சாமுண்டராஜா (சகமான வம்சம்)

சகமான ஆட்சியாளர்

சாமுண்டராஜா (Chamundaraja) (ஆட்சிக் 1045-1065 பொ.ச.) சாகம்பரியின் சௌகான் வம்சத்தைச் சேர்ந்த ஒரு இந்திய மன்னராவார். வடமேற்கு இந்தியாவில் இன்றைய இராஜஸ்தானின் சில பகுதிகளை உள்ளடக்கிய சபடலக்ச நாட்டை ஆட்சி செய்தார்.

சாமுண்டராஜா
சபடலக்ச நாட்டின் ஆட்சியாளர்
ஆட்சிக்காலம்சுமார்1045-1065 பொ.ச.
முன்னையவர்வீரராமன்
பின்னையவர்மூன்றாம் துர்லபராஜா
அரசமரபுசாகம்பரியின் சௌகான்கள்

வரலாறு தொகு

இரண்டாம் வாக்பதிராஜாவுக்குப் பின் ஆட்சிக்கு வந்த வீரராமனைத் தொடர்ந்து சாமுண்டராஜா பதவியேற்றார். வரலாற்றாசிரியர் ஆர்.பி.சிங்கின் கூற்றுப்படி, வீரராமனும் சாமுண்டராஜனும் வாக்பதிராஜாவின் மகன்கள் எனத் தெரிகிறது. [1] தசரத சர்மாவின் கூற்றுப்படி, வாக்பதிராஜாவிற்கு மூன்றாவதாக கோவிந்தராசன் என்ற மகனும் இருந்தார்.[2]

சாமுண்டராஜரின் முன்னோடியான வீரராமன் பரமார மன்னன் போஜனால் கொல்லப்பட்டார். பரமார்கள் சாகம்பரியை சிறிது காலம் ஆக்கிரமித்திருக்கலாம். வரலாற்றாசிரியர் தசரத சர்மாவின் கூற்றுப்படி, சாமுண்டராஜா அவர்களை நாதுல்லா சகமன ஆட்சியாளர் அனஹில்லாவின் ஆதரவுடன் வெளியேற்றியிருப்பார். அனஹில்லா போஜனின் படைத்தளபதி சாதாவைக் கொன்றதாகவும், சாகம்பரியைக் கைப்பற்றியதாகவும் நாதுல்லா சகமனாக்களின் சுந்தா கல்வெட்டு கூறுகிறது. [3]

இராணுவ நடவடிக்கைகள் தொகு

பிரபந்த கோசம், ஹம்மிர மகாகாவ்யம் மற்றும் சுர்ஜனா சரிதம் உள்ளிட்ட பல நூல்களால் பரிந்துரைக்கப்பட்டபடி, சாமுண்டராஜா ஒரு முஸ்லிம் இராணுவத்தை தோற்கடித்ததாக தோன்றுகிறது. பிரபந்த கோசம் இவரை "சுல்தானின் கொலையாளி" என்று விவரிக்கிறது, அதே சமயம் ஹம்மிரா மகாகாவ்யம் ஒரு "ஹெஜிம்-உத்-தினை" தோற்கடித்ததாகக் கூறுகிறது. சகமான இராச்சியம் கசனவித்துப் பேரரசின் எல்லையாக இருந்தது. மேலும் சாமுண்டராஜா கசனவித்துகளின் படையெடுப்பை முறியடித்திருக்கலாம். கஜினியின் மவ்தூத்துக்குப் பிறகு எந்த கசனவித்து சுல்தானும் தனிப்பட்ட முறையில் இந்தியாவிற்கு இராணுவத்தை வழிநடத்தியதாக அறியப்படவில்லை; சாமுண்டராஜாவால் கொல்லப்பட்ட "சுல்தான்" ஒரு கசனவித்து தளபதியாக இருக்கலாம். [4]

பிருத்விராஜ விஜயத்தின் கூற்றுப்படி, சாமுண்டராஜா நரபுராவில் ( அஜ்மீர் மாவட்டத்தில் உள்ள நவீன நார்வார் ) விஷ்ணு கோயிலை நிறுவினார். [1]

வாரிசுகள் தொகு

இவருக்குப் பிறகு இவரது மகன் மூன்றாம் துர்லபராஜா, [4] அவருக்குப் பிறகு இவரது மற்றொரு மகன் மூன்றாம் விக்ரகராஜா பதவியேற்றனர். [5] பிஜோலியா கல்வெட்டு இருவருக்கும் இடையில் ஒரு சிம்ஹத்தை வைக்கிறது. சிம்ஹதா துர்லபராஜாவின் மூத்த சகோதரராக இருந்திருக்கலாம் என்று வரலாற்றாசிரியர் தசரத சர்மா கருதுகிறார். [6]

சான்றுகள் தொகு

உசாத்துணை தொகு

  • Dasharatha Sharma (1959). Early Chauhān Dynasties. S. Chand / Motilal Banarsidass. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780842606189.
  • R. B. Singh (1964). History of the Chāhamānas. N. Kishore. இணையக் கணினி நூலக மைய எண் 11038728.