நிர்மல் வர்மா

நிர்மல் வர்மா (ஆங்கிலம்: Nirmal Verma) (பிறப்பு: 3 ஏப்ரல் 1929  – இறப்பு: 25 அக்டோபர் 2005)இவர் ஒரு இந்தி எழுத்தாளரும், புதின ஆசிரியரும், செயபாட்டாளரும் மொழிபெயர்ப்பாளரும் ஆவார். இந்தி இலக்கியமான 'நய் கஹானி'யின் (புதிய கதை) முன்னோடிகளில் ஒருவர் என்ற பெருமை அவருக்கு உண்டு. [1] இதில் அவரது முதல் கதைத் தொகுப்பான பரிண்டே (பறவைகள்) என்பது முதல் எழுத்தாகக் கருதப்படுகிறது. [2]

ஐம்பதாண்டுகளாக நீடித்த அவரது வாழ்க்கையில், கதை, பயணக் குறிப்பு மற்றும் கட்டுரைகள் போன்ற பல்வேறு வகையான இலக்கியங்களில், ஐந்து புதினங்கள், எட்டு சிறுகதைத் தொகுப்புகள் மற்றும் புனைகதை அல்லாத ஒன்பது புத்தகங்கள், கட்டுரைகள் மற்றும் பயணக் குறிப்புகள் உட்பட பலவற்றை எழுதியுள்ளார். [3]

சுயசரிதை தொகு

நிர்மல் வர்மா, 1929 ஏப்ரல் 3 அன்று சிம்லாவில் பிறந்தார். அங்கு அவரது தந்தை பிரித்தானிய இந்திய அரசாங்கத்தின் பணியில் அதிகாரியாக பணியாற்றினார். அவர் தனது எட்டு உடன்பிறப்புகளில் ஏழாவது குழந்தையாக இருந்தார். அவரது சகோதரர்களில் இராம்குமார் என்பவர் இந்தியாவின் மிகச் சிறந்த கலைஞர்களில் ஒருவராவார். [4] இவர் ககன் கில் என்பவரை மணந்தார். [5]

1950 களின் முற்பகுதியில் ஒரு மாணவர் பத்திரிகைக்காக தனது முதல் கதையை எழுதினார். தில்லி பல்கலைக்கழகத்தின் புனித ஸ்டீபன் கல்லூரியில், வரலாற்றில் முதுகலை பட்டப்படிப்பை முடித்தார். அதன்பிறகு தில்ல்லியில் கற்பித்தல் பளியிலும், பல்வேறு இலக்கிய இதழ்களுக்கு எழுதவும் தொடங்கினார்.

அவரது மாணவர் நாட்களிலேயே அவரது செயல்பாட்டுச் சாதனை தெரிந்தது; 1947-48ல், டெல்லியில் நடந்த மகாத்மா காந்திஜியின் காலை பிரார்த்தனைக் கூட்டங்களில் அவர் தவறாமல் கலந்து கொண்டார். அவர் இந்திய பொதுவுடமைக் கட்சியின் அட்டை வைத்திருந்த உறுப்பினராக இருந்தபோதிலும், சோவியத் அங்கேரி மீது படையெடுத்த பின்னர் 1956 இல் அவர் ராஜினாமா செய்தார். இந்திய இலக்கியக் காட்சிக்கு ஒரு புதிய பரிமாணத்தைச் சேர்த்த அவரது கதைகளில் மிகவும் செயல்பாடுகள் விரைவில் பிரதிபலிக்கப்படவிருந்தன. .

அவர் பிராகா நகரில் 10 ஆண்டுகள் தங்கியிருந்தார். அங்கு நவீன செக் குடியரசு எழுத்தாளர்களான கரேல் கபெக், மிலன் குண்டேரா, மற்றும் போகுமில் கராபல் போன்றவர்களது படைப்புகள் இந்திக்கு மொழிபெயர்க்கும் திட்டத்தைத் தொடங்க ஓரியண்டல் நிறுவனம் அழைத்தது. இதற்காக அவர் செக் மொழியையும் கற்றுக் கொண்டார். மேலும் பிராகா வசந்த்தத்தின் விளைவாக 1968 இல் நாடு திரும்புவதற்கு முன்பு பாரம்பரியமிக்க ஒன்பது உலக இலக்கியங்களை இந்திக்கு மொழிபெயர்த்தார். [4]

