மிர்ஜன் கோட்டை

கர்நாடகக் கோட்டை

மிர்ஜன் கோட்டை, இந்தியாவின் தென் மாநிலமான கருநாடக மாநிலத்தின் மேற்கு கடற்கரையில் வடகன்னட மாவட்டத்தில் அமைந்துள்ளது. கட்டடக்கலை நேர்த்தியுடன் காணப்படும் இக்கோட்டை கடந்த காலங்களில் பல போர்களின் இருப்பிடமாகும். இது தேசிய நெடுஞ்சாலை 66லிருந்து சுமார் 0.5 கிலோமீட்டர் (0.31 மைல்) தொலைவு மற்றும் இந்தியாவின் மேற்கு கடற்கரையில் உள்ள புகழ்பெற்ற இந்து யாத்திரை மையமான கோகர்ணாவிலிருந்து 11 கிலோமீட்டர் (6.8 மைல்) தொலைவிலும் உள்ளது.[1] [2]

முதல் வரலாற்று பதிப்பின் படி, ஆரம்பத்தில் 16 ஆம் நூற்றாண்டில் கெர்சொப்பாவின் ராணி சென்னபைராதேவி ( விஜயநகர பேரரசின் கீழ்) மிர்ஜன் கோட்டையை கட்டிய பெருமை பெற்றார். அவர் 54 ஆண்டுகள் இக்கோட்டையில் வசித்து ஆட்சி செய்தார். [3] [4]

அவரது ஆட்சிக் காலத்தில், கார்வாரின் தென்கிழக்கில் 32 கிலோமீட்டர் (20 மைல்) தொலைவில் உள்ள மிர்ஜன் துறைமுகம், சூரத்துக்கு மிளகு, சால்ட்பிட்டர் மற்றும் வெற்றிலை ஆகியவற்றை அனுப்ப பயன்படுத்தப்பட்டது. பெட்னூருடன் இணைக்கப்பட்ட மாவட்டமான கெர்சோப்பா, இந்த பிராந்தியத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் மிளகுக்கு பிரபலமானது. இதன் விளைவாக, போர்த்துகீசியர்கள் கெர்சொப்பா ராணிக்கு "ராணி, மிளகு ராணி" ( போர்த்துகீசிய மொழியில் "ரெய்ன்ஹா டி பிமென்டா") என்ற பெயரைக் கொடுத்தனர்.

வரலாறு தொகு

இந்த கோட்டையின் கால மதிப்பீடு பல பதிப்புகளாக உள்ளன. இந்த கோட்டை முதன்முதலில் நவாயத் சுல்தானகர்களால் 1200 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் கட்டப்பட்டது. பின்னர் இது விஜயநகர பேரரசின் கீழ் வந்தது. பின்னர் கோட்டை 1608 ஆம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்டது (இந்திய தொல்பொருள் ஆய்வு நிறுவனம் (ஏ.எஸ்.ஐ) தத்ரி க்ரீக்கின் தென்கிழக்கு கரையோரப் பகுதியில் 1608-1640 காலப்பகுதியில் அதன் கட்டிடத்தைக் குறிக்கிறது). [1] [2]

