இராதிகா மேனன்

இராதிகா மேனன் (Radhika Menon) என்பவர் இந்திய வெளியீட்டாளர் ஆவார். இவர் 1996-ல் தனது பதிப்பகமான துலிகாப் புத்தகங்கள் என்ற நிறுவனத்தை நிறுவினார்.[1]

ஆரம்ப நாட்கள் தொகு

சிறுவயதில் எனிட் பிளைடன், சார்லசு ஆமில்டன் மற்றும் டபுள்யூ. ஈ. ஜோன்சு போன்ற எழுத்தாளர்களைப் படிக்க விரும்புவதாக மேனன் குறிப்பிட்டார்.[2]

தொழில் தொகு

1978ஆம் ஆண்டில், குழந்தைகள் கல்வியில் ஆர்வத்துடன் மேனன், ஜே. கிருஷ்ணமூர்த்தி பள்ளியில் பணியாற்றினார்.[2] சென்னையில் உள்ள ஜே கிருஷ்ணமூர்த்தி பள்ளியில் பணியாற்றிய பிறகு, மேனல் தில்லியில் உள்ள சர்தார் படேல் பள்ளியில் பணியாற்றினார்.[3]

மேனனும் அவரது மைத்துனி இந்து சந்திரசேகரும் சொந்த புத்தகங்களை வெளியிடுவதற்கு "போதுமான பணம் சம்பாதிக்க" துலிகா என்ற பத்திரிகை சேவையைச் தொடங்கி நடத்தினர். இதைத் தொடர்ந்து, சந்திரசேகர் 1995-ல் புது தில்லியில் துலிகா புத்தக நிறுவனத்தினை நிறுவினார். மேலும் மேனன் சென்னையில் துலிகா நிறுவனத்தை நிறுவினார்.

துலிகா புத்தகங்கள் தொகு

துலிகாவின் குழந்தைகளுக்கான புத்தகங்கள் 1996-ல் இந்திய வெளியீட்டில் ஒரு குறிப்பிடத்தக்கத் தாக்கத்தினை ஏற்படுத்தியது. ஆங்கிலம், இந்தி, தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, மராத்தி, குஜராத்தி மற்றும் பெங்காலி போன்ற மொழிகளில் குழந்தைகள் இலக்கியங்களை இப்பதிப்பகம் வெளியிடுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. Chaini, Sanjitha Rao (7 March 2016). "'The More Packed With Facts And Figures, The Better They Sell'".
  2. 2.0 2.1 "Down memory lane with Tulika". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 2016-12-09.
  3. "Radhika Menon talks about Tulika". KitaabWorld இம் மூலத்தில் இருந்து 2016-12-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161220152904/https://kitaabworld.com/blogs/in-focus/radhika-menon-talks-about-tulika. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராதிகா_மேனன்&oldid=3705754" இலிருந்து மீள்விக்கப்பட்டது