கிசான் மஸ்தூர் பிரஜா கட்சி

இந்திய அரசியல் கட்சி

கிசான் மஸ்தூர் பிரஜா கட்சி என்பது இந்தியாவின் ஒரு அரசியல் கட்சியாகும். இது 1951 இல் நிறுவப்பட்டது, பின்வந்த ஆண்டில் இக் கட்சியும், சோசலிச கட்சியும் இணைந்து பிரஜா சோசலிச கட்சியாக உருவானது. 'விவசாயத் தோழிலாளர் மக்கள் கட்சி' என்றும் அழைக்கப்பட்டது.

கிசான் மஸ்தூர் பிரஜா கட்சி
தலைவர்ஆச்சார்ய கிருபளானி
நிறுவனர்ஆச்சார்ய கிருபளானி
தொடக்கம்1951
கலைப்பு1952
பிரிவுஇந்திய தேசிய காங்கிரசு
இணைந்ததுபிரஜா சோசலிச கட்சி
கொள்கைவேளாண்மைவாதம்
சமூகவுடைமை
நிறங்கள் 
இந்தியா அரசியல்

வரலாறு தொகு

இக்கட்சியானது 1951 சூனில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியில் அதிருப்தியுற்றவரான ஆச்சார்ய கிருபளானியின் தலைமையில் நிறுவப்பட்டது. இதன் முக்கிய இரண்டு தலைவர்கள்  : பிரபுல்லா சந்திர கோஷ் மற்றும் தங்குதூரி பிரகாசம் ஆகியோர். இவர்கள் முறையே மேற்கு வங்கத்திலும், மெட்ராஸ் மாகாணத்திலும் முதலமைச்சராக இருந்தவர்களாவர்.[1] 1951 ஆம் ஆண்டு நடந்த இந்தியாவின் முதல் மக்களவைத் தேர்தலில் இக்கட்சி போட்டியிட்டது. இத்தேர்தலில் 16 மாநிலங்களில் போட்டியிட்டு பத்து மக்களவை இடங்களை வென்றது, இதில் மதறாஸ் மாநிலத்தில் ஆறு தொகுதிகளும்,[2] மைசூர் மாநிலத்தில், தில்லி, உத்தரப் பிரதேசம் மற்றும் விந்திய பிரதேசம் ஆகிய மாகாணங்களில் தல ஒரு தொகுதிகள் அடங்கும்.[3][4] இக்கட்சி மொத்தம் 5.8% வாக்குகளைப் பெற்றது. என்றாலும் மாநில சட்டமன்றங்களில் 77 இடங்களை மட்டுமே வென்றது. 1952 செப்டம்பரில் சோசலிச கட்சியுடன் இணைந்தது.[1][5]

குறிப்புகள் தொகு

  1. 1.0 1.1 சந்திரா, பிபான் மற்றும் பலர் (2000). இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு 1947-2000, புது தில்லி: பெங்குயின் புத்தகங்கள்,
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-06-28. பார்க்கப்பட்ட நாள் 2019-04-16.
  3. "Archived copy". Archived from the original on 18 December 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-12-18.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2011-09-04. பார்க்கப்பட்ட நாள் 2019-04-16.
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-10-21. பார்க்கப்பட்ட நாள் 2019-04-16.