தரவத் அம்மாளு அம்மா

எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர்

தாரவத் அம்மாளு அம்மா (Tharavath Ammalu Amma) என்பவர் மலையாள மொழி எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர் ஆவார். இவர் பிரித்தானிய இந்தியாவில் (இன்றைய கேரளா, இந்தியா) சென்னை மாகாணத்தில் பிறந்தார். சமசுகிருதம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளிலிருந்து பல படைப்புகளை மலையாளத்திற்கு மொழிபெயர்த்தார்.

தரவத் அம்மாளு அம்மா
அம்மாளு அம்மா
அம்மாளு அம்மா
பிறப்பு(1873-04-26)26 ஏப்ரல் 1873
இந்தியா
இறப்பு6 சூன் 1936(1936-06-06) (அகவை 63)
தொழில்மொழிப்பெயர்ப்பாளர், எழுத்தளர்

அம்மாளு அம்மாவின் 1914 நாவலான கமலாபாய் ஆதவ லக்ஷ்மிவிலாசத்திலே கொலபாதகம் (கமலாபாய் அல்லது லட்சுமி விலாசத்தில் நடந்த கொலை) மலையாளத்தில் ஒரு பெண் எழுதிய முதல் துப்பறியும் நாவல் ஆகும். அப்போதைய கொச்சி இராச்சியத்தின் மிக உயரிய இலக்கிய விருதான "சாகித்திய சாகி" மறுக்கப்பட்ட ஒரே எழுத்தாளர் இவர் ஆவார்.

வாழ்க்கை தொகு

அம்மாளு அம்மா ஏப்ரல் 26, 1873-ல், தற்போதைய கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள தராவத் குடும்பத்தில் தாராவத் கும்மினியம்மா மற்றும் வட்டாட்சியராக இருந்த சிஞ்சம்வீட்டில் சங்கரன் நாயர் ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார்.[1][2] திப்பு சுல்தானின் படையெடுப்பின் போது மலபாரிலிருந்து பாலக்காடு பரளிக்கு வந்தவர்கள் தாராவத் அம்மாளு அம்மாவின் முன்னோர்கள்.[3] இவருக்கு ஒரு சகோதரர், மருத்துவர் டி. எம்.நாயர்.[1] இவரது ஆசிரியரால் கடிதங்கள் மற்றும் ஆரம்ப பாடங்கள் கற்பிக்கப்பட்டன. இதனுடன் சமசுகிருதம் மற்றும் இசையையும் வீட்டில் படித்தார்.[4] இதன் பிறகு இவர் தனது தந்தையிடமிருந்து கணிதத்தையும் பின்னர் தமிழ் மொழியையும் கற்கத் தொடங்கினார்.[4]

அம்மாளு அம்மா மலையாளம், சமசுகிருதம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் நன்கு புலமை பெற்றிருந்தார்.[1] கொச்சி மகாராஜா இவருக்கு "சாகித்திய சாகி" விருதை வழங்கத் தயாராக இருந்தார். ஆனால் இவர் அதை நிராகரித்தார். அப்போதைய கொச்சி இராச்சியத்தின் மிக உயரிய இலக்கிய விருதான "சாகித்ய சாகி" மறுக்கப்பட்ட ஒரே எழுத்தாளர் இவர்.[3]

அம்மாளு அம்மா சூன் 6, 1936-ல் இறந்தார்.[1]

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

அம்மாளு அம்மா மூன்று முறை திருமணம் செய்து கொண்டார்.[2] இவருக்கு முதலில் 15 வயதில் திருமணம் நடந்தது. புன்னத்தூர் கோவிலகத்தின் அதிபதியான இவரது முதல் கணவர், இரண்டு குழந்தைகள் பிறந்தவுடன் அவரை விட்டுப் பிரிந்து சென்று விட்டார்.[3] தாயின் வற்புறுத்தலால், மருத்துவராக இருந்த இராமாபுரத்தைச் சேர்ந்த கிருஷ்ண வாரியரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். வாரியார் மூன்று மகள்களைப் பெற்ற சிறிது நேரத்திலேயே இறந்தார்.[3] முதல் இரண்டு திருமணங்களின் குழந்தைகள் வெவ்வேறு காலங்களில் இறந்தனர். இரண்டு மகள்கள் மட்டுமே உள்ளனர்.[3] மூன்றாவது திருமணம் வடக்கும்தாரா வாரியத்தைச் சேர்ந்த உன்னிகிருஷ்ண வாரியார் என்பவருடன் நடைபெற்றது.[3]

இலக்கிய வாழ்க்கை தொகு

அம்மாளு அம்மாவின் 1914 நாவலான கமலாபாய் ஆதவ லக்ஷ்மிவிலாசத்திலே கொலபாதகம் (கமலாபாய் அல்லது லட்சுமிவிலாசத்தில் நடந்த கொலை) மலையாளத்தில் ஒரு பெண் எழுதிய முதல் துப்பறியும் நாவல் ஆகும். [2] அம்மாளு அம்மாவின் பயணக் குறிப்பு ஒரு தீர்த்த யாத்ரா, கோழிக்கோட்டில் உள்ள நார்மன் அச்சகத்தின் மூலம் 1925-ல் வெளியிடப்பட்டது. இது 1921-ல் இவர் தனது சகோதரர் டி. எம். நாயரின் அஸ்தியுடன் வாரணாசிக்குச் சென்றபோது அங்கு அம்மாளு அம்மா பார்வையிட்ட புனித கோயில்கள் மற்றும் தலங்களின் தொகுப்பாகும்.[5] பிற படைப்புகள் சந்திரிகா, பாலபோதினி, கிருஷ்ண பக்தி, கோமளவல்லி (2 தொகுதி), பக்தமலையில் சூகங்கள் (பக்தமாலா சிறுகதைகள்) [2] இவற்றில் சில கடந்த காலங்களில் பாடப்புத்தகங்களாக இருந்தன.[2]

