உறங்கத்திரி
உறங்கத்திரி (Urangattiri) இந்திய நாட்டின் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும்.[1] சாலியார் பள்ளத்தாக்கில் இது அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் 21 வார்டுகள் உள்ளன.
உறங்கத்திரி | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 11°14′0″N 76°2′0″E / 11.23333°N 76.03333°E | |
நாடு | India |
மாநிலம் | கேரளா |
மாவட்டம் | மலப்புரம் |
மக்கள்தொகை (2001) | |
• மொத்தம் | 26,546 |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வ மொழிகள் | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 673639 |
வாகனப் பதிவு | கேரளா - |
அமைவிடம் தொகு
உறங்கத்திரி, இந்திய நாட்டின் கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் உள்ள அரீக்கோடு நகரத்தின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது.
போக்குவரத்து தொகு
உறங்கத்திரி கிராமம் மேற்கில் பெரோக் நகரம் மற்றும் கிழக்கில் நிலம்பூர் நகரம் வழியாக இந்தியாவின் பிற பகுதிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை எண்.66 புளிக்கல் வழியாக செல்கிறது மற்றும் வடக்குப் பகுதி கோவா மற்றும் மும்பை உடன் இணைகிறது. தெற்குப் பகுதி கொச்சி மற்றும் திருவனந்தபுரம் உடன் இணைக்கிறது. மாநில நெடுஞ்சாலை எண்.28 நிலம்பூரில் இருந்து தொடங்கி ஊட்டி, மைசூர் மற்றும் பெங்களூரு நெடுஞ்சாலைகள்.12,29 மற்றும் நெடுஞ்சாலை எண் 181 வழியாக இணைக்கிறது. அருகிலுள்ள விமான நிலையம் கோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையம் ஆகும். அருகிலுள்ள பெரிய இரயில் நிலையம் பெரோக் நகரத்தில் உள்ளது.
மக்கள்தொகையியல் தொகு
உறங்கத்திரியில் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி 13138 ஆண்களும் 13408 பெண்களும் இருந்தனர். மொத்தமாக இக்கிராமத்தில் 26546 பேர் வசித்தனர்.[1]
மேற்கோள்கள் தொகு
- ↑ 1.0 1.1 "Census of India : Villages with population 5000 & above". Registrar General & Census Commissioner, India. பார்க்கப்பட்ட நாள் 2008-12-10.