உலவி, கர்நாடகா

உலவி (Ulavi) என்பது இந்திய மாநிலமான கர்நாடகாவின் உத்தர கன்னட மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமமாகும்.[1] உலவி இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள கார்வாரில் இருந்து (கும்பராவாடா வழியாக) 75 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

உலவி கிராமம் லிங்காயத் நம்பிக்கையுள்ள மக்களுக்கான ஒரு முக்கிய யாத்திரைக்கான மையமாகும்.[2] லிங்காயத் நம்பிக்கையின் மிகவும் மதிப்பிற்குரிய புனிதர்களில் ஒருவரான சென்னபசவண்ணாவின் சமாதி இங்கே உள்ளது. 12 ஆம் நூற்றாண்டில், சென்னபசவண்ணா இறப்பதற்கு முன்பு கல்யாணத்திலிருந்து உலவி வரை பயணம் செய்தார். இந்த புனித சமாதிக்கு மிக அருகில் நாகலாம்பிகை, சென்னபசவண்ணாவின் தாயார் மற்றும் பசவண்ணாவின் சகோதரி பெயரிடப்பட்ட அக்கா நாகலாம்பிகை குகை உள்ளது. உலவி ஜாத்ரே அல்லது சபைகள் கர்நாடகா முழுவதிலும் இருந்து யாத்ரீகர்களை ஈர்க்கின்றன.

உலவி மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளது. இங்குள்ள அடர்ந்த காடுகள் புலி, சிறுத்தை, யானை குருவி , பாம்பு மற்றும் பிற வனவிலங்குகளைக் கொண்டுள்ளன.

தண்டேலி, தார்வாடு, ஹூப்ளி ஆகியவை அருகிலுள்ள நகரங்கள் ஆகும். ஹூப்ளி, சித்ரதுர்கா, ஆவேரி மற்றும் பெல்காம் ஆகிய இடங்களிலிருந்து தர்வாடு வழியாக மூன்று தினசரி பேருந்துகள் கிராமத்திற்கு சேவை செய்கின்றன.

சிந்தேரி பாறை, காளி நதி, அனாக்சி காடுகள், சூபா அணை ஆகியவை உள்ளூர் ஆர்வமுள்ள பிற பகுதிகளாகும்.

மேலும் காண்க தொகு

குறிப்புகள் தொகு

  1. "Ulavi Population - Uttara Kannada, Karnataka". Census 2011. பார்க்கப்பட்ட நாள் 11 October 2017.
  2. Patil, Shankaragouda Hanamantagouda (2002). Community Dominance and Political Modernisation: The Lingayats. Mittal Publications. பக். 397. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788170998679. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=உலவி,_கர்நாடகா&oldid=3806282" இலிருந்து மீள்விக்கப்பட்டது