மொழிபெயர்ப்பாளராக இவர் சமசுகிருதம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளின் பல படைப்புகளை மலையாளத்திற்கு அறிமுகப்படுத்தினார். இவர் ஒரு பௌத்த பக்தராக இருந்தார். மேலும் புத்தரின் வாழ்க்கை வரலாறு, ஆசிய ஜோதி, இவரால் மலையாளத்தில் புத்த கதா என மொழிபெயர்க்கப்பட்டது.[2] 'சர்வ வேதாந்த சித்தாந்த சார சம்கிரஹம் மற்றும் சிவ பக்த விலாசம் போன்ற சமசுகிருத படைப்புகளையும் மலையாளத்தில் மொழிபெயர்த்தார்.[2] 1912-ல் வெளியிடப்பட்ட கிருஷ்ண பக்தி சந்திரிகா, சமஸ்கிருத குறு நாடகத்தின் மொழிபெயர்ப்பாகும்.[4] 1907-ல் வெளியிடப்பட்ட பக்தமாலா (3 தொகுதி) அதே பெயரில் சமஸ்கிருத படைப்பின் மொழிபெயர்ப்பாகும்.[4] சிறீ சங்கர விஜயம் என்பது கும்பகோணம் சங்கராச்சாரியாஸ்வாமிகளின் சீடர்களின் வேண்டுகோளின் பேரில் 1928-ல் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு தமிழ்ப் படைப்பு.[4] 1911-ல் வெளியான லீலா தமிழ் நாவலின் மொழியாக்கம்.[4]

அம்மாளு அம்மா 1929 மற்றும் 1930-ல் மாநில அளவிலான இலக்கிய அமைப்பான சாகித்திய பரிசத்தின் கூட்டங்களுக்குத் தலைமை தாங்கினார்.[2]

செயல்பாடு தொகு

திருவிதாங்கூர் மன்னர் சிறீமூலம் திருநாளால் திருவிதாங்கூரிலிருந்து பிள்ளை நாடு கடத்தப்பட்டபோது சுதேசாபிமானி ராமகிருஷ்ண பிள்ளைக்கும் இவரது குடும்பத்தினருக்கும் அடைக்கலம் அளித்து திருவிதாங்கூர் வரலாற்றில் இடம் பிடித்தார் அம்மாளு அம்மா.[1]

பெண்ணியவாதியும் பெண் சமத்துவவாதியுமான அம்மாளு அம்மா, ஆண்களுக்கு நிகராகவோ அல்லது அதிகமாகவோ இலக்கிய ரசனைக்குப் பெண்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.[3] ஒருமுறை, லக்ஷ்மி பாய் இதழில் வெளியான ஸ்திரீகளுடே சாஹித்யவாசனா (பெண்களின் இலக்கிய ரசனை) கட்டுரையில், இவர் பின்வருமாறு எழுதினார், "பெண்களுக்கு இலக்கிய ரசனை இருக்கிறதா என்று சிலருக்குச் சந்தேகம் இருப்பதாக எனக்குத் தெரியும். ஆனால் இலக்கியத்தின் சாராம்சம் ஒவ்வொரு பெண்ணிலும் உள்ளது என்று நான் கூறுவேன்."[4][6]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 2.7 "തരവത്ത് അമ്മാളു അമ്മ; 1914 ൽ ഡിറ്റക്ടീവ് നോവലെഴുതിയ മലയാളി സ്ത്രീ". Mathrubhumi (in மலையாளம்). பார்க்கப்பட்ட நாள் 2023-03-07.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 Rajeev Kumar, M (2021-09-24). "ദിഗംബര സ്മരണകൾ; "സാഹിത്യസഖി" വാങ്ങാൻ കൂട്ടാക്കാത്ത തരവത്ത് അമ്മാളു അമ്മ; എം.രാജീവ് കുമാർ". anweshanam.com (in மலையாளம்). பார்க்கப்பட்ட நாள் 2023-03-10.
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 4.6 "തരവത്ത് അമ്മാളുവമ്മ". Kerala Women (in மலையாளம்). Government of Kerala. 2020-03-01. பார்க்கப்பட்ட நாள் 2023-03-10.
  5. admin. "ഒരു തീര്‍ത്ഥയാത്ര". Keralaliterature.com (in மலையாளம்). பார்க்கப்பட்ட நாள் 2023-03-10.
  6. "International Women's Day: Reminiscing first-gen of feminist writers from Kerala". English Mathrubhumi (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-03-10.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தரவத்_அம்மாளு_அம்மா&oldid=3935004" இலிருந்து மீள்விக்கப்பட்டது