha Bhattacharyya) (பிறப்பு: 1975 திசம்பர் 6) இவர் இந்திய கவிதை மற்றும் புனைகதை எழுத்தாளர் ஆவார். இவர் ஆங்கிலத்தில் எழுதுகிறார் மற்றும் பல புத்தகங்களையும் எழுதியுள்ளார். [2] இவரது நூலான "ஒன் வேர்ட்" என்பது 2016ஆம் ஆண்டு சண்டிகர் சாகித்ய அகாடமி சிறந்த புத்தகத்திற்கான விருதினை வழங்கியது. [3] [4] தற்போது இவர் சண்டிகரின் பிரிவு -11, முதுகலை அரசு கல்லூரியில் ஆங்கில இணை பேராசிரியராக உள்ளார்.

அனுராதா பட்டாச்சார்யா
விசயவாடா, கவிதை பிரிசம் விழாவில் கவிஞர் 2017 நவம்பர் 11
விசயவாடா, கவிதை பிரிசம் விழாவில் கவிஞர் 2017 நவம்பர் 11
பிறப்பு6 திசம்பர் 1975 (1975-12-06) (அகவை 48)
கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா
தொழில்எழுத்தாளர், கவிஞர், கல்வியாளர்
தேசியம்இந்தியன்
கல்வி நிலையம்பனஸ்தாலி வித்யாபித், ஜாதவ்பூர் பல்கலைக்கழகம், இந்திய தொழில்நுட்பக் கழகம் கரக்பூர்
காலம்1998 -
கருப்பொருள்புனைகதை, கவிதை
குறிப்பிடத்தக்க படைப்புகள்ஒன் வோர்ல்ட், த ரோட் டேக்கன், லாப்டி
குறிப்பிடத்தக்க விருதுகள்சண்டிகர் சாகித்திய அகாதமி
துணைவர்அதுல் சிங்
பிள்ளைகள்அனுஷ்மிதா[1]

வாழ்க்கை மற்றும் தொழில் தொகு

அனுராதா பட்டாச்சார்யா, தபன் குமார் பட்டாச்சார்யா மற்றும் சித்ரா பட்டாச்சார்யா ஆகியோருக்கு 1975 திசம்பர் 6 ஆம் தேதி இந்தியாவின் கல்கத்தாவில் பிறந்தார் . 2017ஆம் ஆண்டின் பத்ம விருது பெற்ற அசோக் குமார் பட்டாச்சார்யா இவரது தாய்வழி தாத்தா ஆவார். [5] பின்னர், இவரது குடும்பம் ரூர்க்கி இந்திய தொழில்நுட்பக் கழக வளாகத்திற்கு குடிபெயர்ந்தது. இவர் தனது கல்வியை ரூர்க்கி புனித அன்னேஸ் மூத்த மேல்நிலைப் பள்ளியிலும் மற்றும் ராஜஸ்தானின் பனஸ்தாலி வித்யாபீத் ஆகியவற்றிலிருந்தும் பெற்றார். கொல்கத்தாவின் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் 1996 இல் ஆங்கில இலக்கியம் முதுகலை பட்டப்படிப்பில் சேர்ந்தார். [6] ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் இருந்தபோது, இந்தியக் கவிஞரும் பேராசிரியருமான பி.லால் என்று அழைக்கப்படும் புருஷோத்தம லால் இவரது முதல் கவிதை புத்தகத்தை 1998 இல் அவரது பதிப்பக எழுத்தாளர்கள் பட்டறையிலிருந்து வெளியிட்டார் . [7]

பணி தொகு

கரக்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் துறையில் இளைய ஆராய்ச்சி சக ஊழியராக இருந்தார். இவர் உளநிலை பகுப்பாய்வு மற்றும் இலக்கியத்தின் இடைநிலை ஆராய்ச்சி பகுதியில் பணியாற்றினார். [8] இவர் 2005இல் ஆங்கில இலக்கியத்தில் தனது தத்துவ முனைவர் பட்டம் பெற்றார். [9] இவர் 2006இல் சண்டிகரின் செக்டார் -11, முதுகலை அரசுக் கல்லூரியில் ஆங்கில உதவி பேராசிரியராக சேர்ந்தார். [10] இவருக்கு திருமணமாகி ஒரு மகள் உள்ளாள்.

