குருச்சேத்திரம் (2006 திரைப்படம்)
குருச்சேத்திரம் (Kurukshetram) என்பது 2006 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமாகும். ஜெயபாரதி இயக்கிய இப்படத்தில் சத்யராஜ், ரோஜா, வடிவேலு கே. எம். ராஜேந்திரன் ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கான இசையை ஐசக் தாமஸ் கொட்டுகப்பள்ளி அமைத்துள்ளார். ராஜேந்திர மூவிஸ் என்ற பதாகையின் கீழ் இப்படத்தை கே. எம். ராஜேந்திரா தயாரித்துள்ளார். இந்த படத்திற்கான ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு போன்றவற்றை முறையே ஏ. கருப்பயா, சுரேஷ் அர்ஸ் ஆகியோர் மேற்கொண்டனர். குருசேத்ரம் சத்யராஜின் 170 வது படம். படமானது 11 ஆகத்து 2006 அன்று வெளியிடப்பட்டது.
குருச்சேத்திரம் | |
---|---|
இயக்கம் | ஜெயபாரதி |
தயாரிப்பு | கே. எம். இராஜேந்திரா |
கதை | ஜெயபாரதி |
இசை | ஐசக் தாமஸ் கொட்டுகப்பள்ளி |
நடிப்பு | சத்யராஜ் ரோஜா வடிவேலு (நடிகர்) கே. எம். இராஜேந்திரா |
ஒளிப்பதிவு | ஏ. கருப்பையா |
படத்தொகுப்பு | சுரேஷ் அர்ஸ் |
கலையகம் | இராஜேந்திரா மூவிஸ் |
வெளியீடு | 11 ஆகத்து 2006 |
ஓட்டம் | 130 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கதை
தொகுபரத் ( சத்யராஜ் ) மற்றும் அவரது மனைவி வைஷ்ணவி ( ரோஜா ) ஆகியோர் மேற்கு அமெரிக்காவில் தங்கள் குழந்தைகளான சுபாஷ் மற்றும் சிந்து ஆகியோருடன் வசித்து வருகின்றனர். அமெரிக்காவில் பாரத்தும் அவரது குடும்பத்தினரும் வசிக்கும் பகுதியில் கலவரம் வெடிக்கிறது, அந்த சமயத்தில் அவர்களின் மகள் சிந்து குண்டு வெடிப்பில் இறந்துவிடுகிறாள். சிந்து இறந்த பிறகு, வைஷ்ணவியின் உடல்நிலை பாதிக்கபடுகிறது. எனவே பரத் தனது குடும்பத்தினருடன் சென்னைக்கு இடம்பெயர முடிவு செய்கிறார். சென்னைக்குச் சென்ற பிறகு, பரத்தின் நண்பர் ஜாக் (கே. எம். ராஜேந்திரா) வைஷ்ணவியை மிரட்டி பாரதின் குடும்பத்தை சித்திரவதை செய்வதால் பரத்தும், அவரது குடும்பத்தினரும் மகிழ்ச்சியுடன் வாழமுடியாமல் போகிறது. ஜாக் வைஷ்ணவியை ஏன் அச்சுறுத்துகிறார் என்பதை படத்தில் முன்நடந்ந்த காட்சிகள் காட்டுகின்றன.
நடிகர்கள்
தொகு- சத்யராஜ் பாரத்தாக
- ரோஜா வைஷ்ணவியாக
- வடிவேலு (நடிகர்) நொண்டிப்புலியாக
- கே. எம். ராஜேந்திரா ஜாக்காக
- நிழல்கள் ரவி கைலாசாக
- தலைவாசல் விஜய் மேற்கத்தியராக
- பாரதி மணி தம்புவாக
- மாஸ்டர் சச்சின் பாரத்தின் மகன் சுபாசாக
- ஏமலதா பாரத்தின் மகள் சிந்துவாக
- வெண்ணிற ஆடை மூர்த்தி உணவக உரிமையாளராக
- எஸ். என். பார்வதி நொண்டிப்புலியின் தாயாக
- சிங்கமுத்து பங்கு தானியின் உரிமையாளராக
- தம்பி ராமையா தலைமைக்காவலராக
- விஜய் கணேஷ் காவலராக
- வெங்கல் ராவ் கோயிலில் உள்ள மனிதராக
- பாவா இலட்சுமணன் வட்டிக்கு பணம் கொடுப்பவராக
- வாசு (நகைச்சுவை நடிகர்) உணனவக ஊழியராக
- சிட்டிசன் மணி உணவக வாடிக்கையாளராக
- அமிர்தலிங்கம் உணவக வாடிக்கையாளர் பாண்டியாக
- போண்டா மணி "டூபாக்கூர் ஓட்டல்" உணவக உரிமையாளராக
- டெலிபோன் ராஜ் "டூபாக்கூர் ஓட்டல்" உணவக உரிமையாளராக
- ராமையா சிறப்புத் தோற்றத்தில்
நகைச்சுவை
தொகுஇப்படத்தின் நகைச்சுவை பகுதியில் ஊத்தப்பம் எப்படி ஊற்றுவது என்பது குறித்து வடிவேலு அறிவுறுத்தியது பட வெளியீட்டின்போது வைரல் ஆனது.[1]
குறிப்புகள்
தொகு- ↑ "Video: Fan fulfills Vadivelu's wish from the film 'Kurukshetram', clip goes viral - Times of India". The Times of India. 15 June 2020.