இந்தியப் பகுதிக்கான இடஞ்சுட்டி செயற்கைக்கோள் அமைப்பு-1இ

(ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-1இ இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஐ. ஆர். என். எஸ். எஸ். - 1இ (IRNSS-1E) என்பது மொத்தம் ஏழு செயற்கைக்கோள்களைக் கொண்ட இந்தியப் பகுதிக்கான இடஞ்சுட்டி செயற்கைக்கோள் அமைப்பின் ஐந்தாவது செயற்கைக்கோள் ஆகும். இச்செயற்கைக்கோள் 1425 கிலோகிராம் மேலேற்றல் எடை கொண்டது.[1]

ஏவுதல் தொகு

ஆந்திர பிரதேச மாநிலத்தில், சென்னைக்கு 80 கி.மீ. (50 மைல்) வடக்கே அமைந்துள்ள ஸ்ரீஹரிக்கோட்டா நகரத்தில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி மையத்தின் இரண்டாம் ஏவுதளத்திலிருந்து 20 சனவரி 2016 ஆம் ஆண்டு, இ.சீ.நே. 09:31 மணிக்கு, பி. எஸ். எல். வி. - சி31 ஏவுகலத்தின் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டு வெற்றிகரமாக துணை புவியிணக்க இடமாற்று சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது.[2] பின்னர், செயற்கைக்கோளிலுள்ள திரவ புவிச்சேய்மைநிலை இயக்கியின் உதவியுடன் புவியிணக்கச் சுற்றுப்பாதைக்கு உயர்த்தப்பட்டு நிலை நிறுத்தப்பட்டது.[1]

இதையும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "பி. எஸ். எல். வி. - சி31" (PDF). இந்திய விண்வெளி ஆய்வு மையம். Archived from the original (PDF) on 2016-11-05. பார்க்கப்பட்ட நாள் 22 சனவரி 2016.
  2. "பி. எஸ். எல். வி. - சி31/ஐ. ஆர். என். எஸ். எஸ். - 1இ". இந்திய விண்வெளி ஆய்வு மையம். Archived from the original on 2016-01-14. பார்க்கப்பட்ட நாள் 22 சனவரி 2016.