1552-1606 காலகட்டத்தில் காணப்பட்ட மற்றொரு பதிப்பு என்னவென்றால், மிர்ஜன் கோட்டை ஆரம்பத்தில் ராணி சென்னபைராதேவியால் கட்டப்பட்டது. அவர் துளுவ - சாளுவ குலத்தைச் சேர்ந்தவர், விஜயநகர பேரரசிற்கு அடிபணிந்தவர்களாக கெர்சொப்பாவின் ராணியாக (ஒரு சிறிய நகரம்) நீண்ட காலம் (54 ஆண்டுகள்) ஆட்சி செய்தார். அவர் சமண மதத்தை பக்தியுடன் கடைபிடித்தார், அவருடைய ஆட்சியின் போது பல சமண பசடிகளைக் கட்டினார்.கொங்கன் மற்றும் கேரளாவின் கரையோரப் பகுதியில் பின்பற்றப்பட்ட ஒரு பாரம்பரியம், அலியாசந்தனா அல்லது மேட்ரியார்ச்சல் என்ற தாய்வழிக் கோட்பாட்டுக்கு இணங்க அவர் ஆட்சி செய்தார். அவரது களம் வடக்கு மற்றும் தெற்கு கனரா மாவட்டங்கள் மற்றும் தெற்கு கோவாவை உள்ளடக்கியது. அதில் மால்பே, பிட்னூர், மிர்ஜன், ஹொன்னாவரா, அங்கோலா மற்றும் கார்வார் போன்ற முக்கியமான துறைமுகங்கள் இருந்தன. இங்கிருந்து பிராந்தியத்தின் மிக முக்கியமான விளைபொருளான மிளகு ஐரோப்பாவிற்கு அனுப்பப்பட்டது. அதனால் அவருக்கு "மிளகு ராணி அல்லது ரெய்ன்ஹா டி பிமென்டா" என்ற பெயர் போர்த்துகீசியர்களால் வழங்கப்பட்டது. இருப்பினும், விஜயநகர பேரரசு விரட்டப்பட்ட தலிக்கோட்டா போருக்குப் பிறகு அவர் நிலை தலைகீழாக மாறியது. பின்னர் அவர் மிர்ஜன் கோட்டையில் இருந்து சராவதி ஆற்றின் நடுவில் உள்ள ஒரு தீவில் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டார். [3][4]

மற்றொரு பதிப்பின் படி, பிஜப்பூர் சுல்தானகத்தின் உன்னதமான ஷெரிப்-உல் முல்க் கும்டா நகரத்தையும் அதன் தெற்கே அமைந்துள்ள கும்டா கோட்டையையும் பாதுகாக்க முதல் பாதுகாப்பு அரணாக இந்தக் கோட்டையை கட்டினார்.

மேலும் ஒரு பதிப்பு என்னவென்றால், இந்தக் கோட்டை விஜயநகர பேரரசின் ஆட்சியாளர்களின் கீழ் இருந்தது. இந்த பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு, பிஜப்பூர் சுல்தான்கள் கோட்டையைக் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது. அப்போது கோவாவின் ஆளுநராக இருந்த ஷெரிப்-உல் முல்க் இந்தக் கோட்டையைக் கட்டிய அல்லது புதுப்பித்த பெருமைக்குரியராகிறார். [2] மிர்ஜன் அவர்கள் அரண்மனையின் இருப்பிடமாக இருந்தது. 17 ஆம் நூற்றாண்டில், கெலாடி வம்சம், ஒரு சுயாதீன அதிபராக இருந்து, மிர்ஜானுக்கு தெற்கே கனரா என்ற பகுதியை பெட்னூரில் தலைநகராக கொண்டு ஆட்சி செய்தது. 1676 ஆம் ஆண்டில், கெலாடி ராணி சென்னம்மா இந்த பகுதியை மிர்ஜன் வரை கைப்பற்றியிருந்தார்.

குறிப்புகள் தொகு

  1. 1.0 1.1 "Excavations - 2000-2005 – Karnataka". Fort, Mirjan, dt. Uttar Kannada. Archaeological Survey of India and National Informatics Centre. பார்க்கப்பட்ட நாள் 2010-05-24.
  2. 2.0 2.1 2.2 "Miscellany". Deccan Herald. 2010-05-24. பார்க்கப்பட்ட நாள் 2010-05-24.
  3. 3.0 3.1 "Tribute to Pepper Queen Mirjan Fort". Travalogues : oktatabyebye. 2009-06-11. Archived from the original on 2009-06-15. பார்க்கப்பட்ட நாள் 2010-05-25.
  4. 4.0 4.1 Jyotsna Kamat (2010-05-07). "Queen of Gersoppa: Chennabhairadevi, Brave Ruler of Gersoppa (1552-1606 C.E)". Kamatpotporri. பார்க்கப்பட்ட நாள் 2010-05-25.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிர்ஜன்_கோட்டை&oldid=3787715" இலிருந்து மீள்விக்கப்பட்டது