ஆறன்முளா பன்னாட்டு விமான நிலையம்

ஆறன்முளா பன்னாட்டு வானூர்தி நிலையம், கேரள மாநிலத்தின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள ஆறன்முளா நகரில் அமைக்கப்படவிருக்கும் வானூர்தி நிலையம் ஆகும். இதற்கான செலவு 2,000 கோடி இந்திய ரூபாய் எனவும், 700 ஏக்கர் பரப்பளவில் கட்டப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. [1] பலராலும் எதிர்க்கப்பட்டாலும், இதன் மூலம் 7500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது> [2] இது 2014 டிசம்பர் இறுதியில் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. போயிங் 747 உள்ளிட்ட பெரிய வானூர்திகளை நிறுத்துமளவுக்கு அனைத்து வசதிகளும் செய்யப்படும்.[3] ஒரே வேளையில் ஆயிரம் பேரை தாங்கும் அளவுக்கு முனையமும், பேரங்காடிகளும் அமைக்கப்படவுள்ளன.

ஆறன்முளா பன்னாட்டு வானூர்தி நிலையம்
International Airport
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைதனியார்
உரிமையாளர்கேஜியெஸ் பிரைவேட் லிமிடெட்
இயக்குனர்கேஜியெஸ் ஆறன்முளா பன்னாட்டு வானூர்தி நிலையம் லிமிடெட்.
சேவை புரிவதுபந்தனம்திட்டா, கோட்டயம், ஆலப்புழை, இடுக்கி
அமைவிடம்ஆறன்முளா, கேரளம், இந்தியா
ஆள்கூறுகள்09°19′23″N 076°41′11″E / 9.32306°N 76.68639°E / 9.32306; 76.68639

மேற்கோள்கள் தொகு

  1. http://www.thehindu.com/news/states/kerala/popular-agitation-against-aranmula-airport-enters-400th-day/article4328392.ece
  2. "Malaysia Airports to buy stake in KGS Aranmula Intl Airport". Business Standard. 30 October 2012. பார்க்கப்பட்ட நாள் 30 October 2012.
  3. http://www.kgsaranmulaairport.com/overview.html பரணிடப்பட்டது 2012-01-28 at the வந்தவழி இயந்திரம் airport overview

இணைப்புகள் தொகு