நிருபத்தேந்திரதேவி

நிருபத்தேந்திரதேவி அல்லது நிர்பேந்திரதேவி (ஆங்கிலம்: Nrpendradevi அல்லது Nrpendradevi of Shambhupura; கெமர்: ន្ឫបតីន្ទ្រទេវីទី២; IAST: Nṛpatendradevī) என்பவர் கெமர் பேரரசை (Khmer Empire) சார்ந்த சென்லா இராச்சியத்தின் (Chenla Kingdom) ஒரு பகுதியான சம்புபுரத்தின் மகாராணி ஆவார். சென்லா இராச்சியம் தற்போது கம்போடியாவில் ஒரு பகுதியாக உள்ளது.[1]

நிருபத்தேந்திரதேவி
Nrpendradevi of Sambhupura
ន្ឫបតីន្ទ្រទេវីទី២
சம்புபுரர மகாராணியார்
(8-ஆம் நூற்றாண்டு)
முன்னையவர்இராணி இந்திராணி
(Queen Indrani)
பின்னையவர்செயந்திரபா
(Queen Jayendrabha)
பிறப்புஈசானபுரம்
இறப்புC. 750
ஈசானபுரம்
துணைவர்இராசேந்திர வர்மன்
(Rajendravarman of Chenla)
மரபுஈசானபுரம்
கவுந்தினியம்
சென்லா
அரசமரபுசம்புபுரம்
(Som Vong)
தந்தைபுஷ்பகரசன்
(Pushkaraksha)
@ (Indraloka)
தாய்இராணி இந்திராணி
(Queen Indrani)
மதம்இந்து சமயம்

ஈசானபுரம் எனும் நிலப்பகுதி சம்புபுரம் (Sambhupura) என்றும் அழைக்கப்பட்டது. சம்புபுரம் எனும் பெயர்தான் ஈசானபுரம் என மாற்றம் அடைந்தது. சம்புபுரம் எனும் சொல்லுக்குப் பதிலாக ஈசானபுரம் எனும் பெயரைப் பயன்படுத்துகிறார்கள்.

நிருபத்தேந்திரதேவியின் தந்தையார் பெயர் புஷ்கரசன் (King Pushkaraksha); இந்திரலோகன் (Indraloka) எனும் மற்றொரு பெயரும் அவருக்கு உள்ளது. தாயாரின் பெயர் இராணி இந்திராணி (Queen Indrani of Sambhupura).

பொது தொகு

இராணி இந்திராணிக்கு சம்புவர்மன் (Sambhuvarman) எனும் (உருத்திரவர்மன்) என்ற ஒரு மகனும், நிருபத்தேந்திரதேவி (Nipatendradevi) என்ற ஒரு மகளும் இருந்தனர். இந்திராணியின் மகன் உருத்திரவர்மன்; சென்லாவின் இளவரசியும், தன் தந்தையின் சகோதரியான முதலாம் நரேந்திரதேவியின் (Narendradevi I) மகளுமான இரண்டாம் நரேந்திரதேவியை (Narendradevi (II) மணந்தான்.[2]

நிருபத்தேந்திரதேவியின் தந்தை அநேகமாக இராணி செயதேவியின் (Queen Jayadevi) மகனாக இருக்கலாம்; மற்றும் திருமணத்திற்குப் பிறகு நிருபத்தேந்திரதேவியின் தாயார் இராணி இந்திராணியுடன் இணை ஆட்சியாளராக இருந்து இருக்கலாம் என்று அறியப்படுகிறது.

சென்லா இளவரசி நரேந்திரதேவி தொகு

இராணி நிருபத்தேந்திரதேவி தன் சகோதரன் இளவரசர் சம்புவர்மனுக்கு (உருத்திரவர்மன்) பதிலாகத் தன் தாயாரிடம் இருந்து அரியணையைப் பெற்றார்; உருத்திரவர்மன் தன் உறவினரான சென்லாவின் இளவரசி நரேந்திரதேவியை (Princess Narendradevi of Chenla) மணந்தார். உருத்திரவர்மன்; பூனான் இராச்சியத்தின் (Kingdom of Funan) கடைசி அரசரும் ஆவார்.

இராணி நிர்பேந்திரதேவி தன் உறவினரான சென்லாவின் இளவரசர் இராசேந்திர வர்மன் (Rajendravarman of Chenla) என்பவரை மணந்தார்; இவருக்குப் பின்னர், இவரின் மகள் இளவரசி செயந்திரபா (Queen Jayendrabha) ஈசானபுரத்தின் அரியணைக்கு வாரிசானார்.

சான்றுகள் தொகு

  1. Jacobsen, Trudy, Lost goddesses: the denial of female power in Cambodian history, NIAS Press, Copenhagen, 2008 (1)
  2. Jacobsen, Trudy, Lost goddesses: the denial of female power in Cambodian history, NIAS Press, Copenhagen, 2008 (2)

மேலும் படிக்க தொகு

  • Coedes, G. (1962). "The Making of South-east Asia." London: Cox & Wyman Ltd.
  • Higham, Charles. The Civilization of Angkor (англ.). — University of California Press, 2004. — P. 192.
  • Jacobsen, Trudy. Lost Goddesses: The Denial of Female Power in Cambodian History (англ.). — NIAS Press, 2008. — P. 358. — (Gendering Asia). — ISBN 978-87-7694-001-0.

வெளி இணைப்புகள் தொகு

முன்னர் ஈசானபுரம் மகாராணியார்
8-ஆம் நூற்றாண்டு
பின்னர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிருபத்தேந்திரதேவி&oldid=3683234" இலிருந்து மீள்விக்கப்பட்டது