ஆம்ரபாலி (திரைப்படம்)

ஆம்ரபாலி (Amrapali) என்பது 1966 ஆம் ஆண்டு வெளியான வரலாற்று இந்தித் திரைப்படமாகும். இது லெக் டாண்டன் இயக்கியது, இதில் சுனில் தத் மற்றும் வைஜெயந்திமாலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்ததிரைப்படத்திற்கு இசையமைத்தவர் ஷங்கர்-ஜெய்கிஷன் இணையர் ஆவர்.

ஆம்ரபாலி
இயக்கம்லேக் டாண்டன்
தயாரிப்புஎஃப். சி. மெஹ்ரா
கதைகதை & திரைக்கதை: ஓம்கார் சாகிப்
வசனம்: அர்ஜுன் தேவ் ரஷ்க்
பல்பீர் சிங் (கூடுதல் வசனம்)
இசைசங்கர்–ஜெய்கிஷன்
நடிப்புசுனில் தத்
வைஜெயந்திமாலா
பிரேம் நாத்
ஒளிப்பதிவுதுவாரகா டிவேச்சா
படத்தொகுப்புபிரான் மெஹ்ரா
கலையகம்ஈகிள் ஃபிலிம்ஸ் [1]
வெளியீடு11 September 1966
நாடுஇந்தியா
மொழிஇந்தி

இத்திரைப்படம் கிமு 500 இல் பண்டைய இந்தியாவில் லிச்சாவி குடியரசின் தலைநகரான இன்றைய பீகாரில் உள்ள வைசாலியின் நகரவாது ( வேசி ) ஆம்ரபாலி (அம்பாபாலி) மற்றும் மகதப் பேரரசின் ஹரியங்கா வம்சத்தின் அரசரான அஜாதசத்ரு ஆகியோரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டதாகும். அஜாதசத்ரு ஆம்ரபாலி மீது காதல் கொண்டவர். வைஷாலியைப் பெறுவதற்காக அவன் அவளை அழித்தார். இதற்கிடையில் கௌதம புத்தருடன் ஆம்ரபாலி சந்தித்ததன் மூலம் தன்னை மாற்றிக்கொண்டார். கௌதம புத்தரைச் சந்தித்த பிறகு ஆம்ரபாலி அவரின் சீடராக ஆனதோடு அருகதராகவும் ஆனார். இவரது கதை பழைய பாலி நூல்களிலும் புத்த மரபுகளிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. [2] [3]

39வது அகாடமி விருதுகளில் சிறந்த வெளிநாட்டு மொழித் திரைப்படத்திற்கான இந்திய நுழைவுத் திரைப்படமாக இந்தத் திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டது, ஆனால், இறுதியான விருதிற்குப் பரிந்துரைக்கப்படவில்லை. [4] இப்படம் வணிகரீதியாக வெற்றிபெறவில்லை என்றாலும், காலப்போக்கில் அதன் நற்பெயர் வளர்ந்து, இப்போது இந்தி சினிமாவின் உன்னதமான படமாக கருதப்படுகிறது. அதன் வியத்தகு போர் காட்சிகள், [5] பானு அத்தையாவின் தனித்துவமான உடைகள் மற்றும் வலுவான போர் எதிர்ப்பு உணர்வுக்காக இது நினைவுகூரப்படுகிறது. [6] [7] [8]

படத்தின் உரிமையை சாருக்கானின் ரெட் சில்லிஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் பெற்றுள்ளது.

கதைக்களம் தொகு

மீண்டும் மீண்டும் வெற்றி பெற்ற பிறகும்,வெற்றி பெறுவதற்கான அஜாதசத்துருவின் பசி தணியவில்லை, மகதத்தின் பேரரசர் அஜாதசத்ரு ( சுனில் தத் ) தனது வெற்றிப் பயணத்தைத் தொடர விரும்பினார், ஏனெனில் வெல்லப்படாத ஒரே நகரம் வைஷாலி . இது குறித்து அவரது ஜோதிடர்கள் அவரை முன்கூட்டியே எச்சரிக்கிறார்கள்; அவரது படைத்தளபதி ( பிரேம் நாத் ) அவரது இராணுவம் சோர்வாக உள்ளதாகவும் ஓய்வெடுக்க வேண்டியுள்ளது என்றும் எச்சரிக்கிறார்; அவரது சொந்தத் தாய் எந்த போரிலும் பங்கேற்க அனுமதிக்க மறுத்துவிடுகிறார் - ஆனால் அவர் யாருடைய பேச்சையும் கேட்க மறுத்து, போருக்கு விரைகிறார் - இது வைசாலி இராணுவத்தின் கைகளில் அடுத்தடுத்த தோல்விகளுக்கு வழிவகுக்கிறது. காயமடைந்து, தோற்று, எதிரி வீரர்களிடமிருந்து தப்பி ஓடிய அஜதசத்ரு, வைஷாலி சிப்பாய் வேடமிட்டு, ஆம்ரபாலி ( வைஜெயந்திமாலா ) என்ற பெண்ணிடம் தஞ்சம் புகுந்தார். அவள் அவனை ஆரோக்கியமாக மீட்டெடுக்கிறாள், ஆனால் அவன் மகத்தின் அஜாதசத்ரு என்பதை ஆம்ரபாலி அறியவில்லை, ஆனாலும் அவர்கள் ஒருவரையொருவர் காதலிக்கிறார்கள்.

