வாருங்கள்!

வாருங்கள், பன்னீர் மலேசியா, விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்!

பூங்கோதை விக்கிப்பீடியாவில் பங்களிப்பதைப் பற்றி பேசுகிறார்

உங்கள் பங்களிப்புக்கு நன்றி தொகுப்புக்கு. விக்கிப்பீடியா என்பது உங்களைப் போன்ற பலரும் இணைந்து, கூட்டு முயற்சியாக எழுதும் கலைக்களஞ்சியம் ஆகும். விக்கிப்பீடியாவைப் பற்றி மேலும் அறிய புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியாவைப் பற்றிய உங்கள் கருத்துக்களையும், ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்திலோ அதிக விக்கிப்பீடியர்கள் உலாவும் முகநூல் (Facebook) பக்கத்திலோ கேளுங்கள். தமிழ் விக்கிப்பீடியாவில் கலந்துரையாடலுக்கான ஆலமரத்தடியில் முக்கிய உரையாடல்களைக் காணலாம். நீங்கள் கட்டுரை எழுதி, பயிற்சி பெற விரும்பினால், அருள்கூர்ந்து உங்களுக்கான சோதனை இடத்தைப் (மணல்தொட்டி) பயன்படுத்துங்கள்.


தங்களைப் பற்றிய தகவலை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து மகிழ்வோம். விக்கிப்பீடியா தங்களுக்கு முதன்முதலில் எப்படி அறிமுகமானது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும்!


நீங்கள் கட்டுரைப் பக்கங்களில் உள்ள பிழைகளைத் திருத்தலாம். கூடுதல் தகவலைச் சேர்க்கலாம். புதுக்கட்டுரை ஒன்றையும் கூடத் தொடங்கலாம். இப்பங்களிப்புகள் எவருடைய ஒப்புதலுக்கும் காத்திருக்கத் தேவையின்றி உடனுக்குடன் உலகின் பார்வைக்கு வரும்.

பின்வரும் இணைப்புக்கள் உங்களுக்கு உதவலாம்:


மேலும் காண்க:

--சோடாபாட்டில்உரையாடுக 04:48, 19 ஆகத்து 2011 (UTC)Reply

கலைக்களஞ்சிய நடை தொகு

வணக்கம் பன்னீர் மலேசியா,

நீங்கள் கனக்சின் பேச்சுப் பக்கத்தில் கேட்டிருந்ததற்கு என்னால் இயன்றவாறு கீழே பதிலளித்துள்ளேன்.

1) விக்கிப்பீடியா கட்டுரைகள் நடுநிலையுடன் இருக்க வேண்டும். மாற்று கருத்துகளோடு உடன்பாடில்லையென்றாலும், மதிப்புடன் நடக்க வேண்டும். ”மற்ற தமிழ் ஆசிரியர்கள் என்று கூறிக்கொள்ளும் சில துரோகிகளின் கருத்துகள் பொய்” போன்ற சொல்லாடல்களை அறவே தவிர்க்க வேண்டும்

2) ஒரு தலைப்பு குறித்து ஒரு கட்டுரை மட்டும் இருக்கலாம். நீங்கள் எழுதிய தமிழ்ச் சங்கங்கள் குறித்து தமிழ்ச் சங்கம் கட்டுரையில் ஏற்கனவே சில குறிப்புகள் உள்ளன. இவற்றை விரிவு படுத்தலாம்.

3) எழுதியவரின் பெயரை கட்டுரையில் இடுவதில்லை. அது தானாக கட்டுரையின் வரலாற்றுப் பக்கத்தில் பதிவாகிவிடும். எழுத உதவிய துணை நூல்கள் புறச்சான்றுகள் ஆகியவற்றை மட்டும் கட்டுரையின் இறுதியில் பதிவு செய்யலாம்.

இவை தவிர விக்கிப்பீடியா:நடைக் கையேடு என்ற பக்கத்திலும் விரிவான குறிப்புகள் உள்ளன. நீக்கப்பட்ட உங்கள் கட்டுரை உள்ளடக்கத்தைப் படியெடுத்து கீழே இணைத்துள்ளேன். இது குறித்து ஏதேனும் ஐயமிருப்பின் கேளுங்கள்.--சோடாபாட்டில்உரையாடுக 04:12, 24 ஆகத்து 2011 (UTC)Reply


பல தமிழ்ச் சங்கத்தின் வரலாறுகள் ( ஆசிரியர் : அ.. சிதம்பரனார் ) ( சுறுக்கம் : பன்னீர் மலேசியா )

பல ஆசிரியர்கள் மற்றும் புலவர்கள் நமது தமிழ்ச் சங்கத்தின் வரலாற்ரைப் பற்றி எழுதிருந்தாலும் அதில் சிலருடைய நூல்களே உண்மையானது. அவர்களுக்கு என் வணக்கம். மற்ற தமிழ் ஆசிரியர்கள் என்று கூறிக்கொள்ளும் சில துரோகிகளின் கருத்துகள் பொய். தமிழையும் தமிழரையும் அழிக்க நினைக்கும் பல தரப்பினருடன் சேர்ந்துக் கொண்டு; நம் தமிழ் ஆசிரியர்களே இத்தகைய செயல் புரிதல் மனதிர்க்கு வேதனையை அளிக்கிறது.

