சித்தர்காடு பிரம்மபுரீஸ்வரர் கோயில்

தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில்

சித்தர்காடு பிரம்மபுரீஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில்,மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறைக்கருகிலுள்ள சித்தர்காடு என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயில் ஆகும். இந்த சிவத்தலத்தில் சீகாழி சிற்றம்பல நாடிகள் ஜீவசமாதி உள்ளது. இக்கோயில் கருவறையின் சுவரில் இது குறித்த கல்வெட்டும், 63 சிவலிங்கமும் வடிக்கப்பட்டுள்ளது.

சித்தர்காடு பிரம்மபுரீசுவரர் திருக்கோயில்
பெயர்
பெயர்:சித்தர்காடு பிரம்மபுரீசுவரர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:சித்தர்காடு
மாவட்டம்:மயிலாடுதுறை
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:பிரம்மபுரீசுவரர்
தாயார்:திரிபுரசுந்தரி

அமைவிடம் தொகு

கும்பகோணம்-மயிலாடுதுறை சாலையில் மயிலாடுதுறை பேருந்து நிலையத்திற்கு முன்பாக உள்ள பேருந்து நிறுத்தத்தின் அருகில் சித்தர்காடு உள்ளது. இப்பகுதியை சித்தவனம் என்றும் கூறுவர்.

இறைவன், இறைவி தொகு

இத்தலத்தில் உறையும் இறைவன் பிரம்மபுரீஸ்வரர். இறைவி திரிபுரசுந்தரி.

மயிலாடுதுறை சப்தஸ்தானம் தொகு

மயிலாடுதுறையில், திருவாவடுதுறை ஆதீனத்திற்குச் சொந்தமான ஐயாறப்பர் கோவிலில் நடைபெறும் சப்தஸ்தான திருவிழாவில் பங்கேற்கும் ஏழு சிவன் கோயில்களுள் இக்கோயிலும் ஒன்றாகும்.

பங்கேற்கும் பிற கோயில்கள்

இவ்வேழு திருக்கோவில்களின் சுவாமிகளும் (ஏழூர் தெய்வங்கள்) மயூரநாதர் கோவிலில் சங்கமிக்கும் சப்தஸ்தான விழா ஆண்டுதோறும் மயிலாடுதுறையில் நடைபெறுகிறது[1].

மேற்கோள்கள் தொகு