அஜாதசத்ரு படைத்தளபதி பத்பத்ரா சிங்கில் ( கே.என். சிங்) ஒரு கூட்டாளியைக் கண்டுபிடித்தார், இருவரும் வைஷாலிக்கு எதிராக சதி செய்யத் தொடங்குகிறார்கள் - இந்த முறை வீரர்களின் எண்ணிக்கையைக் குறைப்பது, அவர்களை மதுவுக்கு அடிமையாக்குவது, மோசமான பயிற்சி முறைகள் மற்றும் மோசமான ஊதியம் - இதனால் அவர்களை மனச்சோர்வடையச் செய்வது போன்றவை மகதத்திற்கு எளிதான வெற்றிக்கான வழியாகத் திட்டமிடப்பட்டது. ஆம்ரபாலி, ஒரு நடனப் போட்டியில் வெற்றி பெற்று, வைஷாலியின் அரசவையின் நடனக் கலைஞர் என்று முடிசூட்டப்படுகிறார். அவர் ஒரு உண்மையான தேசபக்தர் என்று அனைவருக்கும் தெரியும். ஒரு நாள், அவள் விரும்பும் சிப்பாய் வேறு யாருமல்ல, அஜாதசத்ருதான் என்பதை அவள் கண்டுபிடித்தாள். ஒரு உண்மையான தேசபக்தர் என்பதால், அவள் அவனுடனான அனைத்து உறவுகளையும் முறித்துக் கொண்டாள். மேலும், ஆம்ரபாலி அஜாதசத்ருவிடம் தன்னை ஒருபோதும் பார்க்கக்கூடாது என்று கூறுகிறாள். மனம் உடைந்த ஆம்ரபாலி வைஷாலியின் ஆட்சியாளரிடம் அரச நடனக் கலைஞர் பதவியை விட்டு விலக விரும்புவதாக கூறுகிறாள். நீதிமன்ற உறுப்பினர்கள் அவள் மீது அழுத்தம் கொடுக்கிறார்கள், அவள் அஜாதசத்ருவைக் காதலித்ததை அனைவரும் கண்டுபிடித்து அவளை துரோகியாக அறிவிக்கிறார்கள்.

வைஷாலியின் ஆட்சியாளர் அவளுக்கு ஒரு நிலவறையில் ஆயுள் தண்டனை விதித்து, ஒரு பௌர்ணமி இரவில் அவளைக் கொல்ல உத்தரவிடுகிறார். இதைக் கேட்டு ஆத்திரமடைந்த அஜாதசத்ரு, தனது படையைத் திரட்டி, வைஷாலியின் சந்தேகத்திற்கு இடமில்லாத மக்களைத் தாக்கி, நகரத்தை கிட்டத்தட்ட எரித்து, அதில் உள்ள அனைவரையும் கொன்றார். பின்னர் அவர் தனது காதலியை நிலவறைகளில் இருந்து விடுவிக்க விரைகிறார். அவர் அவளை விடுவிக்கிறார் - ஆனால் அது அதே ஆம்ரபாலி அல்ல - இந்த ஆம்ரபாலி முற்றிலும் வித்தியாசமானவர் மற்றும் அவளை வென்ற காதலனின் முன்னிலையில் இருப்பதில் சிறிதும் மகிழ்ச்சியடையவில்லை. அவள் அவனால் போர்க்களத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறாள். அவளைப் பெறுவதற்காக அவன் கொன்ற அனைவரையும் காட்டுகிறார். இவ்வளவு இரத்தம் சிந்துவதைக் கண்டு அவள் திகிலடைகிறாள். தன்னால் இனி இப்படி வாழ முடியாது என்று சொல்லிவிட்டு கௌதம புத்தரிடம் ( நரேந்திர நாத் ) சரணடைகிறாள். அஜாதசத்ருவும் அவளைப் பின்தொடர்ந்து தன்னைச் சரணடைந்தான்.

நடிகர்கள் தொகு

  • சுனில் தத் - மகத் சாம்ராட் அஜாதசத்ரு
  • வைஜெயந்திமாலாஆம்ரபாலி
  • பிரேம் நாத் - மகத்தின் சென்பதி வீர்
  • பிபின் குப்தா – வைஷாலியின் கானா முக்யா
  • கஜானன் ஜாகிர்தார் - குல்பதி மகானம்
  • கேஎன் சிங் - பல்பத்ரா சிங்
  • மாதவி – ராஜ் நர்தகி
  • மிருதுளா ராணி – ராஜ் மாதா (அஜாத் சத்ருவின் தாய்)
  • ரூபி மியர்ஸ் – வைஷாலியின் முதல் பெண்மணி
  • நரேந்திர நாத் - கௌதம புத்தர்
  • பாபுராவ் பெந்தார்கர் – வைஷாலி சாம்ராட்டின் ஆலோசகர் (நீல் ககன் கீ... பாடலில்)
  • பேலா போஸ் - வைஷாலி கிராமத்து பெண்
  • ரந்தீர் (நடிகர்) - சோம், குல்பதியின் மகன்
  • நசீர் காஷ்மீரி
  • கேசவ் ராணா - வைஷாலி சிப்பாய்
  • கோபி கிருஷ்ணா - முன்னணி நடனக் கலைஞர், கொண்டாட்ட நடனத்தில்

மேலும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Office Office maker passes away". Screen. 31 July 2008. Archived from the original on 10 September 2012.
  2. History of Vaishali
  3. Ambapālī (Ambapālikā) in Buddhist Dictionary of Pali names
  4. Margaret Herrick Library, Academy of Motion Picture Arts and Sciences
  5. "V.K.MURTHY: Lens and Sensibility". Screen. 3 February 2006.
  6. "Are they calling the shots?". Screen. 29 March 2002.
  7. "Clothes maketh the film". தி இந்து. 25 February 2010. http://www.thehindu.com/arts/article113444.ece. 
  8. What if Amrapali were remade today?
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆம்ரபாலி_(திரைப்படம்)&oldid=3901176" இலிருந்து மீள்விக்கப்பட்டது