காட்டாங்குளத்தூர்

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி

காட்டாங்குளத்தூர், தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு வட்டம், காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில்[1] அமைந்த வளர்ந்து வரும் ஊராகும்.

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்த இவ்வூர் உள்ளது. அருகமைந்த தொடருந்து நிலையம், காட்டாங்குளத்தூர் தொடருந்து நிலையம் ஆகும்.[2] காட்டாங்குளத்தூரில் எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.

சென்னை புறநகர் இருப்புவழி சேவைகள், சென்னைக் கடற்கரை தொடருந்து நிலையத்திலிருந்து, காட்டாங்குளத்தூர் வழியாக செங்கல்பட்டு வரை உள்ளது. சென்னையிலிருந்து மறைமலை நகருக்குச் செல்லும் அனைத்து நகரப் பேருந்துகள் காட்டாங்குளத்தூர் வழியாக நின்று செல்கிறது.

மேற்கோள்கள் தொகு

  1. செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம்[தொடர்பிழந்த இணைப்பு]
  2. "CTM - Kattangulatur Railway Station". Archived from the original on 2021-03-03. பார்க்கப்பட்ட நாள் 2019-02-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=காட்டாங்குளத்தூர்&oldid=3856232" இலிருந்து மீள்விக்கப்பட்டது