சியா-உல்-ஹக்

ஜெனரல் முகமது சியா-உல்-ஹக் (உருது: محمد ضیاءالحق) (1924 ஆகத்து 12 – 1988 ஆகத்து 17) பாக்கித்தான் நாட்டின் அரசுத்தலைவராக சூலை 1977 முதல் ஆகத்து1988 வரையில் ஆட்சி புரிந்தவர்.[1] 1976-ஆம் ஆண்டில் அந்நாட்டின் இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட இவர் 1977 ஆம் ஆண்டு சூலை 5 ஆம் நாள் இரத்தம் சிந்தா இராணுவப் புரட்சி மூலம் அன்றைய பிரதம மந்திரி சூல்பிகார் அலி பூட்டோ தலைமையிலான அரசைக் கவிழ்த்து ஆட்சிக்கு வந்து இராணுவச் சட்டத்தைக் கொண்டு வந்தார். செப்டம்பர் 1978 இவர் நாட்டின் அதிபரானார்.

முகமது சியா-உல்-ஹக்
பாகிஸ்தானின் 6வது ஜனாதிபதி
பதவியில்
16 செப்டம்பர் 1978 – 17 ஆகஸ்ட் 1988
பிரதமர்முகமது கான் ஜுனேஜோ
முன்னையவர்பசால் இலாஹி சௌத்திரி
பின்னவர்குலாம் இஷாக் கான்
பாகிஸ்தானின் 8வது இராணுவத் தளபதி
பதவியில்
11 அக்டோபர் 1976 – 17 ஆகஸ்ட் 1988
முன்னையவர்டிக்கா கான்
பின்னவர்மிர்சா அஸ்லாம் பெக்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு12 ஆகஸ்ட் 1924
ஜலந்தர், இந்தியா
இறப்பு17 ஆகஸ்ட் 1988 (அகவை 64)
பகவல்பூர், பஞ்சாப், பாகிஸ்தான்
அரசியல் கட்சிஇராணுவம்
சமயம்வஹாபி, இஸ்லாம்

இவர் 1988-ஆம் ஆண்டு ஆகத்து 17-இல் இடம்பெற்ற சந்தேகத்துக்கிடமான வானூர்தித் தீநேர்வு (விபத்து) ஒன்றில் இவருடன் பயணம் மேற்கொண்ட ஐக்கிய அமெரிக்க தூதர் ஆர்னல்ட் ராஃபெல்லுடன் சேர்ந்து கொல்லப்பட்டார்.

மேற்கோள்கள்

தொகு
  1. Sharma, Sant Kumar (2024-09-12). "July 1977 to August 1988: General Zia's legacy of radicalisation lives on in Pakistan". Chintan (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2025-03-31.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Muhammad Zia-ul-Haq
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சியா-உல்-ஹக்&oldid=4242367" இலிருந்து மீள்விக்கப்பட்டது