கல்லூரி சந்திரமௌலி

இந்திய அரசியல்வாதி

கல்லூரி சந்திரமௌலி (ஆங்கிலம்: Kalluri Chandramouli; தெலுங்கு: கல்லூரி சந்திரமௌளி) (15 நவம்பர் 1898 – 21 ஜனவரி 1992) என்பவர் தென்னிந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி மற்றும் சுதந்திர ஆர்வலர் ஆவார்.

கல்லூரி சந்திரமௌலி
பிறப்பு15 நவம்பர்1898
மோப்பாரு, குண்டூர் மாவட்டம், ஆந்திரப் பிரதேசம்
இறப்பு21 சனவரி 1992(1992-01-21) (அகவை 93)
பணிவிடுதலைவீரர், பரோபகாரி

சுயசரிதை தொகு

சந்திரமௌலி 1898ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதி ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள மோப்பரு கிராமத்தில் பிறந்தார். இவர் இசுக்கொட்லாந்தில் கல்வி பயின்றார் மற்றும் விவசாயத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். இவர் இந்தியா திரும்பியதும், 1926-ல் சுதந்திர இயக்கத்தில் சேர்ந்தார். இந்தியத் தேசிய காங்கிரசின் உறுப்பினரான இவர் குண்டூர் மாவட்ட காங்கிரசு குழுவின் தலைவராக ஆனார். இவரது பதவிக் காலம் முழுவதும் ஆங்கிலேய அரசால் பலமுறை சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் 1937 மற்றும் 1946-ல் சென்னை மாகாணத்தின் தெனாலி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1955ஆம் ஆண்டு ஆந்திரா மாகாணத்திற்கும் 1962ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேசத்திற்கும் அதே பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கல்லூரி_சந்திரமௌலி&oldid=3440660" இலிருந்து மீள்விக்கப்பட்டது