தும்காரி சுலு

தும்காரி சுலு (Tumhari Sulu) என்பது சுரேஷ் திரிவேணி எழுதி இயக்கிய 2017 இந்திய இந்தி மொழி நகைச்சுவை-நாடகத் திரைப்படமாகும், இது பூஷண் குமார், தனுஜ் கார்க், கிரிஷன் குமார், அதுல் காஸ்பேகர் மற்றும் சாந்தி சிவராம் மைனி ஆகியோரால் டி-சீரிஸ் மற்றும் எலிப்சிஸ் என்டர்டெயின்மென்ட் பதாகைகளின் கீழ் தயாரிக்கப்பட்டது.[4]

தும்காரி சுலு
இயக்கம்சுரேஷ் திரிவேணி
தயாரிப்புபூஷன் குமார்
தனுஜ் கார்க்
கிரிசன் குமார்
அதுல் காஷ்பேகர்
சாந்தி சிவராம் மைனி
கதைகதை & திரைக்கதை:
சுரேஷ் திரிவேணி
வசனம் & கூடுதல் திரைக்கதை:
விஜய் மௌர்யா
இசைபாடல்கள்:
குரு ரந்தவா
ரஜத் நக்பால்
தனிஷ்க் பக்சி
அமர்த்யா போபோ ரகுத்
இலட்சுமிகாந்த்-பியாரேலால்
தும்காரி சுலு
பின்னணி இசை:
கரன் குல்கர்னி
நடிப்புவித்யா பாலன்
நேஹா துபியா
மானவ் கவுல்
அபிசேக் சர்மா
ஒளிப்பதிவுசவுர்பா கோஸ்வாமி
படத்தொகுப்புசிவ்குமார் வி. பனிக்கர்
கலையகம்டி-சீரிஸ் பிலிம்ஸ்
எலிப்சிஸ் என்டர்டெய்ன்மென்ட்
விநியோகம்ஏஏ பிலிம்ஸ்[1]
வெளியீடுநவம்பர் 17, 2017 (2017-11-17)
ஓட்டம்140 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிஇந்தி
ஆக்கச்செலவு20 கோடி[2]
மொத்த வருவாய்51.39 கோடி [3]

தும்ஹாரி சுலு என்ற பெயரில் வித்யா பாலன் ஒரு லட்சிய இல்லத்தரசி கதாபாத்திரத்தில் நடிக்கிறார், அவர் இரவு நேர உறவு ஆலோசனை நிகழ்ச்சிக்கு வானொலியில் சொல்லாடல் நிகழ்த்துபவராக மாறுகிறார். மானவ் கவுல் மற்றும் நேஹா துபியா ஆகியோர் முறையே சுலுவின் கணவர் மற்றும் முதலாளியாக இணைந்து நடித்துள்ளனர். தும்ஹாரி சுலு 17 நவம்பர் 2017 வெளியிடப்பட்டது, இது விமர்சன ரீதியாகவும், கண்ணியமான வசூல்ரீதியான வெற்றியாகவும் மாறியது, இது 200 மில்லியன் ரூபாய் பட்ஜெட்டில் 513.9 மில்லியனுக்கும் அதிகமாக வசூலித்துக் கொடுத்தது. 

63வது பிலிம்பேர் விருதுகளில், தும்ஹாரி சுலு 9 பரிந்துரைகளைப் பெற்றது. இதில் கவுல் சிறந்த துணை நடிகர் விருதினையும் வித்யா பாலன் தனது நான்காவது சிறந்த நடிகை விருதையும் வென்றனர். இது தமிழில் காற்றின் மொழி (2018) என்ற பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டது, இதில் வித்யாபாலன் நடித்த பாத்திரத்தை ஜோதிகா மீண்டும் நடித்தார்.[5]

