இலங்கையின் நடனங்கள்

இலங்கையின் நடனங்கள் (Dances of Srilanka ) என்பவை இலங்கையின் பூர்வ குடிமக்களான வெத்தா என்றழைக்கப்படும் வேடுவர், இயக்கர் ஆகிய மக்களிடமிருந்து வந்த நாட்டுப்புற நடன வடிவங்களாகும்.

பாரம்பரிய இலங்கை அறுவடை நடனம்

செவ்வியல் நடனங்கள் தொகு

இலங்கையின் செவ்வியல் நடனத்தில் மூன்று முக்கிய பாணிகள் உள்ளன:

  • உடறட்ட நட்டும் என்று அழைக்கப்படும் மலை நாட்டின் கண்டியன் நடனங்கள் ;
  • பகதறட்ட நட்டும் என்று அழைக்கப்படும் தாழ்வான தெற்கு சமவெளிகளின் நடனங்கள் ;
  • சபராகமுவா நடனங்கள், அல்லது சபராகமுவ நட்டும்.

நவீன தலைநகரான கொழும்பில் இருந்து 120 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இலங்கையின் கடைசி அரசத் தலைநகரான கண்டியில் இருந்து கண்டிய நடனம் நடனம் அதன் பெயரைப் பெற்றது. இந்த வகை நடனம் இன்று இலங்கையின் செவ்வியல் நடனமாகக் கருதப்படுகிறது. சமஸ்கிருத சொற்களின் வழி இது தூய நடனம் (ந்ருத்தா) என்று கருதப்படுகிறது; இது "தாளம்பட்டா" என்று அழைக்கப்படும் ஜால்ரா எனப்படும் இசைக்கருவியில் வழங்கப்படும் ஒலியுடன் கூடிய மிகவும் மேம்பட்ட "தாள” அமைப்பைக் கொண்டுள்ள நடனமாகும். சிலவிடங்களில் கெத்தபெரா எனப்படும் மத்தளமும் தாளத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது. ஆடல், அமைப்பு, ஆடை, அணி, கதைக்கரு என்பவற்றின் அடிப்படையில் வெஸ், நையாண்டி, உடக்கி, பந்தேரு, வண்ணம் என்ற ஐந்து தனித்துவமான வகைகள் உள்ளன. உடல் அசைவுகள் மற்றும் சைகைகளின் பாணிகளாலும், கலைஞர்கள் அணியும் ஆடைகளாலும், நடனத்தை வழங்கப் பயன்படுத்தப்படும் தாள ஒலிகளை வழங்கிடும் நூதன முரசின் வடிவத்தாலும் அளவாலும் இந்த மூன்று செவ்வியல் நடன வடிவங்களும் வேறுபடுகின்றன.

கண்டிய நடனத்தில் பயன்படுத்தப்படும் முரசு (மத்தளம்) கெத்த பெரா என்றும், உருகுணை இராச்சியத்தில் (தாழ் நாடு) பயன்படுத்தப்படும் முரசு "யக்க பெரா" என்றும், சபராகமுவாவில் பயன்படுத்தப்படும் முரசு "தவுவுலா" என்றும் அழைக்கப்படுகிறது. சிங்கள மொழியில் பெரா அல்லது பெரேயா என்ற வார்த்தையின் பொருள் "முரசு " என்பதாகும்) கெத்த பெரா மத்தளமானது யக்க பெராவைப் போலவே கைகளால் அடிக்கப்படும் முரசாகும். அதே நேரத்தில் தவுலா ஒரு புறத்தில் ஒரு குச்சியாலும் மறுபுறத்தில் ஒரு கையாலும் இசைக்கப்படுகிறது. கெத்தபெரா இருபுறமும் குவிந்து மையப்பகுதி புடைத்து மக்களம் போன்ற அமைப்பைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் யக்க பெரா மற்றும் தவுலா ஆகிய இரண்டும் உருளை வடிவ அமைப்பைக் கொண்டுள்ளன.

கண்டிய, சபராகமுவ நடனம் மற்றும் உருகுணை நடனம் ஆகியவற்றுக்கு இடையேயான முக்கிய வேறுபாடு என்னவென்றால், உருகுணை நடனக் கலைஞர்கள் முகமூடிகளை அணிவார்கள்.

நடைகள் தொகு

 
பாரம்பரிய கண்டிய ஆடை கொண்ட பெண் நடனக் கலைஞர்கள்

கண்டிய நடனங்கள் (உடறட்ட நட்டும்) தொகு

வேஸ் நடனம் தொகு

"வேஸ்" நடனம், இலங்கையில் மிகவும் புகழ்பெற்ற நடனமாகும். செவிவழிக் கதைகளின்படி, கண்டிய நடனம் தொடக்கத்தில் இந்தியாவிலிருந்து வந்த மந்திரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட கொகொம்ப யாகும அல்லது கொகொம்ப கங்காரிய என்னும் பேயோட்டுச் சடங்கிலிருந்து தோன்றியதாகும்.[1] இந்த வெஸ் நடனம் சினம் தணிக்க அல்லது நல்லிணக்கத்திற்கான நடனமாகும். இது எப்போதும் மதச்சார்பற்றதாகவும் விளங்குகிறது. மேலும் இது ஆண்களால் மட்டுமே நிகழ்த்தப்படுகிறது.

