ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவு

ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவு (செங்கலடி) இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். மட்டக்களப்பு மாவட்டம் இலங்கையின் கிழக்குக் கரையோரத்தில் அமைந்துள்ளது. ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 39 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது.

ஆகிய இடங்கள் இப் பிரதேச செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. இப்பிரிவின் தெற்கிலும், மேற்கிலும் அம்பாறை மாவட்டமும், கிழக்கில் மண்முனை தென் மேற்கு பிரதேச செயலாளர் பிரிவு, மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவு, இந்தியப் பெருங்கடல் என்பனவும்; வடக்கில் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவும், எல்லைகளாக உள்ளன.

இப்பிரிவு 695 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது[1].

குறிப்புக்கள் தொகு

  1. புள்ளிவிபரத் தொகுப்பு 2007, தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களம், இலங்கை

இவற்றையும் பார்க்கவும் தொகு

வெளியிணைப்புக்கள் தொகு