தன நந்தன்
மகாபோதிவம்ச நூலின்படி, தன நந்தன் (சமசுகிருதம்: धनानन्द) (ஆட்சிக் காலம்: கிமு 329 – 321) நந்த வம்சத்தின் இறுதிப் பேரரசர் ஆவார். தன நந்தன் எட்டாண்டுகள் நந்தப் பேரரசை ஆண்டார்.
தன நந்தன் | |
---|---|
பேரரசர் | |
![]() தன நந்தனின் பேரரசின் வரைபடம் | |
நந்த வம்சத்தின் இறுதிப் பேரரசர் | |
ஆட்சிக்காலம் | கிமு 329 – 321 |
முன்னையவர் | மகாபத்ம நந்தன் |
பின்னையவர் | சந்திரகுப்த மௌரியர், (நிறுவனர், மௌரியப் பேரரசு) |
அரசமரபு | நந்த வம்சம் |
தந்தை | மகாபத்ம நந்தன் |
கிரேக்க வரலாற்று ஆய்வாளார் புளூட்டாக்கின் கூற்றின்படி, மகாபத்ம நந்தனின் ஒன்பது மகன்களில் தன நந்தனும் ஒருவர் ஆவார். தன நந்தன் மற்றவர்களை இழிவுபடுத்தும் தீய குணங்களால் பொதுமக்கள் கடும் வெறுப்பு கொண்டிருந்தனர் என சந்திர குப்த மௌரியர் கூறுகிறார்.[1][2][3]
ஆட்சிப் பரப்புகள்தொகு
தன நந்தனின் ஆட்சி பரப்பு, பண்டைய பரத கண்டத்தின் கிழக்கில் வரலாற்று கால வங்காளம் [4][5], முதல் மேற்கில் மத்திய இந்தியா வரையும், வடக்கில் நேபாளம் முதல் தெற்கில் விந்திய மலைத்தொடர் வரை பரவியிருந்தது.[6]
தன நந்தனின் அமைச்சரவைதொகு
இவரது அமைச்சரவையில் பாண்டு, சுபாண்டு, குபேரன் மற்றும் சகதலா எனும் நான்கு அமைச்சர்கள் இருந்தனர்.[7] இவ்வமைச்சர்களில் சகதலா என்பவர், தன நந்தனின் கருவூலத்தை சூறையாடிதற்காக கடும் தண்டனை வழங்கினார். இதனால் கோபமுற்ற அமைச்சர் சகதலா, தன நந்தனை வீழ்த்த சாணக்கியரின் உதவியை நாடினார். [8]
கலிங்கத்துடன் உறவுகள்தொகு
தனநந்தனின் மகனும், இளவரசருமான சௌரிய நந்தனுக்கு கலிங்க நாட்டின் இளவரசி தமயந்தியை மணமுடித்தனர்.[9]
இராணுவம்தொகு
தன நந்தனின் போர்ப்படையில் 2,00,000 தரைப்படையினரும், 20,000 குதிரைப்படை வீரர்களும், 2,000 தேர்ப்படைகளும், 3,000 யானைப்படைகளும் இருந்ததாக கிரேக்க வரலாற்று ஆசிரியர் டையடோரஸ்[10] குறிப்பிடுகிறர். [4][11] கிரேக்க வரலாற்று ஆசிரியர் புளூட்டாக்கின் கூற்றுப்படி, தனநந்தனின் பெரிய போர்ப்படையில் இரண்டு இலட்சம் தரைப்படையினரும், 80,000 குதிரைப்படையினரும், 8,000 தேர்ப்படையும், 6,000 யானைப்படைகளும் இருந்தன.[12]
தனநந்தனின் வீழ்ச்சியும், இறப்பும்தொகு
தன நந்தனின் இறப்பிற்கான சூழ்நிலை அறுதியிட்டு கூற இயலவில்லை. மௌரியப் பேரரசின் நிறுவனரான சந்திரகுப்த மௌரியர் சாணக்கியரின் துணையுடன் தன நந்தனை கொன்று, நந்தப் பேரரசின் தலைநகரம் பாடலிபுத்திரத்தை கைப்பற்றியதாக கூறப்படுகிறது.
இதனையும் காண்கதொகு
அடிக்குறிப்புகள்தொகு
- ↑ Mahajan, V.D. (2010), "Chapter XVIII : The Rise of Magadha Section (h) The Nandas", Ancient India, S.Chand, pp. 251–253, ISBN 8121908876
- ↑ Bongard-Levin, G. (1979), A History of India, Moscow: Progress Publishers, p. 264
- ↑ http://www.perseus.tufts.edu/cgi-bin/ptext?doc=Perseus%3Atext%3A1999.01.0243&layout=&loc=62.1
- ↑ 4.0 4.1 Upinder Singh 2016, ப. 273.
- ↑ Sastri 1988, ப. 16.
- ↑ Radha Kumud Mookerji, Chandragupta Maurya and His Times, 4th ed. (Delhi: Motilal Banarsidass, 1988 [1966]), 31, 28–33.
- ↑ Rice 1889, ப. 8.
- ↑ Rice 1889, ப. 9.
- ↑ Pillai, Rajat (2011). Chandragupta: Path Of A Fallen Demi-God. Cedar Books. பக். 296. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8122312756. https://books.google.com/books?id=VmezKjG8ijUC&pg=PT136.
- ↑ Diodorus
- ↑ Mookerji 1988, ப. 34.
- ↑ Bongard-Levin, G. (1979). A History of India. Moscow: Progress Publishers. பக். 264.
மேற்கோள்கள்தொகு
- Mookerji, Radha Kumud (1988) [first published in 1966], Chandragupta Maurya and his times (4th ed.), Motilal Banarsidass, ISBN 81-208-0433-3
- Singh, Upinder (2016), A History of Ancient and Early Medieval India: From the Stone Age to the 12th Century, Pearson Education, ISBN 978-93-325-6996-6
- Sastri, K. A. Nilakanta, ed. (1988) [1967], Age of the Nandas and Mauryas (Second ed.), Delhi: Motilal Banarsidass, ISBN 81-208-0465-1
- Rice, B. Lewis (1889), Inscriptions at Sravana Belgola : a chief seat of the Jains, Bangalore: Mysore Govt. Central Press