கதைக்களம் தொகு

சுலோச்சனா துபே, சுலு என்ற புனைப்பெயர் கொண்ட வித்யா பாலன், விராரில் தனது குடும்பத்துடன் வசிக்கும் ஒரு நடுத்தர வர்க்க இல்லத்தரசி ஆவார். அவர் தனது கணவர் அசோக் (மானவ் கவுல்) மற்றும் 11 வயது மகன் பிரணவ் ஆகியோருடன் தனது வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்கிறார். சுலு ஒரு உழைக்கும் பெண்ணாக இருக்க வேண்டும் என்று கனவு காண்கிறார், ஆனால், அவளால் உயர்நிலைப் பள்ளியை முடிக்க முடியாததால், அவளால் அலுவல்ரீதியான வேலைகளுக்கு விண்ணப்பிக்க முடியவில்லை. அவளது மூத்த இரட்டை சகோதரிகள் அவளை கேலி செய்கிறார்கள், சுலு தனது கல்வியின் காரணமாக அவர்கள் தன்னைத் தாழ்த்தியதாகக் கருதுகிறார்கள். அசோக் ஒரு தையல் நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிகிறார், அவரைத் தவிர அனைவரும் நியாயமற்றவர்கள் என்பதாலும் அங்கு பணிபுரிபவர்களில் மற்றவர்கள் அறுபது வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதால் வெறுப்பூட்டும் வேலையாக இருப்பதாக உணர்கிறார். அதற்கு மேல், நிறுவனம் உரிமையாளரின் பேரனால் கையகப்படுத்தப்படுகிறது, அவர் மிகவும் முரட்டுத்தனமாக இருக்கிறார்.

ஒரு நாள், சுலு தனக்கு பிடித்த வானொலி நிலையம் நடத்தும் போட்டியில் வெற்றி பெற்று, தனது பரிசை சேகரிக்க நிலையத்திற்குச் செல்கிறார். அங்கு, ஒரு வானொலி வர்ணனையாளர் பணிக்கான சுவரொட்டி விளம்பரத்தைப் பார்த்து, இதுதான் தான் செய்ய வேண்டிய வேலை என்று உணர்கிறாள். சுலு முதலாளி மரியாவை (நெஹா துபியா) சந்திக்கிறார், அவர் தனது இயல்பை சுவாரசியமாக வெளிப்படுத்துகிறார், மேலும் ஆடிஷனுக்கு ஒரு வாய்ப்பை வழங்குகிறார். ஆடிஷன் முழுவதும் சிரிக்கும் சுலு, இறுதியில், மயக்கும் தொனியில் 'ஹலோ' என்று கூறுகிறார், இது மரியாவை ஈர்க்கிறது. மக்கள் தங்கள் பிரச்சினைகளைப் பற்றி பேச தன்னை அழைக்கும் ஒரு கால்-இன் நைட் ஷோவை சுலு செய்ய முடியுமா என்று மரியா கேட்கிறார், அவள் ஒப்புக்கொள்கிறாள்.

சுலு தன்னுடன் கலந்து பேசாமல் வேலையை ஏற்றுக்கொண்டதால் அசோக் முதலில் எரிச்சலடைகிறார், ஆனால், அவரது மனைவி மீதான அன்பின் காரணமாக மனந்திரும்புகிறார். தனது முதல் நாளில், சுலு ஒரு எரிச்சலூட்டும் அழைப்பாளரை எதிர்கொள்கிறார், அவர் தங்கள் அரட்டையை ஒரு மோசமான ஒன்றாக மாற்ற முயற்சிக்கிறார், ஆனால், சுலுவால் அதைத் தந்திரமாக கையாள முடிகிறது. அடுத்து, அவள் பாட வேண்டும் என்ற கோரிக்கையைப் பெறுகிறாள், மேலும் அவள் தனது கணவருக்காக மட்டுமே பாடும் ஒரு பாடலை உற்சாகத்துடன் பாடிக்காட்டுறாள். அசோக் அவளுடைய நடத்தையால் எரிச்சலடைகிறார், அதே போல் தனது புதிய முதலாளியால் விரக்தியடைகிறார், அசோக் சுலுவை மோசமாக நடத்துகிறார். சுலுவின் குடும்பத்தினர் அவரது வானொலி நிகழ்ச்சியை ஏற்கவில்லை. அவர் அந்நிகழ்ச்சியைத் தொகுப்பதிலிருந்து வெளியேற வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால், அசோக் அவளுக்கு ஆதரவாக நிற்கிறார். நிகழ்ச்சி வெற்றிகரமாக மாறுகிறது. மேலும், சுலு தனது வேலையை இரசித்து, செய்து வருவதோடு நம்பிக்கையுடன் வளர்ந்து வருகிறார். இருப்பினும், அசோக் தனது வேலை மற்றும் அவளுடைய வேலை குறித்து வீட்டில் தனது விரக்தியை வெளிப்படுத்துகிறார். சுலுவின் வாழ்க்கை வேலையில் உயர்ந்ததாகவும், வீட்டில் தாழ்ந்ததாகவும் மாறுகிறது.