'1 பஃறுளி ஆற்றுத் தென்மதுரையில்

    நடைபெற்ற தமிழ்ச் சங்கம்
    ( உருவ எழுத்துக் காலம் )

காலம்  : கி.மு. 30 000 முதல் கி.மு 16 500 வரை 13 500 ஆண்டுகள். இடம்  : பஃறுளி ஆற்றங்கரையில் இருந்து தென்மதுரை என்னும் நகரம். கழகம் நிறுவிய அரசர்  : பாண்டியன் நெடியோன். இவனுடைய மறுபெயர்களாவன  : முதலாம் நிலந்தரு திருவிற்பாண்டியன் மா கீர்த்தி. புலவர்  : ஆழிவடிம்பலம்ப நின்ற பாண்டியன் முதலியோர். நூல்  : கடலிலே பாடப்பட்டன  : கடலிலே பாடப்பட்டோர் : ஆழிவடிம்பலம்ப நின்ற பாண்டியன் முதலியோர். கவி அரங்கேறிய அரசர்  : ஆழிவடிம்பலம்ப நின்ற பாண்டியன் முதலியோர். வரலாறு : பஃறுளி என்னும் ஆறு பெருவள நாட்டுக்கும், ஓளி நாட்டுக்கும் இடையில் எல்லையாக மேருமலைத் தொடரினின்றும் உற்பத்தியாகிக் கீழ்நோக்கி ஓடிக்கொண்டு இருந்தது.

 2   மகேந்திரமலைத் தமிழ்ச் சங்கம்
     ( உருவ எழுத்துக் காலம் )

காலம்  : கி.மு. 16 000 முதல் கி.மு 14 550 வரை 1450 ஆண்டுகள். இடம்  : குமரிக்கண்டத்து, குமரிநாட்டு, ஏழ் குன்ற நாட்டின் மகேந்திர மலை. கழகம் நிறுவிய அரசர்  : இறையனார் என்னும் திரிபுரம் எரித்த விரிசடைப் பெருமான் அடிகள். இவருக்கு மேருவரம்பன் -

                                        பரமேச்சுரன் என்ற பட்டப் பெயர்கள் உண்டு.

புலவர்  : 1) திரிபுரம் எரித்த விரிசடைப் பெருமான் அடிகள் என்ற இறையனார்

                                        2) பொதியமலை அகத்தியர் 1 முதலியோர்.

நூல்  : 1) மகேச சூத்திரம் என்னும் பேரிலக்கணம். 2) களவியல் என்னும் ஐந்தினை அகநூல். பாடப்பட்டன  : கடலிலே பாடப்பட்டோர்  : ஆழிவடிம்பலம்ப நின்ற பாண்டியன் முதலியோர். கவி அரங்கேறிய அரசர்  : ஆழிவடிம்பலம்ப நின்ற பாண்டியன் முதலியோர். வரலாறு : பஃறுளி என்னும் ஆறு பெருவள நாட்டுக்கும், ஓளி நாட்டுக்கும் இடையில் எல்லையாக மேருமலைத் தொடரினின்றும் உற்பத்தியாகிக் கீழ்நோக்கி ஓடிக்கொண்டு இருந்தது.

  3  பொதியமலைத் தமிழ்ச் சங்கம்
       ( உருவ எழுத்துக் காலம் )

காலம்  : கி.மு. 16 000 இடம்  : பொதியமலை-பாவநாசம்.

சங்கம் நிறுவிய அரசர்  : பொதியமலை அகத்தியர் 1.

                                        திரிபுரம் எரித்த  விரிசடைப் பெருமானுக்குச் சமானமானவர். 
                                        பரமேச் சுரருடைய  ஐம்பெருங்குழுவில் தலைமை தாங்கியவர்.

. புலவர்  : பொதியமலை அகத்தியர் 1; அவர் மாணாக்கர் பலர்; பாண்டிய அரசர்களில் பலர்;

                                        (இப்பொதியமலை அகத்தியர் மகேந்திரமலைத் தமிழ்ச் சங்கத்திலும் அங்கத்தினராய் இருந்தனர்)

நூல்  : 1) மகேச சூத்திரம் – களிவியல் - அகத்தியம் பாடப்பட்டன  : அகத்தியம் முதலியன பாடப்பட்டோர்  : திரிபுரம் எரித்த விரிசடைப் பெருமான் அடிகள் என்கிற இறையனார். கவி அரங்கேறியவர்  : பொதியமலை அகத்தியர் வரலாறு  : திரிபுராதிகளுடைய கொடுங்கோன்மைக்கு அஞ்சி. தமிழ்நாட்டு அரசர்களும் தமிழக்

                                       குடிகளும்  கயிலை சென்று,  இறையனாரிடம் முறையிட, அவர் தம்முடைய 
                                       உற்ற நண்பரும், ஐம்பெருங் குழுவின் அங்கத்தினருமான அகத்தியரை விளித்து, சில          
                                       சேனைகளுடன் அனுப்பி, நிருதர்களுடன் விந்தம்- கிரவுஞ்சம், முதலிய     இடங்களில்        மலைந்து, சண்டை செய்து வெற்றிபெற்று, பொதிகைமலைவரை சென்று, நாட்டை மீட்டுச் சீர்ப்படுத்தினார்.