இந்திய தகவல் தொழில்நுட்பக் கழகங்கள்

இந்தியத் தகவல் தொழில்நுட்பக் கழகங்கள் (IIITs) இந்தியாவில் உயர்கல்விக்காக நடத்தப்படும் கல்வி நிறுவனங்களின் குழுக்களாகும், இதன் நோக்கம் தகவல் தொழிநுட்பக் கல்வியை மேம்படுத்துவதாகும். இதில் நான்கு கழகங்கள் இந்திய தகவல் தொழில்நுட்பக் கழகங்கள் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் நிதியுதவியால் ஏற்படுத்தப்பட்டு நிர்வகிக்கப்படுகிறது.[1] மேலும் 20 இந்திய தகவல் தொழில்நுட்பக் கழகங்கள் பொது-தனியார் கூட்டாண்மை மாதிரியின் கீழ் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியத் தகவல் தொழில்நுட்பக் கழகங்களில், இளநிலைப் பட்டதாரி மாணவர் சேர்க்கை கூட்டு நுழைவுத் தேர்வு (JEE / GATE) வழியாக நடைபெறுகிறது.

மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் நிதியுதவிபெறும் கழகங்கள் 4 (பச்சை); பொது-தனியார் கூட்டாண்மை அமைப்புகளின் கழகங்கள் 6 (சிவப்பு).

இந்தியாவிலுள்ள தொழில்நுட்ப கல்விமுறை பரந்த அளவில் இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகின்றன:

  1. மனிதவள மேம்பாட்டு அமைச்சக நிதியுதவி பெறும் நிறுவனம்
  2. மாநில அரசு & தனியார் தொழில்நுட்ப நிறுவனங்கள் நிதியுதவி பெறும் நிறுவனம்.


  1. "Technical Education – Centrally Funded Institutions". mhrd.gov.in. பார்க்கப்பட்ட நாள் 16 October 2013.