பிராகா நகரில் அவர் தங்கியிருந்த காலத்தில் அவர் ஐரோப்பா முழுவதும் பரவலாகப் பயணம் செய்தார். இதன் விளைவாக சீரோன் பர் சாந்தினி (1962), கர் பாரிசு மெய்ன் (1970) மற்றும் துந்த் சே உத்தி துன் மற்றும் அவரது முதல் நாவல் உட்பட ஏழு பயணக் குறிப்புகள் பிராகாவில் தனது மாணவ நாட்களை அடிப்படையாகக் கொண்டு, "வீ தின்" (அந்த நாட்கள்) (1964) என்பதை எழுதினார். பிராகா திரும்பியதும், அவர் பொதுவுடமையால் ஏமாற்றமடைந்து பின்னர் இந்திய நெருக்கடி நிலைக்கு எதிராக குரல் கொடுத்தார். மேலும் திபெத்திய சுதந்திர இயக்கத்திற்கான வழக்கறிஞராக இருந்தார். அவரது அடுத்தடுத்த எழுத்து, இந்திய மரபுகளை அவர் மறுபரிசீலனை செய்வதை பிரதிபலித்தது.

1980–83 வரை, போபாலின் பாரத் பவனில் நிரலா பதிப்பின் படைப்பை எழுதும் தலைவராக வர்மா பணியாற்றினார். 1988-90ல் சிம்லாவில் யஷ்பால் கிரியேட்டிவ் ரைட்டிங் சேரின் இயக்குநராக இருந்தார். [2] குமார் ஷாஹானி இயக்கிய அவரது கதையை அடிப்படையாகக் கொண்ட ஒரு படம், மாயா தர்பன் (1972), சிறந்த படத்திற்கான பிலிம்பேர் விமர்சகர்கள் விருதை வென்றது.

அவர் 2005 அக்டோபர் 25 அன்று புதுதில்லியில் காலமானார்.

விருதுகள் மற்றும் மைல்கற்கள் தொகு

  • 1999 இல் ஞானபீட விருது, இந்திய எழுத்தாளர்களுக்கான மிக உயர்ந்த இலக்கிய விருது.
  • ஏழு சிறுகதைகளின் தொகுப்பான 'காவ்வே கௌர் கலா பானி' 1985 இல் சாகித்ய அகாடமி விருதை வென்றது. [6]
  • 2002 இல் பத்ம பூஷண் . [7]
  • பாரத் அவுர் ஐரோப்பா: பிரதிசுருதி கே சேத்ரா (1991) என்ற அவரது கட்டுரை புத்தகத்திற்காக ஞானபீட அறக்கட்டளையின் "முர்திதேவி விருது".
  • ஊடகவியல் -2003 கலைக்கான நடுவர் குழு உறுப்பினர் லெட்ரே யுலிஸஸ் விருது . [2]
  • அவர் ஆசிய ஆய்வுகளுக்கான சர்வதேச நிறுவனத்தில் சக ஊழியராக இருந்தார்.
  • அமெரிக்க காங்கிரசின் நூலகம் அதன் சேகரிப்பில் நிர்மல் வர்மாவின் பெரும்பாலான படைப்புகளை பட்டியலிடுகிறது.
  • இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது, வாழ்நாள் சாதனையாளர், 2005 இல் சாகித்திய அகாதமி பெல்லோஷிப் . [8]
  • 1988 ஆம் ஆண்டில் லண்டனில் உள்ள ரீடர்ஸ் இன்டர்நேஷனல் தனது "வேர்ல்ட் எல்சுவேர்" என்ற புத்தகத்தை வெளியிட்டபோது, பிபிசி அவரது வாழ்க்கை மற்றும் படைப்புகள் குறித்த ஒரு திரைப்படத்தை ஒளிபரப்பியது.
  • செவாலியே விருது (பிரான்ஸ்) 2005

மேலும் படிக்க தொகு

குறிப்புகள் தொகு

  1. Ode to Nirmal Verma பரணிடப்பட்டது 2006-11-07 at the வந்தவழி இயந்திரம் தி இந்து, 6 November 2005.
  2. 2.0 2.1 2.2 Nirmal Verma, India. Lettre-ulysses-award.org. Retrieved on 22 May 2016.
  3. AUTHOR SPEAKS:"I cater to several layers of sensibilities" The Tribune, 10 March 2002.
  4. 4.0 4.1 'He was the modern voice of Indian genius' Obituary, Rediff.com, 26 October 2005
  5. {{http://www.caravanmagazine.in/tag/gagan-gill web|url=https://www.bbc.com/hindi/india-43626863|title=निर्मल वर्मा ने इंदिरा को बताया था 'साक्षात बुराई'|first=प्रियंका|last=दुबे|date=3 April 2018|publisher|accessdate=4 April 2018|via=www.bbc.com}}
  6. Sahitya Akademi Awards. sahitya-akademi.org
  7. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 நவம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.
  8. Fellowships பரணிடப்பட்டது 30 சூன் 2007 at the வந்தவழி இயந்திரம் Sahitya Akademi Official website.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிர்மல்_வர்மா&oldid=3560755" இலிருந்து மீள்விக்கப்பட்டது