வந்தவாசி நகராட்சி


வந்தவாசி நகராட்சி (Vandavasi Municipality) திருவண்ணாமலை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு இரண்டாம் நிலை நகராட்சி ஆகும். இந்த நகராட்சி 24 வார்டுகளைக் கொண்டது.[3] இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் 32 கிமீ தொலைவில் உள்ள மேல்மருவத்தூரில் உள்ளது. திருவண்ணாமலை இங்கிருந்து 77 கிமீ தொலைவில் உள்ளது.

வந்தவாசி நகராட்சி
—  இரண்டாம் நிலை நகராட்சி  —
வந்தவாசி நகராட்சி
இருப்பிடம்: வந்தவாசி நகராட்சி

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 12°30′N 79°37′E / 12.5°N 79.62°E / 12.5; 79.62
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருவண்ணாமலை
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர்
நகராட்சி தலைவர்
மக்கள் தொகை 31,320 (2011)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

இவ்வூரின் அமைவிடம் 12°30′N 79°37′E / 12.5°N 79.62°E / 12.5; 79.62 ஆகும்.[4] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 74 மீட்டர் (242 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள் வகைப்பாடு தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 24 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 7,326 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 31,320 ஆகும். இந்நகரத்தின் எழுத்தறிவு 86.5% மற்றும் பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு, 1,012 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 3337ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 4,242 மற்றும் 410 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 60.86%, இசுலாமியர்கள் 34.73%, கிறித்தவர்கள் 3.03%, தமிழ்ச் சமணர்கள் 1.28% மற்றும் பிறர் 0.10% ஆகவுள்ளனர்.[1][தொடர்பிழந்த இணைப்பு]

சான்றுகள் தொகு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. Vandavasi Municipalityaa
  4. "Vandavasi". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் ஜனவரி 30, 2007. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வந்தவாசி_நகராட்சி&oldid=3866741" இலிருந்து மீள்விக்கப்பட்டது