மேலப்பூங்குடி ஆதினமிளகி அய்யனார் கோயில்

தமிழ் நாட்டிலுள்ள ஒரு கோயில்

மேலப்பூங்குடி ஆதினமிளகி அய்யனார் கோயில் தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டம், மேலப்பூங்குடி என்னும் ஊரில் அமைந்துள்ள கிராமக் கோயிலாகும்.[1]

அருள்மிகு ஆதினமிளகி அய்யனார் கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:சிவகங்கை
அமைவிடம்:மேலப்பூங்குடி, சிவகங்கை வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:சிவகங்கை
மக்களவைத் தொகுதி:சிவகங்கை
கோயில் தகவல்
மூலவர்:ஸ்ரீஆதினமிளகி அய்யனார்
சிறப்புத் திருவிழாக்கள்:புரவிஎடுப்பு, முளப்பாரி
வரலாறு
கட்டிய நாள்:பத்தொன்பதாம் நூற்றாண்டு[சான்று தேவை]

வரலாறு தொகு

இக்கோயில் பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு தொகு

இக்கோயிலில் ஸ்ரீஆதினமிளகி அய்யனார் சன்னதியும், விநாயகர், சுப்பிரமணியர், சன்னியாசிபந்தி, நீலி அம்மன், பெரியகருப்பர்பந்தி, சோனை கருப்பர்பந்தி, கெஜம்பலிவிடம், துவாரபாலகர் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயிலில் மூன்று நிலை கொண்ட ராஜகோபுரம் உட்பட மொத்தம் ஐந்து கோபுரங்கள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள் தொகு

இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் பூசை நடக்கின்றது. ஆவணி மாதம் புரவிஎடுப்பு முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. சித்திரை மாதம் முளப்பாரி திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)