அப்துல் லத்தீப் (அரசியல்வாதி)

அப்துல் லத்தீப் (பிறப்பு:-சூலை 1, 1936 இறப்பு:- திசம்பர் 17, 2001) தமிழக அரசியல்வாதி ஆவார். இவர் கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி மஞ்சவல்லியில் பிறந்தார். இந்தியன் யூனியன் முஸ்லிம்லீக்கில் இணைந்து தனது அரசியல் பணியை துவக்கினார். நான்கு முறை வாணியம்பாடி (சட்டமன்றத் தொகுதி) உறுப்பினராகவும், ஒருமுறை சேப்பாக்கம் (சட்டமன்றத் தொகுதி) உறுப்பினராகவும்,[1][2][3][4][5][1] பரணிடப்பட்டது 2010-10-07 at the வந்தவழி இயந்திரம்[2] பரணிடப்பட்டது 2010-10-06 at the வந்தவழி இயந்திரம் ஒருமுறை தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராகவும் மக்கள் பணியாற்றி உள்ளார். இந்தியன் யூனியன் முஸ்லிம்லீக் தமிழ்நாடு பொதுச் செயலாளராகவும், பின்னர் இந்திய தேசிய லீக் அகில இந்திய பொதுச் செயலாளராகவும் தமது இறுதிகாலம் வரை பணியாற்றினார்.

அப்துல் லத்தீப்

1980 ஆம் ஆண்டு நடைப்பெற்ற சட்டமன்ற தேர்தலில் வாணியம்பாடி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு 47.64% வாக்குகளைப் பெற்று தோல்வியை தழுவினார்.2001ல் தற்காலிக சபாநாயகராக பணியற்றினார்.

சட்டமன்ற உறுப்பினராக தொகு

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
1971 வாணியம்பாடி சுயேட்சை 27899 56.13
1977 வாணியம்பாடி சுயேட்சை 26,620 42.86
1989 சேப்பாக்கம் திமுக 33,104 50.21
1996 வாணியம்பாடி திமுக 74,223 67.36
2001 வாணியம்பாடி சுயேட்சை 54,218 48.26

மேற்கோள்கள் தொகு