சக்தி (இதழ்)

சக்தி 1940 களில் இந்தியாவில் இருந்து மாதாந்தம் வெளிவந்த தமிழ் சிற்றிதழ் ஆகும். இதன் ஆசிரியர் வை. கோவிந்தன் ஆவார். இது அழகிய விளம்பரங்களையும், சுவையான கட்டுரைகளையும், அரிய புகைப்படங்களையும், கதை, கவிதை, துணுக்கு எனவும் அதிக பக்கங்களில் வெளியிட்டது.

வை. கோவிந்தனால் பல ஆண்டு காலம் நடத்தப்பட்ட 'சக்தி' மாத இதழ் தமிழில் ஒரு வித்தியாசமான இதழாகத் திகழ்ந்தது. துவக்கத்தில், 'டைம்' இதழ் அளவிலும் அமைப்பிலும் இது வந்து கொண்டிருந்தது. பிறகு புத்தக வடிவம் பெற்றது. கனத்த அட்டையுடன், அழகிய தோற்றப் பொலிவுடன், நல்ல வெள்ளைத் தாளில் அருமையான அச்சில் வந்த 'சக்தி' ஒரு சில கதைகள், ஒன்றிரண்டு கவிதைகளோடு, 'ரீடர்ஸ் டைஜஸ்ட்' பாணியில் பலசுவைக் கட்டுரைகளையும், அறிவுக்கு விருந்தாகும் விஷயங்களையும், சுவையான துணுக்குகளையும் சேகரித்து வழங்கியது. வெகு காலம்வரை தி. ஜ. ர. (தி. ஜ. ரங்கநாதன்) இதன் ஆசிரியராகப் பொறுப்பு வகித்தார். அவருக்குப் பிறகு சுப. நாராயணன் என்ற எழுத்தாளர் இதன் ஆசிரியராகச் செயலாற்றினார். சில வருடங்களுக்குப் பின்னர் கு. அழகிரிசாமியும் தொ. மு. சி. ரகுநாதனும் பொறுப்பேற்று ‘சக்தி' பத்திரிகையை உருவாக்கி வந்தனர். காலப்போக்கில், 'சக்தி' இதழ் நிறுத்தப்பட்டது.[1]

இந்த இதழ்களில் சில தமிழம் நாள் ஒரு நூல் திட்டத்தில் எண்ணிம வடிவில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

உசாத்துணைகள் தொகு

குறிப்புகள் தொகு

  1. வல்லிக்கண்ணன் (2004). "தமிழில் சிறு பத்திரிகைகள்". நூல். மணிவாசகர் பதிப்பகம். pp. 44–54. பார்க்கப்பட்ட நாள் 13 நவம்பர் 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சக்தி_(இதழ்)&oldid=3325673" இலிருந்து மீள்விக்கப்பட்டது