ஒரு நாள், பிரணவின் பள்ளியின் முதல்வர், அசோக்கிடம் இருந்து திருடிய வயதுவந்தோர் தொலைபேசி வீடியோக்களை றற்ற குழந்தைகளிடம் கட்டணம் வசூலித்துக் காட்டியதற்காகவும், தனது தந்தையின் கையொப்பங்களை போலியாகக் காட்டியதற்காகவும் முறையிடுகிறார்.. பிரணவ் பள்ளியிலிருந்து இடைநீக்கம் செய்யப்படுகிறார், இது வீட்டில் ஒரு தீவிரமான பிரச்சினையாக மாறுகிறது. சுலுவின் சகோதரிகள், சுலு தற்போது ஏற்றுள்ள வானொலி வர்ணனையாளர் வேலையின் காரணமாக தனது மகனை புறக்கணித்ததாகவும், அவரது குறைந்த அளவிலான கல்வி அவரை பாதித்து வருவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். அவர் தனது பணியை விட்டு வெளியேற வேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள். ஆனால், சுலு அவர்களின் நிபந்தனைகளை நிராகரித்து கடுமையான நிலைப்பாட்டை எடுக்கிறார். பின்னர் பிரணவ் காணாமல் போனதாக அவளுக்கு அழைப்பு வருகிறது. சுலு மற்றும் அசோக் பிரணவ் எழுதிய ஒரு குறிப்பைக் கண்டுபிடிக்கின்றனர். அதில் தான் செய்ததைப் பற்றி வெட்கப்படுவதாகவும், தனது செயல் காரணமாக தனது தாயார் தனது வேலையை விட்டு வெளியேற வேண்டியிருந்தது குறித்து வருத்தப்படுவதாகவும் வெளிப்படுத்துகிறார். பிரணவ் தனது தந்தையிடம் தனது தாயையும் அவரது வேலையையும் ஆதரிக்குமாறு கேட்டுக்கொள்கிறார். அசோக்கும் சுலுவும் தங்கள் மகனைத் தேடும்போது சமரசம் ஆகிறார்கள்.

அடுத்த நாள் போலீசார் பிரணவைக் கண்டுபிடித்து வீட்டிற்கு அழைத்து வருகிறார்கள். வீட்டில் அது ஏற்படுத்தும் மோதலை தன்னால் கையாள முடியவில்லை என்று நினைத்து, சுலு நிகழ்ச்சியில் இருந்து விலகுகிறார். அவள் புறப்படும்போது, வரவேற்பாளர் சிற்றுண்டி பரிமாறும் நபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுவதை சுலு காண்கிறாள். அவளுக்கு ஒரு யோசனை உள்ளது, மேலும் மரியாவிடம் சிற்றுண்டி சேவை ஒப்பந்தத்தை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறாள். இறுதியில், அசோக் இப்போது சிற்றுண்டி வணிகத்தை நிர்வகித்து வருகிறார். மேலும், சுலு தனது வானொலி வருணனையாளர் வேலையை மீண்டும் தொடங்குகிறார். வீடு மற்றும் அவரது தொழில் வாழ்க்கையை தனது சொந்த பாணியில் நிர்வகிக்கிறார்.

மேற்கோள்கள் தொகு

  1. "Meet Anil Thadani, the distributor who backed successful films like 'DDLJ', 'Baahubali' series, 'KGF' franchise, 'Pushpa' and 'Kantara'". தி எகனாமிக் டைம்ஸ். Archived from the original on 21 November 2022. பார்க்கப்பட்ட நாள் 2 July 2023.
  2. "Tumhari Sulu Box Office Collection Day 3: Vidya Balan's film had a "super-strong weekend"". என்டிடிவி. 20 November 2017 இம் மூலத்தில் இருந்து 21 November 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20171121034525/https://www.ndtv.com/entertainment/tumhari-sulu-box-office-collection-day-3-vidya-balans-film-had-a-super-strong-weekend-1777717. 
  3. Hungama, Bollywood (18 November 2017). "Box Office: Worldwide collections and day wise break up of Tumhari Sulu – Bollywood Hungama". Bollywood Hungama. Archived from the original on 15 February 2019. பார்க்கப்பட்ட நாள் 15 February 2019.
  4. "Vidya Balan's Tumhari Sulu starts shooting. See pic". இந்தியன் எக்சுபிரசு. 31 January 2017 இம் மூலத்தில் இருந்து 31 January 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170131124541/http://indianexpress.com/article/entertainment/bollywood/vidya-balan-tumhari-sulu-see-pic-4500804/. 
  5. Lakshmi, V. (16 November 2018). "Kaatrin Mozhi". The Times of India இம் மூலத்தில் இருந்து 17 November 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20181117014527/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movie-reviews/kaatrin-mozhi/movie-review/66642775.cms. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தும்காரி_சுலு&oldid=3913891" இலிருந்து மீள்விக்கப்பட்டது