கும்பாரிய சமணக் கோயில்கள்

கம்பாரிய சமணக் கோயில்கள் (Kumbharia Jain temples), 5 சமணக் கோயில்களின் தொகுப்பாகும். இவைகள் இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் பனஸ்கந்தா மாவட்டத்திலுள்ள கும்பாரிய கிராமத்தில் அமைந்துள்ளது.[1] கிபி 1062–1231 காலகட்டங்களில் சோலாங்கி மன்னர்கள் முதலாம் பீமதேவன், முதலாம் கர்ணதேவன் & செயசிம்ம சித்தராசன் ஆகியோரால் இக்கோயில்கள் கட்டப்பட்டு, மகாவீரர், பார்சுவநாதர், சாந்திநாதர், நேமிநாதர் மற்றும் சம்பவநாதர் ஆகியோருக்கு அர்ப்பணிக்கப்பட்டது.[2][3] இவைகள் குஜராத்-இராஜஸ்தான் கட்டிடக்கலையில் கட்டப்பட்டது.[4] கோயில் சுவர்கள் அழகிய சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளது. ஆனந்த்ஜி கல்யாண்ஜி அறக்கட்டளையால் இக்கோயில்கள் நிர்வகிக்கப்படுகிறது.

கும்பாரிய சமணக் கோயில்கள்
மகாவீரர் கோயிலின் உட்புறத் தோற்றம்
மகாவீரர் கோயிலின் உட்புறத் தோற்றம்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்கும்பாரியா, பனஸ்கந்தா மாவட்டம், குஜராத்
புவியியல் ஆள்கூறுகள்24°19′27″N 72°51′46″E / 24.32417°N 72.86278°E / 24.32417; 72.86278
சமயம்சமணம்
கம்பாரிய சமணக் கோயில்
ரோசாவடிவப் பூவணிகளல் அலங்கரிப்பட்ட மகாவீரர் கோயில் மேற்கூரைகள், ஆண்டு 1062

இதனையும் காண்க தொகு

அடிக்குறிப்புகள் தொகு

ஊசாத்துணை தொகு

நூல்கள் தொகு

இணையம் தொகு