தேஜ் பகதூர் சப்ரு

சர் தேஜ் பகதூர் சப்ரு, (Tej Bahadur Sapru) (8 டிசம்பர் 1875  – 20 சனவரி 1949) இவர் ஓர் முக்கிய இந்திய சுதந்திர போராட்ட வீரரும், வழக்கறிஞரும், அரசியல்வாதியுமாவார். இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் இவர் ஓர் முக்கிய நபராக இருந்தார். இவர் இந்திய அரசியலமைப்பை உருவாக்க உதவினார். பிரிட்டிசு ஆட்சியில் இந்தியாவில் லிபரல் கட்சியின் தலைவராக இருந்தார்.

[ மேற்கோள் தேவை ]

ஆரம்பகால வாழ்க்கை மற்றும் தொழில் தொகு

இவர், ஒன்றிணைந்த பிரதேசங்களின் (இப்போது உத்தரப் பிரதேசம் ) அலிகாரில் பிறந்தார். இவர் காஷ்மீர் இந்து குடும்பத்த்தச் சேர்ந்தவர். ஆக்ரா கல்லூரியில் கல்வி பயின்றார். பின்னர்அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கறிஞராக பணியாற்றினார். அங்கு வருங்கால தேசியவாத தலைவரான புருசோத்தம் தாசு டாண்டன் கீழ் வழக்கறிஞராகப் பணியாற்றினார். பின்னர் பனாரசு இந்து பல்கலைக்கழகத்தின் வேந்தராக பணியாற்றினார் . 1930 திசம்பர் 13 அன்று இவர் மத்திய கோவிலில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் 1932 சனவரி 14 அன்று பட்டியில் அழைக்கப்படாமல் விலகினார். [1]

அரசியல் வாழ்க்கை தொகு

இவர், ஐக்கிய மாகாணங்களின் சட்டமன்றம் (1913-16) , பேரரசின் சட்டமன்ற அமைப்பு (1916-20), ஆளுநரின் அமைப்பில் (1920–23) சட்ட விவகாரங்களுக்கான உறுப்பினர் போன்றவற்றில் பணியாற்றினார். பிரிட்டிசு ஆட்சிக்கு எதிராக சத்தியாகிரகத்தை மகாத்மா காந்தி தொடங்கிய பின்னர் இவரும் இந்திய தாராளவாதிகளும் காங்கிரசுடன் இணைந்து போராடினர். (1920–22) வரை ஒத்துழையாமை இயக்கத்தை சப்ரு ஆதரித்தார். 1923 ஆம் ஆண்டின் பேரரசின் பிறந்தநாள் கௌரவப் பட்டியலில் வீரத்திருத்தகை, இந்திய நட்சத்திரங்களின் ஆணை ஆனார். 1927 ஆம் ஆண்டின் முற்பகுதியில், இந்திய அரசியலமைப்பை உருவாக்க இவர் ஒரு அனைத்து கட்சி மாநாட்டை ஏற்பாடு செய்தார். 1928 ஆம் ஆண்டில், அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் குறித்த நேரு குழு அறிக்கையை உருவாக்க இவர் உதவினார். இது இந்திய அரசியலமைப்பின் பரிணாமம் தொடர்பான மிக முக்கியமான ஆவணமாக ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. இந்திய வரலாற்றில் முதல்முறையாக, கூட்டாட்சி அரசியலின் ஒரு பகுதியாக சுதேச மாநிலங்களை இந்தியாவின் மற்ற பகுதிகளுடன் ஒன்றிணைக்க முன்மொழிந்தது.

தனிப்பட்ட வாழ்க்கை தொகு

ஜமீந்தாரான அம்பிகா பிரசாத் சப்ரு என்பவருக்கும், அவரது மனைவி கௌரா சப்ரு என்பவருக்கும் ஒரே மகனானப் பிறந்தார். [2]

இவருக்கு பிரகாஷ் நரேன் சப்ரு, திரிஜுகி நரேன் சப்ரு, ஆனந்த் நரேன் சப்ரு என்ற மூன்று மகன்களும், சகதம்பசுவரி , புவனேசுவரி என்ற ஒரு மகள்களும் பிறந்தனர்.

இவர், இந்தியா சுதந்திரம் பெற்ற பதினேழு மாதங்களுக்குப் பிறகு 1949 சனவரி 20 அன்று அலகாபாத்தில் காலமானார்.

மேற்கோள்கள் தொகு

  1. Sturgess, H.A.C. (1949). Register of Admissions to the Honourable Society of the Middle Temple. Butterworth & Co. (Publishers) Ltd.: Temple Bar. Vol. 3, p.927.
  2. Ahmad, Khalid Bashir (2018-02-02). "Iqbal's Brahmin Cousins". Medium (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-08-17.

குறிப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேஜ்_பகதூர்_சப்ரு&oldid=3285782" இலிருந்து மீள்விக்கப்பட்டது