சியா-உல்-ஹக்
ஜெனரல் முகமது சியா-உல்-ஹக் (உருது: محمد ضیاءالحق) (1924 ஆகத்து 12 – 1988 ஆகத்து 17) பாக்கித்தான் நாட்டின் அரசுத்தலைவராக சூலை 1977 முதல் ஆகத்து1988 வரையில் ஆட்சி புரிந்தவர்.[1] 1976-ஆம் ஆண்டில் அந்நாட்டின் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட இவர் 1977 ஆம் ஆண்டு சூலை 5 ஆம் நாள் இரத்தம் சிந்தா இராணுவப் புரட்சி மூலம் அன்றைய பிரதம மந்திரி சூல்பிகார் அலி பூட்டோ தலைமையிலான அரசைக் கவிழ்த்து ஆட்சிக்கு வந்து இராணுவச் சட்டத்தைக் கொண்டு வந்தார். செப்டம்பர் 1978 இவர் நாட்டின் அதிபரானார்.
முகமது சியா-உல்-ஹக் | |
---|---|
![]() | |
பாகிஸ்தானின் 6வது ஜனாதிபதி | |
பதவியில் 16 செப்டம்பர் 1978 – 17 ஆகஸ்ட் 1988 | |
பிரதமர் | முகமது கான் ஜுனேஜோ |
முன்னையவர் | பசால் இலாஹி சௌத்திரி |
பின்னவர் | குலாம் இஷாக் கான் |
பாகிஸ்தானின் 8வது இராணுவத் தளபதி | |
பதவியில் 11 அக்டோபர் 1976 – 17 ஆகஸ்ட் 1988 | |
முன்னையவர் | டிக்கா கான் |
பின்னவர் | மிர்சா அஸ்லாம் பெக் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 12 ஆகஸ்ட் 1924![]() |
இறப்பு | 17 ஆகஸ்ட் 1988 (அகவை 64) பகவல்பூர், பஞ்சாப், பாகிஸ்தான் |
அரசியல் கட்சி | இராணுவம் |
சமயம் | வஹாபி, இஸ்லாம் |
இவர் 1988-ஆம் ஆண்டு ஆகத்து 17-இல் இடம்பெற்ற சந்தேகத்துக்கிடமான வானூர்தித் தீநேர்வு (விபத்து) ஒன்றில் இவருடன் பயணம் மேற்கொண்ட ஐக்கிய அமெரிக்க தூதர் ஆர்னல்ட் ராஃபெல்லுடன் சேர்ந்து கொல்லப்பட்டார்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Sharma, Sant Kumar (2024-09-12). "July 1977 to August 1988: General Zia's legacy of radicalisation lives on in Pakistan". Chintan (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2025-03-31.