நவக்கிரி, இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமம் கிழக்குப் பிரதேச செயலாளர் பிரிவுக்குள் அடங்கியுள்ள ஒரு ஊராகும்.[1] சுன்னாகத்தில் இருந்து புத்தூர் நோக்கிச் செல்லும் வீதிக்கு வடக்கில், சுன்னாகத்தில் இருந்து ஏறத்தாழ 7 கிமீ தொலைவில் உள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து நவக்கிரிக்கான தூரம் பலாலி வீதி வழியே ஏறத்தாழ 16 கிமீ. இவ்வூரைச் சுற்றிலும், ஈவினை, அச்சுவேலி, சிறுப்பிட்டி, வசாவிளான், ஆவரங்கால், புத்தூர் ஆகிய ஊர்கள் காணப்படுகின்றன.

யாழ்ப்பாண மாவட்டத்தில் பெயர் பெற்ற வற்றாக் கிணறு எனப்படும் நிலாவரைக் கிணறு இந்த ஊரிலேயே உள்ளது.

நிறுவனங்கள் தொகு

நவக்கிரியில் முதலாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்புவரை கற்பிக்கும் தமிழ்க் கலவன் பாடசாலை ஒன்று உள்ளது. இவ்வூரில் உள்ள கோயில்களுள் நவக்கிரி மாணிக்கப் பிள்ளையார் கோயில் எனப்படும் பிள்ளையார் கோயிலும் ஒன்று.

மேற்கோள்கள் தொகு

  1. Statistical Handbook 2014, Jaffna Secretariat, 2014, p 31.

இவற்றையும் பார்க்கவும் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நவக்கிரி&oldid=2854171" இலிருந்து மீள்விக்கப்பட்டது