அருப் ராய்

இந்தியாவின் மேற்கு வங்க சட்டமன்ற உறுப்பினர்

அருப் ராய் (Arup Roy) இந்தியாவின் மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 2011 ஆம் ஆண்டு மே மாதம் 20 ஆம் தேதியன்று இவர் மேற்கு வங்காள அரசாங்கத்தின் அமைச்சரவையில் கூட்டுறவுத் துறைக்கான அமைச்சராகப் பொறுப்பேற்றார். 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற மேற்கு வங்க மாநில சட்டமன்றத் தேர்தலில் அவுரா மத்திய தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். 2016 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவுராவிலிருந்து இவர் அகில இந்திய திரிணாமுல் காங்கிரசின் மாவட்டத் தலைவராகவும் உள்ளார்.[1][2][3]

அருப் ராய்
Arup Roy
கூட்டுறவுத்துறை அமைச்சர்
மேற்கு வங்காள அரசு
பதவியில் உள்ளார்
பதவியில்
மே 20, 2011
ஆளுநர்எம். கே. நாராயணன்
டி.வி. பாட்டீல்
கேசரிநாத் திரிபாதி
இயகதீப் தன்கர்
முதல் அமைச்சர்மம்தா பானர்சி
முன்னையவர்இரவீந்திர கோசு
சட்டமன்ற உறுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
மே 13, 2011
முன்னையவர்அருப் ராய் (துகுன்)
தொகுதிமத்திய அவுரா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு16 அக்டோபர் 1956
அரசியல் கட்சிஅகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
வாழிடம்அவுரா

மேற்கோள்கள் தொகு

  1. Mamata allots portfolios, keeps key ministries
  2. All the Didi's men
  3. "Ministers in Mamata's Cabinet". Government of West Bengal. 21 May 2011. Archived from the original on 5 October 2011. பார்க்கப்பட்ட நாள் 22 May 2011.
"https://ta.wikipedia.org/w/index.php?title=அருப்_ராய்&oldid=3344957" இலிருந்து மீள்விக்கப்பட்டது