கவிதை தொகு

இவரது கவிதைகள் உலகெங்கிலும் உள்ள பல்வேறு இலக்கிய இதழ்கள் மற்றும் இலக்கியப் படைப்புகளின் தொகுப்பாக வெளியிடப்பட்டுள்ளன. [11] கவிஞர் குர்தேவ் சவுகான் [12] இவரை கவிதை அடுக்கு என்று அழைக்கிறார். "அவை ஒன்றுக்கு மேற்பட்ட வாசிப்புகளுக்குத் திறக்கப்படுகின்றன, பெரும்பாலும் மாற்றுக் குரலுக்கு." [13] [14]

புதினம் தொகு

தி ரோட் டேக்கன் என்ற இவரது முதல் புதினத்தை புது தில்லியின் கிரியேட்டிவ் காகஸ் வெளியீட்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த கோல் மஹிப் சாதா 2015 ஏப்ரலில் வெளியிட்டார். இவர் பல சிறுகதைகளை மீண்டும் மீண்டும் அச்சு மற்றும் மின் பத்திரிகைகளில் வெளியிட்டுள்ளார்.

கௌரவங்கள் தொகு

இவர் 2016 அக்டோபரில் காஃப்லா இன்டர் கான்டினென்டலில் இருந்து கௌரரவ சாகித்ய ஸ்ரீ விருதைப் பெற்றுள்ளார். சண்டிகர் சாகித்ய அகாடமி தனது வருடாந்த விருது வழங்கும் விழாவில், ஏப்ரல் 2017, இவரது ஒரு புதினத்திற்கு 2016 ஆம் ஆண்டின் சிறந்த புத்தகத்திற்கான விருதை வழங்கியது. விஜயவாடாவின் கலாச்சார மையத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு விஜயவாடாவில் 2017 நவம்பர் 11-12 அன்று நடைபெற்ற அமராவதி கவிதை பிரிசம் [15] கவிஞர்களின் ஆண்டு விழாவிலும் இவர் கௌரவிக்கப்பட்டார் [16] . அமராவதி கவிதை பிரிசம் இந்திய கவிஞர்கள் மற்றும் இந்திய மொழிகளின் பதிவு பிரதிநிதித்துவத்திற்கு பிரபலமானது [17] . 2018 ஆம் ஆண்டில் போய்சிஸ்ஆன்லைன் நடத்திய சர்வதேச சிறுகதை போட்டியில் இவரது "பெயிண்டிங் பிளாக் அண்ட் ப்ளூ" கதைக்கு ஐந்தாவது பரிசை வென்றார். இது இலக்கியத்தில் சிறந்து விளங்குவதற்கான போய்சிஸ் விருது என்று அழைக்கப்படுகிறது. [18] [19]

2019 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவில் விருது பெற்றவர்களில் பட்டாச்சார்யாவும் ஒருவராவார். அங்கு கலை மற்றும் கலாச்சாரத் துறையில் விரிவான பணிகளை மேற்கொண்டதற்காக இவருக்கு ஆலோசகரிடமிருந்து சண்டிகர் நிர்வாகிக்கு பாராட்டு விருது வழங்கப்பட்டது. [20] அரித்துவார் இலக்கிய விழாவில், 2018 திசம்பரில், "நான் அனுபவித்த அல்லது கவனித்த தனித்துவமான விஷயங்களைப் பற்றி எழுதுகிறேன், அவற்றை சமூகத்தின் நலனுக்காக வெளியிடுகிறேன்" என்று கூறினார். [21] இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர் பேச்சாளராக இவர் கலந்து கொண்டார். [22]

2020 ஆம் ஆண்டில், சண்டிகர் சாகித்ய அகாடமியிடமிருந்து ஸ்டில் ஷீ க்ரைட் என்ற புதினத்திற்காக ஆண்டின் சிறந்த புத்தக விருதைப் பெற்றார். இவர் தனது கவிதை புத்தகமான மை தாது வெளியீட்டிற்காக அவர்களின் உதவித் தொகையைப் பெற்று வெளியிட்டார். மை தாது அசோக் குமார் பட்டாச்சார்யா பற்றிய விளக்கப்படமான கவிதை புத்தகம் மற்றும் இவரது தந்தையைப் பற்றி சித்ரா பட்டாச்சார்யா எழுதிய ஒரு சிறு நினைவுக் குறிப்பும் உள்ளது. [23] [24]

