கெவாடியா

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு நகரம்

கெவாடியா (Kevadia), இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் நர்மதா மாவட்டத்தில் உள்ள ராஜ்பிப்லா வருவாய் வட்டத்தில் அமைந்துள்ள சிற்றூர் ஆகும். இவ்வூரில் சர்தார் வல்லபாய் பட்டேல் நினைவாக நிறுவப்பட்ட ஒற்றுமைக்கான சிலை அமைந்துள்ளது. இவ்வூரில் சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கு 250 கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.[1][2]இவ்வூரில் உள்ள கேவாடியா தொடருந்து நிலையம் இந்தியாவின் மும்பை, புது தில்லி, வாரணாசி, ரேவா, சென்னை, அகமதாபாத் மற்றும் வடோதரா (பிரதாப்நகர்) நகரங்களுடன் இணைக்கிறது.[3][4]

கெவாடியா
சிற்றூர், நர்மதா மாவட்டம், குஜராத்
ஒற்றுமைக்கான சிலை
கெவாடியா is located in குசராத்து
கெவாடியா
கெவாடியா
இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் நர்மதா மாவட்டத்தில் கேவாடியாவின் அமைவிடம்
கெவாடியா is located in இந்தியா
கெவாடியா
கெவாடியா
கெவாடியா (இந்தியா)
ஆள்கூறுகள்: 21°52′30″N 73°41′27″E / 21.87506°N 73.69074°E / 21.87506; 73.69074
நாடு இந்தியா
மாநிலம்குஜராத்
மாவட்டம்நர்மதா
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்6,788
மொழிகள்
 • அலுவல் மொழிகுஜராத்தி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்393151
வாகனப் பதிவுGJ-22
இணையதளம்gujaratindia.com

அருகில் உள்ள நகரங்கள் தொகு

மக்கள் தொகை பரம்பல் தொகு

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 1585 வீடுகள் கொண்ட கேவாடிய நகரத்தின் மொத்த மக்கள்தொகை 6,788 ஆகும். அதில் ஆண்கள் 3564 மற்றும் பெண்கள் 3224 ஆகவுள்ளனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 645 ஆகவுள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 905 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 89.81% ஆகவுள்ளது. மக்கள் தொகையில் இந்துக்கள் 95.95%, இசுலாமியர் 3.54%, கிறித்தவர் 0.22%, சமணர் 0.22% மற்றும் பிற சமயத்தவர் 0.07% ஆக உள்ளனர்.[5]

சுற்றுலா தலங்கள் தொகு

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கெவாடியா&oldid=3301973" இலிருந்து மீள்விக்கப்பட்டது