பரிசில் துறை

பரிசில் துறை என்னும் துறை வகுக்கப்பட்ட 17 பாடல்கள் புறநானூற்றில் உள்ளன. இவை பாடாண் திணைப் பாடல்கள்.

புறநானூறு தொகு

இலக்கண நூல்கள் விளக்கம் தொகு

பரிசில் கடாநிலை, பரிசில் விடை ஆகிய துறைகளைப் பாடாண் திணையின் பகுதியாகக் குறிப்பிடும் தொல்காப்பியம் இதனைத் தனியொரு துறையாகக் குறிப்பிடவில்லை. புறப்பொருள் வெண்பாமாலை இதனைத் தனியொரு துறையாகச் சுட்டுகிறது. இந்தப் பரிசில் இன்னார் கொடுத்தது என்று கூறுவது ‘பரிசில் துறை’ என்கிறது. மண்ணகம் காவல் மன்னன் முன்னர் எண்ணிய பரிசில் இது என உரைத்தன்று. (புறப்பொருள் வெண்பாமாலை 193) வரிசை கருதாது வான்போற் றடக்கைக் குரிசினீ நல்கயாங் கொள்ளும் - பரிசில் அடுகள மார்ப்ப வமரோட்டித் தந்ந படுகளி நால்வாய்ப் பகடு.

அடிக்குறிப்பு தொகு

  1. மாறோக்கத்து நப்பசலையார் புறநானூறு 126,
  2. உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் புறநானூறு 135,
  3. ஒருசிறைப் பெரியனார் புறநானூறு 137,
  4. வன்பரணர் புறநானூறு 148,
  5. மோசிகீரனார் புறநானூறு 154,
  6. பெருஞ்சித்திரனார் புறநானூறு 161,
  7. கருவூர்க் கதப்பிள்ளைச் சாத்தனார் புறநானூறு 168,
  8. கபிலர் புறநானூறு 200,
  9. கபிலர் புறநானூறு 201, 202,
  10. ஊன்பொதி பசுங்குடையார் புறநானூறு 203,
  11. கழைதின் யானையார் புறநானூறு 204,
  12. பெருந்தலைச்சாத்தனார் புறநானூறு 205,
  13. புறநானூறு 206,
  14. புறநானூறு 207,
  15. புறநானூறு 208,
  16. புறத்திணை நன்னாகனார் புறநானூறு 379
"https://ta.wikipedia.org/w/index.php?title=பரிசில்_துறை&oldid=1312095" இலிருந்து மீள்விக்கப்பட்டது