நுட்பமான வேலைப்பாடுகளுடன் கூடிய வேஸ் ஆடை, குறிப்பாக தலைக்கவசம் புனிதமாகக் கருதப்படுகிறது, மேலும் இது கோகொம்பா தெய்வத்திற்கு சொந்தமானது என்றும் நம்பப்படுகிறது.

ஒரு பழங்கால சுத்திகரிப்பு சடங்கான கோஹோம்பா யாகுமா அல்லது கோஹோம்பா கங்காரியாவிலிருந்து உருவானது. இந்த நடனம் ஒருபோதும் மதச்சார்பற்றது, ஆண்களால் மட்டுமே நிகழ்த்தப்பட்டது. விரிவான வேஸ் ஆடை, குறிப்பாக தலைக்கவசம் புனிதமாகக் கருதப்படுகிறது, மேலும் இது கோஹோம்பா தெய்வத்திற்கு சொந்தமானது என்று நம்பப்படுகிறது.

19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் வருடாந்திர கண்டி பெரஹேரா திருவிழாவில் கங்காரியா கோயிலின் எல்லைக்கு வெளியே நிகழ்ச்சிகளை நடத்த வேஸ் நடனக் கலைஞர்கள் முதலில் அழைக்கப்பட்டனர். காலப்போக்கில் இந்நடனம் புத்துயிர் பெற்று மேடைகளில் ஆடத்தக்க வகையில் மாற்றமும் வளர்ச்சியும் அடைந்துள்ளது. இலங்கையின் பண்பாட்டு அடையாளமாகவும் இது இன்று விளங்குகிறது.

நையாண்டி நடனம் தொகு

இந்த நடனத்தை, நையாண்டி உடையணிந்த நடனக் கலைஞர்கள் கொகொம்ப கங்காரிய த் திருவிழாவின் தொடக்கத் தயாரிப்புகளின் போது, குறிப்பாக விளக்குகள் ஏற்றும் பொழுதும், பேய்களுக்கான உணவுகளைத் தயாரிக்கும் பொழுதும் நிகழ்த்துகிறார்கள். நடனக் கலைஞர் ஒரு வெள்ளை உடுப்பு, வெள்ளைத் தலைப்பாகை, மார்பில் மணிகளால் அலங்காரங்கள், இடுப்புப் பட்டை, கழுத்தில் மணி வரிசைகள், வெள்ளி சங்கிலிகள், பித்தளை தோள்பட்டைத் தகடுகள், கணுக்கால் மற்றும் சதங்கை ஆகியவற்றை அணிந்து கொள்வர். இது ஒரு அழகிய நடனம், இது மகா விஷ்ணு (விஷ்ணு) மற்றும் கதாரகம தேவலஸ் கோயில்களில் சடங்கு நிகழ்வுகளின் போது நிகழ்த்தப்படுகிறது.

உடக்கி நடனம் தொகு

உடக்கி மிகவும் மதிப்புமிக்க நடனம். அதன் பெயர் தெய்வங்களால் மக்களுக்கு வழங்கப்பட்டதாக நம்பப்படும் மணற்கடிகார வடிவமுள்ள, ஏழரை அங்குலங்கள் (18 சென்டிமீட்டர்) உயரமுள்ள ஒரு சிறிய கை முரசாகும். இருபக்கமும் முரசுவடிவம் கொண்ட உடுக்கை எனப்படும் இக்கருவி சிவன் என்ற கடவுளால் மக்களுக்கு வழங்கப்பட்டதாக நம்பப்படுகிறது. மேலும் இதன் ஒலி விஷ்ணுவால் வழங்கப்பட்டது; இந்த கருவி சக்ராவின் அறிவுறுத்தல்களின்படி உருவாக்கப்பட்டதாகவும், தெய்வங்களின் உலகமான சொர்க்கத்தில் வாசிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது இசைப்பதற்கு மிகவும் கடினமான கருவியாகும். சுருதிகளுக்கேற்ப இதன் ஒலியைப் பெற சரங்களை இறுக்கி, பாடிக்கொண்டே நடனக் கலைஞர் ஆடுவார்.

மேற்கோள்கள தொகு

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இலங்கையின்_நடனங்கள்&oldid=3593534" இலிருந்து மீள்விக்கப்பட்டது