நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் (இந்தியா)
நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் (Ministry of Consumer Affairs, Food and Public Distribution) என்பது இந்திய அரசின் ஒரு அமைச்சகமாகும். இந்த அமைச்சகத்தை அமைச்சர் பியூஷ் கோயல் நிர்வகிக்கிறார்.[1] இந்த அமைச்சகத்தின் கீழ் உணவு மற்றும் பொதுவிநியோகத் துறை மற்றும் நுகர்வோர் நலன் துறை ஆகிய இருப்பிரிவுகள் உள்ளன.
![]() இந்திய அரசின் சின்னம் | |
![]() தெற்கு பிளாக் கட்டிடம் | |
துறை மேலோட்டம் | |
---|---|
அமைப்பு | 2 செப்டம்பட் 1946 |
ஆட்சி எல்லை | இந்தியக் குடியரசு |
தலைமையகம் | சன்சத் பவன், புதுதில்லி |
பொறுப்பான அமைச்சர்கள் |
|
உணவு மற்றும் பொது விநியோகத் துறை தொகு
- உணவு தானியங்களை வாங்குவதும், பாதுகாப்பதும், கொண்டு செல்வதும், விநியோகிப்பதும் இத்துறையின் முக்கிய பணியாகும்.
- விவசாயிகள் உற்பத்தி செய்யும் அரிசி, கோதுமை, தானியங்கள் போன்ற உணவுப்பொருட்களின் குறைந்த பட்ச விலையை நிர்ணயித்து நாடு முழுவதும் சரியான விலையில் பொருட்கள் கிடைக்க வழிவகை செய்யும்[2]
- அரிசி, கோதுமை, முக்கிய தானியங்களை கொள்முதல் செய்து தனது கிடங்குகளில் (Godown) சேமித்து உணவு பாதுகாப்பை உறுதிசெய்யும். சேமிக்கப்பட்டவைகளை உரிய தொழிற்நுட்பத்துடன் பாதுகாக்கும்.
- பொது விநியோக முறையை அமல்படுத்தி மக்களுக்கு உணவுப் பொருட்கள் சென்று சேர்வதை உறுதி செய்யும்.
இதன் கீழுள்ள நிறுவனங்கள் தொகு
- இந்திய உணவுக் கழகம் (Food Corporation of India)
- மத்திய சேமிப்புக் கழகம் (Central Warehousing Corporation)
நுகர்வோர் நலன் துறை தொகு
நுகர்வோர் கூட்டுறவு, விலை கண்காணிப்பு, அத்தியாவசிய பொருட்களின் இருப்பு, இந்திய தரக்கட்டுப்பாட்டு நிறுவனங்கள் ஆகியவற்றை நிர்வகிக்கிறது.
ஒரே நாடு - ஒரே ரேசன் கார்டு திட்டம் தொகு
இந்தியாவில் சுமார் 79 கோடி பேர் குடும்ப அட்டைகளை பயன்படுத்தி பொது விநியோக திட்டத்தின் கீழ் அத்தியாவசிய பொருட்களை நியாய விலைக் கடைகள் மூலம் பயன் பெற்று வருகிறார்கள். பயனர்களுக்கு உதவும் வகையில் இந்திய அரசு, ஒரே நாடு-ஒரே ரேசன் கார்டு என்ற புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளது.
இந்த திட்டம் 2013-ம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட இந்திய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் செயல்படுத்த இந்திய அரசு முடிவு செய்ததுள்ளது. இதன்மூலம் ரேசன் கார்டு வைத்திருப்பவர்கள் நாடு முழுவதும் எந்த மாநிலத்திலும் தங்களுக்கு தேவையான உணவு தானிய பொருட்களை பெற முடியும் . “ஒரே நாடு-ஒரே ரேசன் கார்டு” திட்டத்தை 15 சனவரி 2020 முதல் தொடங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. செய்துள்ளது.. முதல் கட்டமாக ஆந்திரா, தெலுங்கானா, குஜராத், மகாராஷ்டிரா, அரியானா, ராஜஸ்தான், கர்நாடகா, கேரளா, கோவா, மத்தியபிர தேசம், திரிபுரா, ஜார்க்கண்ட் ஆகிய 12 மாநிலங்களில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. உள்ளது. [3][4]
மேற்கோள்கள் தொகு
- ↑ "Archived copy" இம் மூலத்தில் இருந்து 2012-10-08 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121008014306/http://india.gov.in/outerwin.php?id=http%3A%2F%2Ffcamin.nic.in%2F.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" இம் மூலத்தில் இருந்து 2010-12-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20101216215050/http://fcamin.nic.in/dfpd_html/index.asp.
- ↑ "2020 சனவரி15 முதல் அமலாகிறது ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம்: 12 மாநிலங்களில் முதற்கட்டமாக நடைமுறை" இம் மூலத்தில் இருந்து 2019-12-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191228161000/http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=552074.
- ↑ 2020 ஜனவரி 15 முதல் ஒரே நாடு - ஒரே ரேசன் கார்டு: முதல் கட்டமாக 12 மாநிலங்களில் அமல்