சம்பல் இட்லி, தோசை, இடியப்பம், புட்டு, ரொட்டி, சோறு, போன்ற முதன்மை உணவுகளுடன் சேர்த்து உண்ணப்படும் ஒரு பதார்த்தம் ஆகும். பொதுவாக சம்பல் தேங்காய்ப்பூ, மிளகாய், வெங்காயம், புளி, உப்பு போன்றவை சேர்த்து அரைக்கப்படும் அல்லது இடிக்கப்படும் உணவுப் பண்டமாகும். இதில் பல வகைகள் உண்டு.

வகைகள்

  • இடிசம்பல் (இடித்த சம்பல்)
  • அரைத்தசம்பல்
  • தேங்காய்ச்சம்பல்
  • மாசிக்கருவாட்டுச்சம்பல்
  • கத்தரிக்காய்ச்சம்பல்
  • மாங்காய்சம்பல்
  • சீனிச் சம்பல்
  • செவ்வரத்தம்பூச்சம்பல்
  • வல்லாரைச்சம்பல்
  • கீரைச்சம்பல்
  • கறிவேப்பிலைச்சம்பல்


  • மிளாகாய்ச் சம்பல்: பொதுவாக இதையே சம்பல் என்பர். செத்தல் மிளகாய், பச்சை மிளகாய் (பேச்சுத் தமிழ்: பச்ச மிளகாய்) இன இவற்றுள்ளும் இருவகை உண்டு.
  • மாசிச் சம்பல் - இது மாசிமீன் (மாசிக் கருவாடு) சேர்க்கப்படும் சம்பல்.
  • சீனிச் சம்பல் - வெங்காயத்துடன் சீனி சேர்த்துத் தயாரிக்கப்படும் சம்பல் பெரும்பாலும் சிங்களவர்கள் பாணுடன் (இந்தியத் தமிழ்: ரொட்டி) சேர்த்துச் சாப்பிடுவர்.
  • உள்ளிச் சம்பல் இஞ்சிச் சம்பல் போன்றவை வயிற்று பெருமலுக்கு நன்று.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சம்பல்&oldid=2223136" இலிருந்து மீள்விக்கப்பட்டது