விமர்சனம் தொகு

ஒரு கல்வியாளரான அனுராதா பட்டாச்சார்யா விமர்சன கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார். [25] பௌத்தம், ஜாக் லாகன், ஆகஸ்ட் ஸ்ட்ரிண்ட்பெர்க், மாக்சிம் கார்க்கி, பிராண்டெல்லோ, அல்பேர்ட் காம்யு, பெர்தோல்ட் பிரெக்ட், பீட்டர் வெயிஸ், சல்மான் ருஷ்டி, மிலன் குண்டேரா, அருந்ததி ராய், அரவிந்த் அடிகா, ஜும்பா லாஹிரி மற்றும் பாப்லோ நெருடா ஆகியவை ஆகியவர்களைப் பற்றி பல்வேறு இந்திய அச்சு பத்திரிகைகளில் வெளியிடப்பட்டுள்ளன.

குறிப்புகள் தொகு

  1. http://www.authorspressbooks.com/book_detail.php?preference=1780
  2. ".:Sahitya Akademi:". sahitya-akademi.gov.in. Archived from the original on 2018-07-03. பார்க்கப்பட்ட நாள் 2020-04-04.
  3. "Sahitya Akademi honour for writers". 2017-03-30.
  4. majumdar, samir. "An Author and a Poet Speaks". thecitizen.in. Archived from the original on 2017-04-19. பார்க்கப்பட்ட நாள் 2020-04-04.
  5. Page xvii, Progeny of Asoke Kumar Bhattacharyya, in the book Indian Culture – Multifacet Research – Commemoration Volume in Honour of Professor A. K. Bhattacharyya (2017) edited by Prof. Amalendu Chakraborty. Bharatiya Kala Prakashan: Kolkata. ISBN 978-8180903175
  6. Author Interview https://drive.google.com/file/d/0B1bFkBuNuRivYlg5UGtlRFA0T00/view
  7. "Lofty". 2015-07-19.
  8. "WRITERS BIO". www.lacan.com.
  9. http://journals.sagepub.com/pb-assets/cmscontent/HPY/HPY_Freud_dissertations_list.pdf
  10. UPSC employment, http://www.upsc.gov.in/recruitment/FN-Results/2006/rcts0606.pdf
  11. The Camel Saloon May, July, August 2014, Contemporary Vibes Feb 2014, The Taj Mahal Review June 2014, Rainbow Hues 2014, Conifers Call April 2014, The Significant Anthology 2015, The Creative Mind, 2015, LangLit Journal April 2015Pink Panther 8 March 2016 The Wagon Magazine, South Asian Ensemble
  12. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-05-05. பார்க்கப்பட்ட நாள் 2020-04-04.
  13. "Book-Review Knots by Anuradha Bh". www.kaflaintercontinental.com. Archived from the original on 2016-06-01. பார்க்கப்பட்ட நாள் 2020-04-04.
  14. "Captive Without Bars Poem by Anuradha Bhattacharyya - Poem Hunter". poemhunter.com.
  15. "World multi-lingual poets' meet begins tomorrow". https://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/world-multi-lingual-poets-meet-begins-tomorrow/article20087322.ece. 
  16. "Report: Amaravati Poetic Prism 2017". www.setumag.com.
  17. "Amaravati Poetic Prism enters record book". https://www.thehindu.com/news/cities/Vijayawada/amaravati-poetic-prism-enters-record-book/article22813004.ece. 
  18. "Bharat Award 2018 Winners - poiesisonline". www.poiesisonline.com. Archived from the original on 2020-09-23. பார்க்கப்பட்ட நாள் 2020-04-04.
  19. "My Interview with Prof. Dr Anuradha Bhattacharyya by Moloy Bhattacharya". boloji.com.
  20. "Chandigarh: Healer, visually-impaired girl among R-Day awardees". 2019-01-24.
  21. https://www.youtube.com/watch?v=BM4yf2rFhgs&app=desktop
  22. "Guests | Haridwar Literature Festival". Archived from the original on 2019-04-24. பார்க்கப்பட்ட நாள் 2020-04-04.
  23. https://www.thecitizen.in/index.php/en/NewsDetail/index/7/10416/An-Author-and-a-Poet-Speaks
  24. My Dadu
  25. "Anuradha Bhattacharyya - Panjab University, Chandigarh India - Academia.edu". chd.academia.edu.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அனுராதா_பட்டாச்சார்யா&oldid=3542259" இலிருந்து மீள்விக்கப்பட்டது